Thursday, December 13, 2012

உலகத்தை சிவப்பாக்கும் ஈரானின் குங்குமப்பூ


உலகத்தை சிவப்பாக்கும் ஈரானின் குங்குமப்பூ

ஈரானின் குங்குமப்பூ உலகளவு புகழ் பெற்றது. அங்கிருந்து சுமார் 30 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. யுனைடெட் அரபு நாடுகள், ஸ்பெயின், சைனா, ஜெர்மனி, இத்தாலி, தைவான், சுவிடன், சவுதி அரேபியா, ஹாங்காங், இந்தியா ஆகியவை முக்கியமானவை ஆகும். இந்த நாடுகள் எல்லாம் கலரைப் பற்றிக் கவலைப்படும் நாடுகள் ஆகும். மேலும் உணவுப் பொருளாகவும் உபயோகப்படுத்தபடுகிறது. 

Wednesday, December 12, 2012

வாழைப்பழ டிரெயின்


வாழைப்பழ டிரெயின்

கேரளாவிலிருந்து ஒரு முழு டிரெயின் முழுவதும் பழங்கள் குறிப்பாக வாழைப்பழம், காய்கறிகள் ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு செல்கிறது. வட இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இது போன்ற டிரெயின்கள் விடப்படுகின்றன. வரும் டிரெயின்களில் பைனாப்பிளும் செல்லும். கேரளாவிற்கு ஆட்கள் செல்வதற்கு டிரெயின் டிக்கெட் எடுப்பதற்குள் தாவு கழண்டு விடும். காய்கறிகள், பழங்கள் கொடுத்து வைத்தவை, நசுங்காமல் செல்கின்றன.

Thursday, December 6, 2012

5000 வெளிநாட்டுக் கம்பெனிகளை கவர்ந்த இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி


5000 வெளிநாட்டுக் கம்பெனிகளை கவர்ந்த இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி

சமீபத்தில் நொய்டாவில் 4 நாட்கள் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. கண்டுகளித்தவர்களில் 5000 வெளிநாட்டு கம்பெனிகளும் அடங்கும் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. ஏனெனில் இவைகளில் பாதியளவு பிசினசாக மாறும் வாய்ப்புள்ளது. இந்தக் கண்காட்சி மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் பிசினஸ்  நடந்திருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற பெரிய கண்காட்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாவிடினும், உங்கள் வியாபாரத்தின் தொடக்கம் சிறிய கண்காட்சிகளில் இருந்து தொடங்கட்டும்.

முடியும் ஏற்றுமதியாகிறது


முடியும் ஏற்றுமதியாகிறது

இந்தியாவில் தலைமுடிகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஆந்திராவில் எலுருவில் உள்ள சீனிவாசா ஹேர் இண்டஸ்டீரிஸ்  என்ற கம்பெனி தான் செய்து வருகிறது. சரி, எதற்காக வெளிநாடுகளில் முடிகளை வாங்குகிறார்கள். விக்குகள் தயாரிக்க, மேலும் தலைமுடியிலிருந்து ஒருவித அமிலம் கிடைக்கிறது அதை தயாரிக்கவும் இறக்குமதி செய்கிறார்கள்.

Monday, December 3, 2012

இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்தியாவின் வளர்ச்சியில் எஸ்.எம்.ஈ. கம்பெனிகள் பெரும் பங்காற்றுகின்றன. இவர்களுக்கு உதவும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான் மேலே கண்ட இணையதளம். 500,000 பிசினஸ  லிஸ்டிங்களுக்கு மேல் உள்ளது. மேலும், டெண்டர்கள், பி2பி கம்யூனிட்டி, பிசினஸ  ஆர்ட்டிகல்ஸ், உங்கள் கேள்விகளுக்கு பதில் என்று அவர்களின் சேவை நீண்டு கொண்டே போகிறது. 600 டிராப்ட் அக்ரிமெண்ட்கள் வேறு இருக்கிறது. இந்த இணையதளத்தை தமிழிலும் மாற்றி படிக்கலாம். வேறு என்ன வேண்டும் உங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய? இன்றே செல்லுங்கள் இந்த இணையதளத்திற்கு, பயன் பெறுங்கள்.

Saturday, December 1, 2012

பாவா மூப்பன்


பாவா மூப்பன்

கேரளாவில் திரூர் என்ற ஊரிலிருக்கும் 65 வயது முதியவர் பாவா மூப்பன் என்பவர் காலையில் எழுந்தவுடன் தினசரி அன்றைய பேப்பர்களில் பார்ப்பது என்ன தெரியுமா பாகிஸதான் சம்பந்தப்பட்ட நல்ல, கெட்ட செய்திகளைத் தான். ஏனெனில் அவர் வாரம்
5 டன் வெற்றிலையை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து அதிக அளவு பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்பவர் இவர் தான். இவரிடமிருந்து இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று இந்த வயதிலும் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது, இரண்டாவது இரண்டு நாடுகளுக்கிடையே ஆன செய்திகளை தெரிந்து கொள்வதில் காட்டும் முக்கியத்துவம். 
செய்திகள் மிகவும் முக்கியம். பாகிஸ்தானில் ஏதாவது பிராபளம் என்றால் அந்த வாரம் வெற்றிலை ஏற்றுமதி குறைந்து விடும், அதை என்ன செய்வது என்று அவர் யோசிக்க வேண்டும். 

தேங்காயும் ஏற்றுமதி ஆகிறது


தேங்காயும் ஏற்றுமதி ஆகிறது 

தமிழ்நாட்டில் தேங்காய் வியாபாரத்தில் முக்கிய இடம் பிடிப்பது பொள்ளாச்சி அதன் சுற்றுப்புறங்கள் தாம். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் லட்சக்கணக்கான தேங்காய்கள் செல்கின்றன. சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், வனவாசி ஆகிய இடங்களிலும் தேங்காய் மொத்த வியாபாரம் படு ஜோராக நடக்கிறது.

Thursday, November 29, 2012

விவசாய விளைப்பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்தவர்கள்

விவசாய விளைப்பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்தவர்கள்

பியோ (FIEO) வில் தங்களைப் பதிவு செய்து கொண்டு சென்ற வருடம் அதிக அளவில் விவசாய விளைபொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்த சிறிய அளவு கம்பெனியைச் சேர்ந்தவர்கள், அதாவது எம்.எஸ்.எம்.ஈ., கம்பெனி வகையையில் உள்ளவர்கள் டெல்லியைச் சேர்ந்த பிஷன் சரூப் ராம் எக்சிம் அக்ரோ பிரைவேட் லிமிடெட், மும்பையைச் சேர்ந்த சோப்ரிவாலா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த எக்சிம் ராஜாத்தி இந்தியா பிரைவேட் லிமிடெட், கர்நாடகாவைச் சேர்ந்த போலா சுரேந்திர காமத் அன்ட் சன்ஸ, இந்தூரைச் சேர்ந்த ஆதர்ஷ் குளோபல் பிரைவேட் லிமிடெட், கர்நலை சேர்ந்த ஆர் பி பாஸ்மதி ரைஸ லிமிடெட் ஆகிய கம்பெனிகள் ஆகும்.

பெரிய அளவில் டெல்லியின் அமிரா புட்ஸ இந்தியா லிமிடெட், கொல்கொத்தாவின் எல்.எம்.ஜே. இண்டர்நேஷனல் லிமிடெட், மும்பையின் டி.கே.வி. மார்க்கெட்டிங் இந்தியா பிரைவெட் லிமிடெட், கொல்கத்தாவின் ஏசியன் டீ அன்ட் எக்ஸபோர்ட்ஸ லிமிடெட், இந்தூரின் சுரஜ் இம்பெக்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட், டெல்லியின் எம்சென்ஸ் இன்டர்நேஷன்ல் லிமிடெட் ஆகும்.

இது பியோவில் உறுப்பினராக உள்ளவர்களில் அதிகம் அளவு செய்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

பிராஸ் பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?


கலையரசி
சேலம்

கேள்வி

பிராஸ்  பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?

பதில்
குஜராத்தில் உள்ள ஜாம்நகர் என்ற ஊரில் 5000 சிறிய, பெரிய பிராஸ்  கம்பெனிகள் இருக்கிறது. எல்லா வகையான பிராஸ்  பொருட்களையும் மொத்தமாக வாங்க சிறந்த இடம்.

பிராஸ் பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?


கலையரசி
சேலம்

கேள்வி

பிராஸ்  பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?

பதில்
குஜராத்தில் உள்ள ஜாம்நகர் என்ற ஊரில் 5000 சிறிய, பெரிய பிராஸ்  கம்பெனிகள் இருக்கிறது. எல்லா வகையான பிராஸ்  பொருட்களையும் மொத்தமாக வாங்க சிறந்த இடம்.

Tuesday, November 6, 2012

நாங்கள் ஏற்றுமதி பொருட்களை தயாரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இ.பி.சி.ஜி. டியூட்டி சலுகை ஸகீம் மூலமாக இறக்குமதி செய்திருந்தோம்.


கேள்வி பதில்

ராஜேந்திரன்
கோயமுத்தூர்


கேள்வி

நாங்கள் ஏற்றுமதி பொருட்களை தயாரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இ.பி.சி.ஜி. டியூட்டி சலுகை ஸகீம் மூலமாக இறக்குமதி செய்திருந்தோம். ஆனால் எங்களால் ஏற்றுமதி செய்ய இயலவில்லை. அந்த மெஷின்களை வேறு ஒரு இ.ஒ.யு. (எக்ஸ்போர்ட்   ஓரியன்டட்  யூனிட்)  கம்பெனி வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறது. விற்க இயலுமா?


பதில்
இ.பி.சி.ஜி. ஸ்கீம் மூலமாக இறக்குமதி செய்வதன் பலன் டியூட்டி சலுகை தான். ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அந்த மெஷினரியை உபயோகித்து இறக்குமதி டியூட்டி மதிப்பை விட எட்டு மடங்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது தான் விதி. நீங்கள் விற்க நினைப்பது வேறு ஒரு எக்ஸபோர்ட் ஓரியண்டட் யூனிட் தாராளமாக விற்கலாம். ஆனால் அப்ரூவல்கள் வாங்கித் தான் செய்ய முடியும்.

Monday, November 5, 2012

டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


 
டைம்ஸ்  ஆப்  இந்தியாவின்  ஏற்றுமதிக்கு ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

டைம்ஸ ஆப் இந்தியாவின் இணையதளம். இது உங்களது உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி இறக்குமதியை கூட்டுவதற்கு உதவும்.
மேலும், டெண்டர்கள் பற்றிய விபரங்கள், டைரக்டரிகள் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. சென்று பாருங்கள் நல்ல உபயோகமான இணையதளம். 

Friday, November 2, 2012

ஏற்றுமதியில் சிறந்து விளங்குபவர்கள்


ஏற்றுமதியில் சிறந்து விளங்குபவர்கள்

கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் சிறிய அளவு பிரிவில் சிறந்து விளங்குபவர்கள் மைசூரைச் சேர்ந்த் என்.ரெங்காராங் அன் சன்ஸ், ஜெய்ப்பூரை சேர்ந்த சங்கல்ப் இண்டர்நேஷனல், பதோகியைச் சேர்ந்த ரூபேஷ்குமார் அன்டு பிரதர்ஸ், மொராதாபாத்தை சேர்ந்த டிசைன்கோ என்ற கம்பெனிகள் ஆகும்.

பெரிய அளவில் செய்பவர்களில் டெல்லியை சேர்ந்த சி.எல். குப்தா எக்ஸ்போர்ட்ஸ்  லிமிடெட் என்ற கம்பெனியாகும். என்ன தமிழ்நாட்டுக் கம்பெனிகளைத் தேடுறீங்களா? அது உங்க கம்பெனியாகக் கூட இருக்கக்கூடும், கடுமையாக உழையுங்கள்.

ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது? பர்சுக்கு நல்லதா?



ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது? பர்சுக்கு நல்லதா?

ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள். ஆப்பிள் இல்லாத வீடே இருக்காது என்ற அளவிற்கு வாங்கித் தள்ளுகிறோம். இதற்கு ஒரு உதாரணம் வேண்டுமா? அமெரிக்கா ஆப்பிளுக்கு பெயர் போனது என்று தெரியும். அங்குள்ள வாஷிங்டனிலிருந்து சென்ற வருடம் மட்டும் 40,00,000 பாக்ஸ ஆப்பிள்கள் இறக்குமதி செய்துள்ளோம். 
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் டாக்டரிடமே செல்ல வேண்டாம் என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு ஆப்பிள் விலை 30 ரூபாயை எட்டிவிட்டதால், ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால் மாதம் ரூபாய் 900 வந்து விடுகிறது. தற்போதைய பழமொழி என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதை விட தொந்தரவு வரும் போது டாக்டரிடம் செல்வதே மேல் என்பது தான். ஒரு ஜோக் தான்,சீரியசாக நிறுத்தி விடாதீர்கள். 

Thursday, November 1, 2012

ஆப்பிரிக்க நாட்டு ஆர்டர்களா, உஷார்


ஆப்பிரிக்க நாட்டு ஆர்டர்களா, உஷார்

எப்படியாவது ஏற்றுமதி செய்து விட வேண்டும் என்று பலரும் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல வருவது ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஆர்டர்கள் தாம். ஆனால் இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேல் போலியானவை. உங்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலை தான். ஆதலால் ஆப்பிரிக்க நாடுகளின் ஆர்டர்கள் என்றால் கவனமாக இருங்கள். பெரிய ஆர்டராக இருக்கும், உடனடியாக காண்டிராக்ட் கையெழுத்திட்டு அனுப்புங்கள் என்று கூறுவார்கள். பின்னர் உங்களிடமிருந்து அதற்கு இதற்கு என்று பணம் பறிக்க முயலுவார்கள். ஆதலால் கவனமாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியத் இரண்டு. ஒன்று அந்த இறக்குமதியாளரைப் பற்றிய ஒப்பினியன் ரிப்போர்ட் எடுப்பது (ஏற்றுமதி செய்து தான் தீருவேன் என்று முடிவு எடுத்துவிட்டால்), இரண்டாவது பணம் ஏதும் நீங்கள் அனுப்பாமல் இருப்பது. 

Saturday, October 20, 2012

எங்களது வெளிநாட்டு கம்பெனி நாங்கள் இந்தியாவிற்குள் அவர்கள் சொல்லும் கம்பெனிக்கு சப்ளை செய்வதற்காக எங்களுக்கு பாரின் கரன்சியாக பணத்தை அனுப்ப இயலுமா? அதை நாங்கள் ஏற்றுமதி வரவு என்று எடுத்துக் கொள்ள இயலுமா?


ஏற்றுமதி கேள்வி பதில்

ராமசுப்ரமணியன்
கோவை


கேள்வி

இந்தியாவில் ஒரு கம்பெனி வெளிநாட்டில் இருந்து சரக்குகளை ஆர்டர் செய்துள்ளது.  அந்த வெளிநாட்டுக் கம்பெனிக்கு இந்தியாவில் தொழிற்சாலை இருப்பதால், அந்த தொழிற்சாலையை இந்தியாவிலிருந்து வாங்கும் கம்பெனிக்கு சப்ளை செய்யச் சொல்கிறது. வெளிநாட்டு கம்பெனிக்கு இந்திய கம்பெனி வெளிநாட்டு பணமாக அனுப்பி விடும். எங்களது வெளிநாட்டு கம்பெனி நாங்கள் இந்தியாவிற்குள் அவர்கள் சொல்லும் கம்பெனிக்கு சப்ளை செய்வதற்காக எங்களுக்கு பாரின் கரன்சியாக பணத்தை அனுப்ப இயலுமா? அதை நாங்கள் ஏற்றுமதி வரவு என்று எடுத்துக் கொள்ள இயலுமா?


பதில்
கடினமான கேள்வி. இரண்டு முறை படித்தால் தான் புரியும். பதில் சுலபம். நீங்கள் சரக்குகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யாததால் அதை நீங்கள் ஏற்றுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது. உங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதில் தப்பில்லை. ஆனால் அதை ஏற்றுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டாவது இந்தியாவில் உங்களிடமிருந்து பொருட்கள் வாங்கும் கம்பெனியும் பாரின் கரன்சியை அனுப்ப நினைப்பதால் (சரக்குகளை  இந்தியாவில் இருந்து வாங்கிக்கொண்டு) ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவேண்டும்.

Wednesday, October 17, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


உலகளவில் நடைபெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சம்பந்தபட்ட கண்காட்சி வரும் வருடம் பிப்ரவரி மாதம் 6 முதல் 8 வரை பெர்லினில் நடைபெறவுள்ளது. இதில் உலகளவிலிருந்து 2400 ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Monday, October 15, 2012

வாழைப்பழம் நமக்கு ஜோக்கிற்கு மட்டுமே பயன்படுகிறது


வாழைப்பழம் நமக்கு ஜோக்கிற்கு மட்டுமே பயன்படுகிறது 

வாழைப்பழம் நமக்கு ஜோக்காக மட்டுமே இருந்து வருகிறது. அதைப் பற்றிய சில உண்மைகள். உலகளவில் 100 பில்லியன் வாழைப்பழங்கள் வருடந்தோறும் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒரு பில்லியன் என்பது 100 கோடி, அதாவது 10000 கோடி வாழைப்பழங்கள். பார்த்து வழுக்கி விடுந்து விடாதீர்கள். அதாவது கோதுமை, அரிசி, கார்ன் ஆகியவைகளுக்கு அடுத்ததாக உற்பத்தி மற்றும் உபயோகத்தில் இருக்கிறது. இந்தியாவிலும் அதிக அளவு வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறடு, ஆனால் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் கவன்டிஸ என்ற வகை வாழைப்பழங்களை இந்தியாவில் அதிகம் நாம் உற்பத்தி செய்வதில்லை என்பது தான்.

Saturday, October 13, 2012

தமிழ்நாட்டில் 50 இடங்களில் குளிர்சாதன கிடங்குகள்


தமிழ்நாட்டில் 50 இடங்களில் குளிர்சாதன கிடங்குகள்

தமிழ்நாட்டில் பலரும் பல காலமாக எதிர்பார்த்த ஒன்று நடக்கப்போகிறது. விவசாய விளைப் பொருட்களை பாதுக்காக்க, அதற்கு நல்ல விலை கிடைக்க நல்ல குளிர்சாதன கிடங்குகள் தேவை. தனியார் நிறுவனங்கள் இவற்றை பெரிய அளவில் செய்ய இயலாது. ஏனெனில் அவர்கள் வசூலிக்கும் கட்டணம் விவசாயிகளுக்கு கட்டாது. ஆதலால் அரசாங்கத்தையை இதற்கு நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. இதன் தேவையை உணர்ந்த தமிழ்நாடு அரசாங்கம் தற்போது தமிழ்நாட்டில் 50 இடங்களில் குளிர்சாதன கிடங்குகளை அமைக்கவுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இது வழி செய்யும்.

Friday, October 5, 2012

ஆயத்த ஆடை ஏற்றுமதி கண்காட்சிகள்


ஆயத்த ஆடை ஏற்றுமதி கண்காட்சிகள்

ஆயத்த ஆடைகளுக்கு முக்கியமான மார்க்கெட் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தான். இவை தற்போது பொலிவிழந்து காணப்படுவதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனம்,  கொலம்பியா, பனாமா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 

Thursday, October 4, 2012

சீனா வாங்குபவரா? போட்டியாளரா?



சீனா வாங்குபவரா? போட்டியாளரா?

இதுவரை தோல் பொருட்கள் தொழிலைப் பொறுத்த வரை இந்தியாவிற்கு போட்டியாக சீனாவும் இருந்து வந்தது. அங்கு புரடக்ஷன் செலவுகள் அதிகமாகி வருவதாலும், தொழிலாளர்களின் சம்பளங்கள் கூடி வருவதாலும் இந்தியாவில் இருந்து தோல் பொருட்களை பெருமளவில் சீனா வாங்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஷாங்காய்  லெதர் கண்காட்சியில் இந்திய லெதர் கார்மெண்ட்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. இந்தியாவின் லெதர் தொழிலில் முக்கியமான தமிழ்நாடும் ஆள் பற்றாக்குறையினால் தடுமாறுகிறது.

Wednesday, October 3, 2012

இ.சி.சி.ஜி. ஏற்றுமதி ஸ்கோர் கார்டு


இ.சி.சி.ஜி. ஏற்றுமதி  ஸ்கோர் கார்டு 

இ.சி.சி.ஜி. அதாவது எக்ஸ்போர்ட் கிரிடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் நமது ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் விதமாக வெளிநாட்டில் இருந்து நம் நாட்டவர்களிடம் சரக்குகளை இறக்குமதி செய்யும் 90,000 ஆக்டிவ் இறக்குமதியாளர்களை பற்றிய ரேட்டிங் பற்றிய தகவல்களை வைக்க  ஸ்கோர்  கார்ட் தயார் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி பற்றி நினைப்பவர்கள் இ.சி.சி.ஜி. பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது, இது முக்கியம்.

கடந்த வருடம் இந்த நிறுவனம் 713 கோடி ரூபாய்களை கியாரண்டி பணமாக கொடுத்துள்ளது. அதிகம் க்ளயம் வரும் செக்டார்கள் அக்ரிகல்ச்சர், ஜுவல்லரி, ரெடிமேட் கார்மெண்ட்ஸ், காட்டன், எஞ்சினியரிங் சாமான்கள். அதிகம் க்ளயம் வரும் நாடுகள் அமெரிக்கா, யு.கே., யு.ஏ.ஈ., ஜெர்மனி மற்றும் இத்தாலி.

Monday, October 1, 2012

வெளிநாட்டு காய்கறிகளை இறக்குமதி செய்து இங்கு விற்க இயலுமா?


கேள்வி பதில்

ராமநாதன் 
திண்டுக்கல்


கேள்வி
வெளிநாட்டு காய்கறிகளை இறக்குமதி செய்து இங்கு விற்க இயலுமா?

பதில்
கட்டாயம் விற்க இயலும். இவைகளுக்கு இந்தியாவில் ஹோட்டல்களில் அதிக அளவு தேவை இருக்கிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு தங்கி பணிபுரிபவர்கள் வாங்குவதும் நடைபெறுகிறது. ஆதலால், இறக்குமதி செய்து விற்கலாம். இது தவிர வெளிநாட்டு காய்கறிகளான அஸ்பரகாஸ், பிட்டர் லெமன், ப்ராக்கொலி, எக்சாடிக் பெப்பர், சுச்சினி ஆகியவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இது தவிர மால்களிலும் அதிகம் வாங்கப்படுகிறது. 20 அக்ரிகல்ச்சர் கிராஜுவேட்கள் சேர்ந்து செய்ய இது ஒரு நல்ல தொழில்.

Sunday, September 30, 2012

உலகளவிலான ஏற்றுமதி கண்காட்சி



உலகளவிலான ஏற்றுமதி கண்காட்சி

இந்திய ஆசிய வர்த்தக கண்காட்சி வருகிற டிசம்பர் மாதம் 18 முதல் 20ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, புருனை, கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, மியன்மார் (பர்மா), பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவிருக்கின்றன. இதில் ஆட்டோமொபைல்ஸ், கெமிக்கல்ஸ், பிளாஸ்டிக், கன்ஸ்டிரக்ஷன், ஜெம் அண்ட் ஜுவல்லரி, விவசாய்ம், புட் புராசசிங், டெக்ஸ்டைல்ஸ் , ஹாண்டிகிராப்ட்ஸ், ஹெல்த்கேர், ஆயுர்வேதா ஆகியவை சம்பந்தப்பட்ட பொருட்களின் வர்த்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. பையர் செல்லர் மீட்டிங், பி2பி மீட்டிங் ஆகியவைகளும் நடைபெறவுள்ளது. மேலும் விபரவங்களுக்கு மேலே கண்ட இணையதளத்தை சென்று பாருங்கள்.

பார்சல்களை குளிருட்டப்பட்ட வாகனத்தில் அனுப்ப


பார்சல்களை குளிருட்டப்பட்ட வாகனத்தில் அனுப்ப


பல சமயம் பொருட்கள் கெட்டுவிடாமல் இருக்க குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அனுப்பவேண்டும். அல்லது குளிரூட்டப்பட்ட வாகனங்களில் அனுப்பப்படவேண்டும். பல வாகன சேவை நிறுவனங்களில் இந்த வசதிகள் இருப்பதில்லை. போருக்காஸ்  லாஜிஸ்டிக்ஸ்  என்ற கம்பெனி கூல் எக்ஸ்  என்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பார்சல்களை குளிரூட்டப்பட்ட வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவதற்கான வசதிகள் உள்ளது. மேலும், கோல்டு ஸ்டோரேஜ்  போன்ற வசதிகளும் இருக்கிறது.

Saturday, September 29, 2012

பாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி விலக்கு


பாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி விலக்கு

பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் அதிக அளவு பாசுமதி ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாகும். அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசிக்கு இதுவரை 3 சதவீதம் இன்பிரா டெலலப்மெண்ட் வரி இருந்தது. அதை தற்போது ரத்து செய்து இருக்கிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் உலகளவில் விற்கும் போது விலைகளை போட்டியாக வைத்து விற்க ஏதுவாக இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி இல்லை. ஆனால் ஏற்றுமதியாளர்கள் வட மாநிலங்களில் இருந்து தான் வாங்கி ஏற்றுமதி செய்கிறார்கள்.

Thursday, September 27, 2012

அண்ணாச்சி கடையா? இல்லை அம்பானி கடையா?


அண்ணாச்சி கடையா?  இல்லை அம்பானி கடையா?

உங்க வீடு எங்க இருக்கு என்ற கேள்விக்கு அடுத்த வருடம் பதில் எப்படி இருக்கும் தெரியுமா? மும்பையில காட்கோபர்ல வால்மார்ட் தெரியுமா? அட என்ன யோசிக்கிற? அதுக்கு பக்கத்துல இருக்கிற டெஸ்கோவாவது தெரியுமா? இந்த சூப்பர் மார்க்கெட் இரண்டுக்கும் நடுவில் இருக்கது தான் எங்கள் வீடு என்று சொல்லும் தொலைவு நாள் அதிக தூரத்தில் இல்லை. வீடு விலையும் ஏறும், அண்ணாச்சி கடையை விட பொருட்களை சிறிது விலை குறைவாகத் தரலாம். ஆனால், இது சிறிய வியாபாரிகளை பாதிக்கும். இது போன்ற வெளிநாட்டு கடைகள் தங்கள் வாங்கும் பொருட்களை இந்தியாவில் இருக்கும் குறந்தொழில் மற்றும் சிறுதொழில் செய்பவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 50 சதவீதமாவது வாங்க வேண்டும் என்ற வகையில் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டால் நல்லது. அதற்கு தகுந்தாற் போல் நமது சிறு உற்பத்தியாளர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.  

Wednesday, September 26, 2012

நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி கூடுமா?


நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி கூடுமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டையில் 95 சதவீதம் நாமக்கல்லில் இருந்து தான் செய்யப்படுகிறது. இந்தியாவில் பறவை நோய் இருந்ததால்  இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன்  நாடு தடை விதித்திருந்தது. இந்தியாவிலிருந்து மாதத்திற்கு சுமார் 5 கோடி முட்டைகள் முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது 2 கோடியாக குறைந்து, ஆச்சரியமாக ஜுன் மாதம் 89 லட்சமாகவும் குறைந்தது. ஓமன் நாடு  தனது இறக்குமதியில் 33 சதவீதத்தை இந்தியாவிலிருந்து செய்வதால் இனி ஏற்றுமதி கூடும் என எதிர்பார்க்கலாம். ஒரு கன்டெய்னரில் 4.72 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யலாம். ஆப்கானிஸதானுக்கும் அதிக அளவில் நாம் முட்டைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். நாமக்கல் முட்டைகளை அதிக அளவில் விரும்பக் காரணம் என்ன தெரியுமா? அவற்றில் அதிக அளவு மஞ்சள் தன்மை இருப்பதால் தான். 

Tuesday, September 25, 2012

இந்தியாவில் கார்பெட் உல் எங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது? தமிழ்நாடு எங்கு இருக்கிறது?



கேள்வி பதில்
ரமாமணி
ஊட்டி


கேள்வி
இந்தியாவில் கார்பெட் உல் எங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது? தமிழ்நாடு எங்கு இருக்கிறது?


பதில்
அதிகமாக ராஜஸ்தானிலும், அடுத்ததாக ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் ஆகியவை வருகின்றன. தமிழ்நாடு கடைசியில் தான் இருக்கிறது. இது தவிர கார்பெட்டுக்கான உல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. 

Sunday, September 23, 2012

பழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்


இணையதளம்

பழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்
 
வெளிநாடுகளில் பழங்கள், காய்கறிகளை பாக்கேஜிங் செய்து டிஸ்பிளேயில் வைத்துள்ளதை பார்க்கும் போதே வாங்கவேண்டும் என்று தோன்றும். அது போல எப்படி பாக்கேஜிங் செய்வது என்று பலரும் பல சமயத்தில் யோசித்திருக்கலாம். www.stepac.com என்ற இணையதளத்தை சென்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியமான பல தகவல்கள் கிடைக்கும்.

கனடாவில் லெதர் பொருட்கள் கண்காட்சி

கனடாவில் லெதர் பொருட்கள் கண்காட்சி


இந்திய லெதர் பொருட்கள் கண்காட்சி கனடாவில் உள்ள மாண்டிரியலில் அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் நடக்கவுள்ளது. இதில் லெதர் கார்மெண்ட்ஸ், லெதர் காலணிகள், காலணிகளுக்கான பாகங்கள், லெதர் கைப்பைகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்படும். இந்தியாவிலிருந்து 25 ஏற்றுமதியாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்தியா உலகத்திலேயே லெதர் காலணிகள் தயாரிப்பில் இரண்டாவது இடத்தையும், லெதர் உடைகளில் மூன்றாவது இடத்தையும், லெதர் அக்சசரிஸ்  தயாரிப்பில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Friday, September 21, 2012

பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?


பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

ஒரு காலத்தில் வீடுகளில் கிணற்றடியில் வைக்கப்படும் செடியாக இருந்தது பப்பாளி. தற்போது மக்களின் அன்றாட உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி சாகுபடியை முழுநேரத் தொழிலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவில் தற்போது செய்து வருகின்றனர். 2006-07 வருடத்தில் இந்தியாவில் 2,482,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது 2010-11ம் ஆண்டில் 4,196,000 டன்களாக உயர்ந்திருக்கிறது. அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் குஜராத், அடுத்து ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகியவை ஆகும். தமிழ்நாட்டின் பங்கு இந்தியாவின் உற்பத்தியில் 2.5 சதவீதம் தான். ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் பதில் அதிகம் இல்லை என்பது தான். ஏனெனில் பெருமளவில் உள்நாட்டிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது.

Thursday, September 20, 2012

டூப்ளிகேட் பொருட்கள், இறக்குமதியளர்களே உஷார்


டூப்ளிகேட் பொருட்கள், இறக்குமதியளர்களே உஷார் 

உலகத்திலேயே டூப்ளிகேட் பொருட்களுக்கான மார்க்கெட்டில் மிகவும் பிரபலமானது சில்க் ஸ்டீரிட், பீஜிங், சைனா (போலி கன்சுயூமர், இண்டஸ்டிரியல் ப்ராடக்ஸ்), சைனா சுமால் கமாடிட்டிஸ்  மார்க்கெட், யிவுயு, சைனா (சிறிய கன்சுயூமர் ப்ராடக்ஸ்), கார்புஸ்கா, மாஸ்கோ, ரஷ்யா (கன்சுயூமர் எலக்ட்ரானிக்ஸ்  மார்க்கெட்), ருபின் டிரேட் சென்டர், மாஸ்கோ, ரஷ்யா போன்றவை ஆகும். இவையெல்லாம் ஒப்பிடும் போது மும்பை உல்லாஸ்நகர் மார்க்கெட் மிகவும் சிறியது. 

பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ்


பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ் 

கேட்கவே இனிப்பாக இருக்கிறதா? ஆமாம். இதுவரை சிப்ஸ்  போன்றவைகளை சாப்பிட்டு வேறு ஸ்நாக் வரவே வராதா? என்று நினைப்பவர்களுக்காகவே டெல் மாண்டே கம்பெனி பழங்களில் தயாரிக்கப்பட்ட ஸ்நாக் வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவ்து பப்பாளிப்பழம், மாம்பழம், அப்ரிகாட் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்நாக் இனிமேல் உங்கள் அருகில் உள்ள வால்மார்ட்டில் கிடைக்கும். என்ன வால்மார்ட் என்கிறீர்களா? அதுதான் மத்திய அரசாங்கம் சில்லறை விற்பனையில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விட்டதே? ஏன் இந்திய இளைஞர்களும் இது போன்று சிந்தித்து பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ தயாரிக்க, விற்பனை செய்ய, ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யக்கூடாது?

Sunday, September 16, 2012

ஏற்றுமதியில் விவசாயம்


ஏற்றுமதியில் விவசாயம்
ஏற்றுமதி இறக்குமதி 
இன்றைய இளைஞர்கள் பலர் விவசாயம் என்றாலே காத தூரம் ஓடி விடுகின்றனர். தந்தை விவசாயத்தில் இருந்தாலும் மகன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்களும், அப்பா ஈடுபட்டாலும் தான் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் மகன்களும் பெருகிவரும் காலம். ஏன் அக்ரிகல்ச்சர் படித்த மாணவர்களே வொயிட் காலர் வேலைக்குத் தான் செல்ல நினைக்கிறார்கள். ஆனால் சென்ற வருடம் இந்தியாவின் ஜி.டி.பி. யில் அக்ரிகல்ச்சர் தான் 14.5 சதவீதம் பங்களித்துள்ளது. மேலும், இந்தியாவின் ஏற்றுமதியில் அக்ரிகல்ச்சர் 10.5 சதவீதம் பங்களித்துள்ளது. 

இந்தியா அதிக அளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும், தண்ணீரையும் அக்ரிகல்ச்சருக்காக செலவழிக்கிறது எனவும், இதை செலவழிக்காமல் நமது நாட்டிற்கு தேவையானவைகளை அதாவது உற்பத்திக்கு மேல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும், இதனால் மிச்சப்படும் விளைநிலங்களை தொழிற்சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி இருக்குங்க?

Saturday, September 15, 2012

ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்



ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்


இந்த இணையதளம் மூலமாக பல நாடுகளின் பி2பி இணையதளங்களுக்கு செல்லும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். ஏற்றுமதிக்கு முக்கியமானது இறக்குமதியாளர்களே. ஒவ்வொரு நாட்டிற்கும் பி2பி இணையதளங்களை அமைத்து இதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும், உணவுப் பொருட்கள் சம்பந்தமாக www.foodstradingholding.comஎன்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார்கள். சென்று பாருங்கள், நல்ல இணையதளங்கள்.

எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் தரம் சரியில்லை என்று டாக்குமெண்டை இறக்குமதியளரின் வங்கி நிராகரிக்க முடியுமா? ஏற்றுமதி கேள்வி பதில்


கருப்பசாமி
கோவைப்புதூர்

கேள்வி

எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் தரம் சரியில்லை என்று டாக்குமெண்டை இறக்குமதியளரின் வங்கி நிராகரிக்க முடியுமா?
ஏற்றுமதி இறக்குமதி 

பதில்

நிச்சியமாக எல்.சி. மூலம் டாக்குமெண்ட் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை நிராகரிக்க முடியாது. அதே சமயம் சரியான, நல்ல தரமான பொருட்களை அனுப்புவது உங்கள் கடமை. அவருக்கு பொருட்களின் தரம் சரியாக இல்லாதபட்சத்தில் உங்கள் மீது வேறு வகைகளில் வழக்குகள் போடலாம். அதாவது காண்டிராக்ட் படி இல்லை என்று காண்டிராக்ட் ஆக்ட் படி உங்கள் மீது வழக்கு தொடரலாம் (பெரிய தொகையாக இருக்கும் பட்சத்தில்). எண்ணங்கள் நல்லபடியாக இருக்க வேண்டும், வியாபார தொடர்புகள் நீண்டகாலம் வேண்டும், தரமான சரக்குகளையே அனுப்ப வேண்டும், இந்தியாவின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கைகளை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Friday, September 14, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி
அருணாசலம்
அம்பத்தூர், சென்னை

ஒரு ஏற்றுமதியாளர் வருடத்திற்கு இவ்வளவு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டா?

பதில்
நல்ல கேள்வி. அப்படி கட்டுப்பாடுகள் இல்லை. சிலவகை பொருட்களுக்கு முன்பு கோட்டா இருந்தது. தற்போது அதுவும் இல்லை. தடையற்ற, எல்லையற்ற வியாபாரம் என்பது தான் தற்போது உலகத்திலுள்ள எல்லா நாடுகளின் தாரக மந்திரம். எல்லைகள் இல்லாத உலகத்தை உலக வர்த்தக மையம் கொண்டுவர நினைக்கிறது

Wednesday, September 12, 2012

மாம்பழத்திற்கு இஸ்ரேல் தொழில்நுட்பம்


மாம்பழத்திற்கு இஸ்ரேல் தொழில்நுட்பம்

விவசாயத்தில் இஸ்ரேலின் தொழில்நுட்பம் உலகறிந்தது. குஜராத் அரசாங்த்திற்கு இஸ்ரேல் மாம்பழத் தொழில்நுட்பத்தை அளிக்கவுள்ளது.  குஜராத்தில் உள்ள கிர் என்ற ஊரில் ஒரு ஹார்டிக்கல்ச்சர் சென்டர் தொடங்கவும், மாம்பழம் பயிரிட சிறந்த தொழில்நுட்பங்களையும் அளிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது போன்று வாழைப்பழம் சாகுபடி சம்பந்தமாகவும் ஒரு ஒப்பந்தம் ஏற்படவுள்ளது. மாம்பழமும், வாழைப்பழமும் தமிழ்நாட்டிலும் சிறப்பாக விளையும் பொருட்கள். மேலும், தேசிய வாழை ஆராயச்சி மையைமும் திருச்சியில் தான் உள்ளது. ஆதலால் தமிழ்நாடும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் விவசாயிகளுக்கு நன்மை தரும். ஏற்றுமதி இறக்குமதி 

Tuesday, September 11, 2012

சுவிட்சர்லாந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்திய பொருட்கள்


சுவிட்சர்லாந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்திய பொருட்கள்

சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்களில் ஒன்றாகும் மிக்ரோஸ. இதுவரை இடைத்தரகர்கள் மூலமாக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இந்தக் கம்பெனி, இந்தியாவிலிருந்து வாங்குவதை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் புதுடெல்லியில் ஒரு சோர்சிங்கிற்காக ஒரு கம்பெனியை தொடங்கி உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க முடிவு செய்துள்ளது. விற்பதற்கு ரெடியாகுங்கள். இந்த சூப்பர் மார்க்கெட் இதற்கு முன்னமே சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நேரடி கொள்முதல் நிலையங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Monday, September 10, 2012

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்


பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்

உலகத்திலேயே அதிக பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடங்களில் ஒன்று உண்டு. ஆனால், இவைகளின் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2017ம் வருடத்திற்குள் இதற்காக மத்திய அரசாங்கம் 5000 கோடி ரூபாய்கள் செலவழிக்கவுள்ளது. இதன் மூலம் தனியார் கம்பெனிகள் விவசாயிகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு உற்பத்தி செய்யும் திட்டமாகும். 33 தனியார் கம்பெனிகள் ஆர்வத்துடன் முன்வந்துள்ளன. இன்னும் பல கம்பெனிகள் வரலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு கடன்களும், உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். மேலும் நிலையான வருமானத்திற்கும், நாட்டின் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும்.

Sunday, September 9, 2012

மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி


மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி

இந்திய மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் நடத்து உலகளவிலான ஒரு கண்காட்சி அடுத்த வருடம் ஏப்ரல் 24 முதல் 26 வரை  மும்பையில் நடக்கவுள்ளது. இதில் உலகின் பல பாகங்களிலிருந்து சுமார் 400 இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதன் முக்கிய அம்சம் என்னெவென்றால் சிறிய அளவில் மருந்து தயாரிப்பவர்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது தான். இந்த மேம்பாட்டுக் கழகத்தில் மேல் விபரங்கள் கிடைக்கும்.

Saturday, September 8, 2012

உங்கள் ஐடியாக்களுக்கு வடிவம் கொடுக்கும், செயல்படுத்த பணம் கொடுக்கும் இணையதளம்


உங்கள் ஐடியாக்களுக்கு வடிவம் கொடுக்கும், செயல்படுத்த பணம் கொடுக்கும் இணையதளம்

உங்களிடம் நல்ல ஜடியாக்கள் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த நிறைய பணம் தேவைப்படும் என்ற பட்சத்தில் உங்கள் ஐடியாக்களை இந்த இணையதளத்திற்கு தெரிவித்தால் உங்களுக்கு உதவி செய்ய பலர் காத்திருக்கிறார்கள். இதுவரை 20,000 ஐடியாக்களுக்கு வடிவம் கொடுத்துள்ளார்கள். இதன் மதிப்பு 1000 கோடி ரூபாய்களுக்கு மேலே இருக்கும். சென்று பாருங்கள் உங்கள் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் இணையதளமாக இது இருக்கலாம். www.kickstarter.com. உங்களது ஐடியாக்களுக்கு ஒரு வழி கிடைக்க வாழ்த்துக்கள்.


Thursday, September 6, 2012

வீவ்ஸ் ஆப் இந்தியா


வீவ்ஸ்  ஆப் இந்தியா

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் என்ன வகையான் டிரஸ்  மெட்டீரியல்கள், சாரீஸ்  தயாரிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். 

பீகார்
பகல்பூர் சில்க் டிரஸ்  மெட்டீரியல், துசார் மற்றும் மட்கா சில்க் சாரிகள்

ராஜஸ்தான்
பந்தானி சில்க் சாரிகள், ஜல்புரி குர்த்தீஸ், ஹாண்ட் ப்ளாக் பிரிண்ட், ப்ளாக் பிரிண்ட் டிரஸ மெட்டீரியல்

உத்திரபிரதேஷ்
பனாரஸ்  சில்க் சாரிகள், ஜாம்வர் சில்க சாரிகள், புராகெட் டிரஸ்  மெட்டீரியல்

கர்நாடகா
பெங்களூர் சில்க், மைசூர் சில்க், ஹுப்ளி காட்டன் மற்றும் சில்க் சாரிகள்

தமிழ்நாடு
காஞ்சிபுரம் சில்க் சாரிகள், திருப்புவனம் சில்க் சாரிகள்

மேற்கு வங்காளம்
சாந்தி நிகேதன் காந்தா சில்க் சாரிகள், பாஸ்மினா சாரிகள், நிம்சாரி சாரிகள், பிரிண்டட் சில்க் சாரிகள்

ஆந்திரா
கலம்காரி சாரிகள், மங்கள்கிரி, போச்சம்பள்ளி சில்க் சாரிகள், தர்மாவரம் சில்க் சாரிகள்

மத்திய பிரதேஷ்
சந்தாரி மற்றும் மகேஷ்வரி காட்டன் மற்றும் சில்க் சாரிகள்

ஜம்மு காஷ்மீர்
தாபி சில்க் சாரிகள், சினன் சில்க் சாரிகள்

சட்டீஸகர்க்
கோசா சில்க் சாரிகள்

குஜராத்
பட்டோலா சில்க் சாரிகள், குஜராத்தி கண்ணாடி வேலைப்பாடுகள் சாரிகள், டிசைனர் குர்த்தீஸ் 

தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி


தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி

ப்ளாக் டைகர் ஷிரிம்ப் என்ற வகை மீன்கள் சுமார் 700 டன்கள் ஏற்ருமதி செய்யப்படமுடியாமல் குளிர்சாதனபெட்டிகளில் இருந்து வருகிறது என்று வெஸ்ட் கோஸ்ட் ப்ரோஷன் புட்ஸ்  கம்பெனி தெரிவித்துள்ளது. என்ன காரணம்? ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றில் மந்த நிலையும், மேலும் முன்பு அனுப்பபட்ட இந்த வடை மீன்களில் ஒருவித கெமிக்கல்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேலும் இருப்பதும் ஆகும்

Monday, September 3, 2012

எண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங்கள்


எண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங்கள்

எண்ணெய் வித்துக்கள் இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன விலையில் கிடைக்கிறது, எங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது, என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறும் இணையதளம். மேலும், உலகளவில் எண்ணெய்களுக்கு என்ன விலை கிடைக்கிறது, இறக்குமதி விலைகள் என்ன என்பதையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள் சால்வண்ட் எக்ஸ்டிராக்ட்ஸ்  அசோஷியேஷன் ஆப் இந்தியா நிறுவனம். www.seaofindia.com


Sunday, September 2, 2012

பீகாரின் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு


பீகாரின் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு

பீகாரில் நாளந்தா மாவட்டத்தில் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த இந்தியன் பொட்டோடோ லிமிடெட் என்ற நிறுவனம் ஒரு லட்சம் டன்கள் உருளைக்கிழங்கை வாங்கி ஏற்றுமதி செய்யவுள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உருளைக்கிழங்கு பயிரிடப்படும் மாநிலங்களில் பீகார் மூன்றாவதாக வருகிறது. முதலிரண்டு இடத்தை உத்திரப்பிரதேசமும், மேற்கு வங்காளமும் பிடித்துள்ளன. நாளந்தா பீகார் முதலமைச்சரின் மாவட்டம் என்பது குறிப்பிடதக்கது. மேலும், இந்த மாவட்டத்தில் தான் சென்ற வருடம் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேருக்கு 72.9 டன்கள் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்து ஒரு உலக சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதியில் பின்தங்கி இருக்கிறோம். இதை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், தமிழக அரசு ஆகியவை தான் நிவர்த்தி செய்யவேண்டும்.

Saturday, September 1, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம் 

பேஸ்புக் மக்களை இணைக்க உதவும் ஒரு இணையதளம் என்பது உங்களுக்கு நன்கே தெரியும். அதே சமயம் இது போல ஒரு இணையதளம் பிசினஸ்  மக்களையும் இணைத்தால் எப்படி இருக்கும் என்று பலர் பல சமயத்தில் கற்பனை செய்திருப்பீர்கள். அது போல ஒரு இணையதளம் இருக்கிறது. அது தான் www.biznik.com <http://www.biznik.com>. இதில் சிறிய பிசினஸ்  செய்பவர்களும், செய்ய நினைப்பவர்களும் இருப்பதால் உங்களுக்கு பல ஐடியாக்கள் கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. சென்று பாருங்கள், நல்ல இணையதளம்

Friday, August 31, 2012

தரமான பாக்கேஜிங் செய்வது எப்படி ? கண்காட்சி


தரமான பாக்கேஜிங்  செய்வது எப்படி ? கண்காட்சி

தரமான பொருட்கள் தயாரித்தால் மட்டுமே போதாது, எந்த பொருளையும் கெடாமல் நீண்டநாட்கள் வைத்திருக்க வேண்மடுமானல் நல்ல பாக்கேஜிங் மிகவும் முக்கியம். இது சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அது சம்பந்தமான கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். செப்டம்பர் 11 முதல் 13 வரை இது சம்பந்தமான ஒரு கண்காட்சி மும்பையில் நடக்கவுள்ளது. இதில் 25 நாடுகளை சேர்ந்த 350 கம்பெனிகள் கலந்து கொள்கின்றன. 150 மிஷின்கள் உங்களுக்கு நேரடியான லைவ் டெமோ செய்து காண்பிக்கவுள்ளன. இதில் உணவுப் பொருட்கள், இனிப்பு, காரம், பால், பால் பொருட்கள் போன்றவை பாக்கேஜிங் எப்படி செய்யப்படவேண்டும் என்று கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புக்கள் இருக்கும். இந்த தொழில்களில் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். www.koelnmensse-india.com<http://www.koelnmensse-india.com>

Wednesday, August 29, 2012

பால் ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்வி பதில்

கண்ணப்பன்
சென்னை

கேள்வி
பால் ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்
பால் ஏற்றுமதி என்பது சிறிது கடினமான ஒன்று தான். அதை சிறிய அளவில் செய்ய இயலாது. ஏனெனில் பால் சேகரிப்பு, பாதுகாப்பு, குளிர்சாதன பெட்டிகளில் வைத்து அனுப்புவது என்று இது பெரிய அளவு செய்யக் கூடிய தொழில். ஆதலால் அதிகமாக அதாவது மீதப்படும் பால், பால் பொருட்கள் தயாரிப்பதில் உபயோகப்படுத்தப்படுகிறது. பால் அதிகம் ஏற்றுமதி ஆகாவிட்டாலும், பால் பொருட்கள் ஏற்றுமதி அதிகம் இருக்கிறது. சரி, தமிழ்நாடு எவ்வளவு பால் உற்பத்தி செய்கிறது என்று தெரியுமா? ஒரு வருடத்திற்கு 6.79 மில்லியன் டன்கள். இந்தியாவில் உத்திரபிரதெசம் 20.20 மில்லியன் டன்களும், ராஜஸ்தான் 12.33 மில்லியன் டன்களும் உற்பத்தி செய்கின்றன. பால் துறையில் புரட்சி செய்த குஜராத் எங்கு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? 9.39 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்கிறது.


அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.


அன்னாசி 

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 1415000 டன்கள் அன்னாசி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் வருடத்திற்கு சுமார் 2000 டன்கள் தாம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் மேற்கு வங்காளம் தான். தமிழ்நாடு கடைசியில் தான் இருக்கிறது. அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.

Monday, August 27, 2012

சைனாவின் தேக்கம் இந்தியாவின் லாபமாகுமா?


சைனாவின் தேக்கம் இந்தியாவின் லாபமாகுமா? 

சைனாவில் தற்போது விற்பனையில் மிகவும் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சைனா எதை உற்பத்தி செய்தாலும் அது லட்சக்கணக்காக இருக்கும் அல்லது கோடிக்கணக்காக இருக்கும். இதனால் குவாலிட்டியில் சிறிது காம்ரமைஸ்  செய்தாலும், விலை குறைத்து கொடுத்து உலகளவில் போட்டி போட அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது. ஆனால் சைனா பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலம் தான் உழைக்கும் என்பதை தற்போது பலரும் உணர்ந்தார்களோ என்னவோ, அந்த நாட்டு விற்பனையில் தேக்கம் இருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தரமான பொருட்கள் தயாரிக்கும் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். சைனாவில் தேக்கம் ஒரு வாய்ப்பா? இல்லை உலகத்திற்கே ஒரு அவசர அறிவிப்பா என்று வருங்காலத்தில் தெரியும். 

தரைவிரிப்புக்கள் ஏற்றுமதி



தரைவிரிப்புக்கள் ஏற்றுமதி

கைவேலைப்பாடான தரைவிரிப்புகள் தயாரிப்பதில் இந்தியா மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக காஷ்மீர் தரைவிரிப்புகள் கண்ணை கவரும், மனதையும் கவரும், பர்சையும் கவரும். உள்நாட்டில் அதிகம் பெரிய பணக்காரர்களால் மட்டுமே வாங்கப்படும் இந்த வகை தரைவிரிப்புகள் வெளிநாடுகளில் வீடுகளை அலங்கரிக்க எல்லோராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த வருடம் ஜுலை மாதம் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சைனா, லத்தீன் அமெரிக்க நாடுகள் தற்போது இந்தியாவிலிருந்து வாங்குவதை கூட்டியுள்ளன. அதே சமயம் இதுவரை அதிகம் வாங்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க போன்றவை சிறிது சுணக்கம் காட்டுகின்றன. நாடுகளே தத்தளிக்கும் போது தரைவிரிப்புகள் தேவையா? என்று நினைத்திருக்கலாம். பெரிய ஊர்களுக்கு செல்லும் போது காஷ்மீர் எம்போரியத்திற்கு ஒரு முறை சென்று பாருங்கள். அப்போது தெரியும் அதன் அழகு. தரைவிரிப்புகள் ஏற்றுமதிக்கென்றே தனியாக ஒரு ஏற்றுமதி முன்னேற்ற கழகம் இந்தியாவில் இருக்கிறது.

Friday, August 24, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும்   இணையதளம்


ஸ்டீல் இண்டஸ்டீரிக்கு செய்திகள் மிகவும் முக்கியம். அது உள்நாட்டு வியாபாரமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு வியாபாரமாக இருந்தாலும் சரி. உலகளவில், உள்நாட்டு அளவில் ஸ்டீல் தொழில் பற்றிய செய்திகள், அது சம்பந்தப்பட்ட டைரக்டரிகள், அளவுகளை கன்வர்ட் செய்ய உபயோகப்படும் டேபிள்கள், நாடுவாரியான விபரங்கள் என்று பல்வேறு செய்திகள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உபயோகமான இனையதளம்.


தேங்காய் உபயோகத்தில் இந்தியா முதலிடம், ஆதலால் ஏற்றுமதி குறைவு.


தேங்காய் உபயோகத்தில் இந்தியா முதலிடம், ஆதலால் ஏற்றுமதி குறைவு. 

இந்தோனேஷியா ஆண்டுக்கு 1,650 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,573 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன.அதிக அளவில் தென்னந்தோப்பு களை கொண்ட நாடுகள் வரிசையிலும் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 38.50 கோடி ஹெக்டேரில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இலங்கையும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. 

இங்கு ஒரு ஹெக்டேரில் 8,303 தேங்காய்கள் விளைகின்றன. இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் ஒரு ஹெக்டேரில் 7,223 தேங்காய்கள் விளைகின்றன.உலகளவில், தேங்காய் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1,495 கோடி தேங்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மொத்த தேங்காய் உற்பத்தியில் 95 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. 100 தேங்காய் உற்பத்தி செய்தால் 95 யை இங்கே நாம் உபயோகப்படுத்தி விடுகிறோம்.

உலகளவில், தேங்காய் இறக்குமதியில் மலேசியா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, ஆண்டுக்கு சராசரியாக 140 கோடி தேங்காய்களை இறக்குமதி செய்கிறது.

இந்தியா தேங்காயை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி உள்ளது. இலங்கையில் தேங்காய் உற்பத்தி, தமிழ்நாட்டை விட, குறைவாகவே உள்ளது. எனினும், இந்தியாவை விட, இலங்கை மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக வருவாயை ஈட்டி வருகிறது.

Thursday, August 23, 2012

பருப்பில்லாத ரசம்


பருப்பில்லாத ரசம்  

மத்திய அரசு பருப்பு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததால் அனைத்து பருப்பு விலையிலும், உயர்வு ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தியாகும் பருப்பை, மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆதலால் உள்நாட்டில் விலை கூடி வருகிறது.  இன்னைக்கு ஸபெஷல் மெனு பருப்பில்லாத ரசம் வைப்பா...

Tuesday, August 21, 2012

வெங்காய தண்டு போல அலேக்


வெங்காய தண்டு போல அலேக்

ஒசூரில் உற்பத்தியாகும் வெங்காய தண்டுகள் ஜெர்மனி, சிங்கப்பூருக்கு, பல்வேறு வகை உணவு பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதியாகிறது. ஓசூர் தாலுகாவில் காணப்படும் சூழ்நிலை மற்றும் நல்ல மண்வளம் பல்வேறு அரிய வகை விவசாய பயிர்களை சாகுபடி செய்யப்படுகிறது.  இங்கு உற்பத்தியாகும் வெங்காய தண்டுகளும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது கூடுதல் சிறப்பாக உள்ளது. ஓசூர் அருகே ஹெச்.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீனிவாசலு. இவர் பசுமை குடோனில் (கீரின்ஹவுஸ்) சாகுபடி செய்த வெங்காய தண்டுகளை ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். "ஆனியன் சைவ்ஸ்' வகை வெங்காய செடிகளை சாகுபடி செய்வதின் மூலம் வளரும் தண்டுகள் மற்றும் இலையை அறுவடை செய்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத், கர்நாடகா, ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆனியன் சைவ்ஸ், ஆலியம் சினோபுராசம் என்ற ரெட் ஆனியன், ஒயிட் ஆனியன் வெங்காய செடிகள், நல்ல மனமும் சுவையும் கொண்டவை.தற்போது, முதல் முறையாக ஓசூர் பகுதியில் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வெங்காய தண்டுகளில் அதிகளவு வைட்டமின், தாதுஉப்புகள், புரதச்சத்துகள் உள்ளன. அதனால், ஜெர்மனி, சிங்கபூர் மற்றும் அரேபியா நாடுகளில் பிரைட் ரைஸ், அசைவம், சைவம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர்.இந்த வெங்காய தண்டுகளை சாப்பிட்டால் உடலில் அதிகளவு சூட்டை ஏற்படுத்துவதால், குளிர்நிறைந்த ஜெர்மன் மக்கள், உடலில் சூடு வருவதற்காக இந்த வெங்காய தழைகளை அதிகளவு சாப்பிடுகின்றனர்.இந்த வெங்காய செடிகளை, ஒரு முறை சாகுபடி செய்தால், 20 ஆண்டு வரை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய பசுமை குடோன் அமைக்க, 24 லட்சம் ரூபாய், சாகுபடி, பராமரிப்பு செலவு உட்பட மொத்தம், 40 லட்சம் ரூபாய் செலாவகிறது. ஏக்கருக்கு இரண்டரை டன் வரை தழைகளை உற்பத்தி செய்யலாம். ஆனால், அவற்றில் தரம் வாய்ந்த ஒரு டன் தழைகளை மட்டுமே தரம் பிரித்து ஏற்றுமதி செய்ய முடியும். ஒரு கிலோவுக்கு, 600 ரூபாய் வரை கிடைக்கும் என்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. 

Monday, August 20, 2012

சீரகம் ஏற்றுமதியும் உயர்வு, விலையும் உயர்வு


சீரகம் ஏற்றுமதியும்  உயர்வு, விலையும் உயர்வு 
 
உலக அளவில் சர்வதேச அளவில், இந்திய சீரகத்திற்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால் இதன் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டில், குஜராத் மாநிலத்தில் தான் சீரகம் அதிகம் விளைகிறது. ஆனால் அங்கு மழை குறைவால் உற்பத்தி குறைந்து விலை கூடி வருகிறது. ஏற்றுமதியில்  உலகளவில், சீரக உற்பத்தியில், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்நாடுகளில், இதன் உற்பத்தி குறைந்துள்ளதால், பல நாடுகள், இந்திய சீரகத்தை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இதனாலும், இதன் விலை உயர்ந்துள்ளது. உலகளவு சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய சீரகத்தின் விலை குறைவாக உள்ளது. 2011-12ம் பருவத்தில், உள்நாட்டில் சீரக உற்பத்தி, 40 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2010-11ம் பருவத்தில் 29 லட்சம் மூட்டைகளாக இருந்தது. ஒரு மூட்டை என்பது 55 கிலோ ஆகும். சென்ற ஏப்ரல் மாதத்தில், 2,500 டன் சீரகம் ஏற்றுமதியாகியுள்ளது

என்னுடைய வலைதளத்திருக்கு வரவிருக்கும் 50,000 தாவது வாசகர் யார் ?

என்னுடைய வலைதளத்திருக்கு  வரவிருக்கும் 50,000 தாவது வாசகர்  யார் ?

Sunday, August 19, 2012

ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?


ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?

இந்த வருடம் ஏற்றுமதி டார்கெட்டாக 360 பில்லியன் டாலர் இருக்கிறது. ஆனால், உலகளவு சுணக்கத்தால் அதை எட்டுவது என்பது இயலாத காரியம் போலத் தோன்றுகிறது. மாதாமாதம் ஏற்றுமதி சென்ற வருடம் இதே காலத்தை விட குறைந்து வருகிறது. இலக்கை எட்ட முடியாது போலத் தான் தோன்றுகிறது. ஆனால் சிறிய ஏற்றுமதியாளர்களும், புதிய ஏற்றுமதியாளர்களும் இந்த இலக்குகளைப் பற்றி கவலைப்படவேண்டாம். அது அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

Saturday, August 18, 2012

நாங்கள் இறக்குமதி செய்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். எங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?


ராமன்
சென்னை

கேள்வி

நாங்கள் இறக்குமதி செய்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். எங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?

பதில்

நீங்கள் இறக்குமதி செய்த பொருளைத் அப்படியே ஏற்றுமதி செய்தால், இறக்குமதி செய்த போது கட்டிய கஸடம்ஸ்  டியூட்டியை திரும்ப பெறலாம். இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு தான் எக்சைஸ்  டியூட்டி கட்ட வேண்டும். நீங்கள் இறக்குமதி செய்த பொருளை இந்தியாவில் உபயோகப்படுத்தாமல் அப்படியே ஏற்றுமதி செய்தால் எக்சைஸ் டியூட்டியும் கட்ட வேண்டாம்.

Thursday, August 16, 2012

உங்கள் டிரேட் மார்க்கை எப்படி பதிவு செய்வது?


உங்கள் டிரேட் மார்க்கை எப்படி பதிவு செய்வது?
கேள்வி பதில்

ரகுராமன்
கரூர்

கேள்வி

நான் எங்களது தயாரிப்புக்களுக்கு ஒரு டிரேட் மார்க்  வைக்க விரும்புகின்றேன். இது எங்களுடைய தயாரிப்புக்களை பிரபலப்படுத்த ஏற்பட்ட ஒரு எண்ணம். எப்படி செயல்படுத்துவது?


பதில்

நீங்கள் வைக்க விரும்பும் டிரேட் மார்க்கை யாரும் பயன்படுத்தியிருக்காதபட்சத்தில் நீங்கள் தாராளமாக அதை உங்கள் தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், ரிஜிஸடர் செய்து கொள்ளலாம். நீங்கள் வைக்க விரும்பும் பெயர் முன்னமே இருக்கிறதா என்று சர்ச் செய்து பார்த்துக் கொள்ளலாம். அதற்காக செல்ல வேண்டிய இணையதளம்www.ipindiaonline.gov.in/etmr/publicsearch/searchmain.aspx. உங்களது டிரேட் மார்க்கை ஒரு பிரிவில் ரிஜிஸ்டர் செய்ய ரூபாய் 3500 செலுத்த வேண்டும். சினிமாவிற்கு பெயர் ரிஜிஸ்டர் செய்து வைப்பது போல ரிஜிஸ்டர்  செய்து வைக்க முடியாது. நீங்கள் பதிந்து கொண்டால் அந்த டிரேட் மார்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

Wednesday, August 15, 2012

யார்ன் கண்காட்சி



யார்ன் கண்காட்சி

பேஷன் உலகிற்கு மிகவும் முக்கியம் அழகான வகை வகையான துணிகள். அந்த துணிகளுக்கு மிகவும் முக்கியமானது நூல் (யார்ன்). அந்த யார்ன் உலகில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன, வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். வரும் ஆகஸட் 31, செப்டம்பர் 1, 2 தேதிகளில் திருப்பூரில் இது சம்பந்தமாக “யார்னெக்ஸ்” என்ற கண்காட்சி நடக்கவுள்ளது.
www.yarnex.in என்ற இணையதளத்தை சென்று பாருங்கள் மேலும் விபரங்களுக்கு.

Tuesday, August 14, 2012

பழங்கள்,காய்கறிகள் உற்பத்தி


பழங்கள்,காய்கறிகள் உற்பத்தி

பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சீனாவிற்கு அடுத்தபடியாக. ஆனால் உற்பத்தி அளவை வைத்துப் பார்க்கும் போது சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவின் 
2010-11ம் வருடம் உற்பத்தி 240 மில்லியன் டன்களாக இருந்தது. ஆனால் சீனாவின் 2007-08ம் ஆண்டு உற்பத்தியே 680 மில்லியன் டன்களாக இருந்தது. எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்? 


Monday, August 13, 2012

பதன்கோட் சேலைகள்


பதன்கோட் சேலைகள்

பஞ்சாபில் உள்ள பதன்கோட் எம்பிராயிடரி சேலைகளுக்கு உலகப்புகழ் பெற்றது. மேலும் இந்த ஊர் கைவினைப்பொருட்களுக்கும் பெயர் பெற்றது. இவர்கள் தற்போது தங்கள் திறைமைகளை சிறப்பாக வெளிப்படுத்த கிளஸடர் முறையை அமல்படுத்தவுள்ளார்கள். மேலும், தங்களுக்கு வழிகாட்ட என்.ஐ.எப்.டி., யில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில்) படித்த மாணவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவுள்ளார்கள். தமிழ்நாட்டில் இது போன்று சிறப்பான கைவினைப் பொருட்கள் செட்டிநாடு பகுதிகளில் தயாராகி வந்தது. அது நூறு வருடங்களுக்கு முன்பு பர்மா, சிலோன் ஆகிய இடங்களில் இருந்து இங்கு வந்தது. ஆனால் தற்போது அது முற்றிலும் அழியும் நிலை வந்து விட்டது. 

Sunday, August 12, 2012

ஏற்றுமதிக்கு உதவும் நண்பன்


ஏற்றுமதிக்கு உதவும் நண்பன்

ஏற்றுமதிக்கு மிகவும் உதவுவது வாங்குபவர், விற்பவர் சந்திப்பு தான். கன்பெடரேஷன் ஆப் இந்தியன் இண்டஸ்டிரி அடிக்கடி இது போல வாங்குபவர், விற்பவர் சந்திப்புக்களை நடத்துக்கிறது. அதில் நீங்களும் கலந்து கொண்டால் அது உங்கள் வியாபாரத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும். சி.ஐ.ஐ. யின் மேற்கு பிராந்திய பிரிவு சென்ற வருடம் மட்டும் 5 சந்திப்புக்களை நடத்தியுள்ளது, 400 குறுந்தொழில் செய்பவர்கள் பங்கு பெற்றனர். அடிக்கடி இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள், வெற்றி பெறுங்கள்.

Thursday, August 9, 2012

ஆர்கானிக் உணவு ஏற்றுமதி


ஆர்கானிக் உணவு ஏற்றுமதி 

ஆர்கானிக் உணவு மார்க்கெட் உலகளவில் வளர்ந்து வருகிறது. இந்த வருடம் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து 100 பில்லியன் டாலர்களை எட்டும். அதாவது 400,000 கோடி ரூபாய்களை எட்டும். ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வதால் என்ன லாபம்? பொருட்களின் விலையில் கூடுதலாக 25 சதவீதம் வரை கூடுதலாகக் கிடைக்கிறது.

Wednesday, August 8, 2012

நேற்று வாங்கிய பூட்டு


நேற்று வாங்கிய பூட்டு

நேற்று கடைக்கு சென்று ஒரு பூட்டு வாங்கினேன். மிகவும் நேர்த்தியாக இருந்தது, விலையும் ரூபாய் 50 தான். விலை குறைந்துள்ளதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டேன். கடைக்காரர் சொன்னார் “இது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றார்”. சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை உடனே ஞாபகத்திற்கு வந்தது. இந்தியாவில் பூட்டுக்கு மிகவும் பெயர் பெற்ற உத்திரப்பிரேசத்தில் உள்ள அலிகரில் உள்ள பூட்டு கம்பெனிகள் எல்லாம் சீனா இறக்குமதியால் பூட்டு போட வேண்டிய நிலை என்று குறிப்பிடும் கட்டுரை தான் அது. ஒன்று நாம் நம் தரத்தை உயர்த்த வேண்டும் அல்லது பெருமளவு உற்பத்தி செய்ய வேண்டும். அது தான் விலையை குறைத்து இறக்குமதியை குறைக்க வழி வகுக்கும்.செய்வோமா?

Tuesday, August 7, 2012

2011ம் வருடமும் ஏற்றுமதியும் - வளர்ச்சி சதவீதத்தில் சீனாவை முந்திய இந்தியா


2011ம் வருடமும் ஏற்றுமதியும் - வளர்ச்சி சதவீதத்தில் சீனாவை முந்திய இந்தியா 

2011ம் வருடம் உலகளவில் ஏற்றுமதியில் அதிக அளவு வளர்ச்சியை பெற்றது இந்தியா தான் என்பது அறிந்து நாம் அனைவரும் பெருமைப்படலாம். 2011ம் வருடம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 16.1 சதவீதமாக இருந்தது. இதே சமயத்தில் சைனாவின் வளர்ச்சி 9.3 சதவீதமாக இருந்தது. சைனாவை இதிலாவது முந்தினோமே என்று சந்தோஷப்பட வேண்டியது தான். 

Monday, August 6, 2012

காயர் போர்டு கண்காட்சி


காயர் போர்டு கண்காட்சி

காயர் போர்டு ஆகஸ்ட் 12 முதல் 16 வரை உலகளவிலான கண்காட்சியை கொச்சியில் நடத்தவுள்ளது. இந்தக் கண்காட்சியில் காயர் சம்பந்தப்பட்ட புதிய டிரண்ட்கள் என்னென்ன வந்துள்ளது, எந்த வகையில் மிஷின்களை உபயோகித்து தயாரிப்பை இன்னும் அதிகமாக்கலாம் என்றும், வாங்குபவர்- விற்பவர்கள் சந்திப்புக்களும், செமினார்களும் நடைபெறவுள்ளது. காயர் தயாரிப்பில் உள்ளவர்களும், ஏற்றுமதியாளர்களும் கலந்து கொள்ள வேண்டிய கண்காட்சியாகும்.

ஏற்றுமதி உலகம் இணையதளத்தை பற்றி வாசகர் கருத்து


ஏற்றுமதி  உலகம் இணையதளத்தை பற்றி வாசகர் கருத்து 

அய்யா

நான் கடந்த ஒரு வருடமாக நான் இந்த வலைதளத்தின் வாசகனாக இருந்து வருகிறேன். இந்த   வலைதளத்தில் பல வியப்பான தகவல்களும் ஆச்சாpய முட'டும் எண்ணற்ற செய்திகளும் கிடைக்கப் பெற்றேன்.

நம்முடைய வலைதளம் ஏற்றுமதியாளர்களுக்கு  பல அறிய தகவல்களை வழங்குகிறது. புதிய ஏற்றுமதியாளர்களுக்கு  ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. தங்களின் வலைதளத்தை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் ஒரு வெற்றி பெற்ற ஏற்றுமதியாளராக விளங்க முடியும். தங்களுடைய இந்த பணி என்றெனறும் தொடர வேண்டும். ஏராளமான வாசகா;களை வாசிக்க வைத்து பல ஏற்றுமதியாளா;களை உருவாக்க வேண்டும்.

எற்றமதியில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதற்கு தங்களைப் போன்றவர்களால்  மட்டுமே முடியும். தங்களின் வலைதளத்தில் தினந்தோறும் புதிய தகவல்களை பதிய வேண்டும். தமிழ் வலைதளத்தில் 142ம் இடத்தில் இருக்கும் தங்கள் வலைதளம் முதல் 50 இடத்துக்குள் வர வேண்டும். அனுதினமும் இருபது வாசகர்களை  கொண்டிருந்த நம்முடைய வலைதளம் தற்போது சராசரி 300 வாசகர்களுடன்  வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. அது மென்மேலும் வளர்ந்து  தினமும்  2000  வாசகர்களை எட்ட வேண்டும். தினம் ஒரு தகவல் என்ற முறையில் அதிக பதிவுகளை செய்யும்போது அதிக வாசகர்களை  பெற முடியும்.

கீழ்கண்ட ஆலோசனைகளை சமர்பிக்கிறேன் 

1.ஆரம்பகால ஏற்றுமதியாளர்களின்  அனுபவங்களை பகிர்ந்து  கொள்வது 
2.வெற்றி பெற்ற ஏற்றுமதியாளர்களின்  கடந்து வந்த பாதைகளை எழுதுவது 
3.வெற்றி பெற்ற நிறுவனங்களை அறிமுகப்படுத்துவது 
4.ஏற்றுமதி மேம்பாட்டு நிறவனங்களின் புதிய அறிமுகங்கள் அரசு துறையின் அறிவிப்புகள் 
5. சர்வதேச  சந்தை பொருட்காட்சிகளின் அறிவிப்புகள் 
6.சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருட்களை விளம்பரபடுத்துதல்
7.இந்தியா இதுவரை ஏற்றுமதி செய்யாத ஆனால் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள நாடுகளை அறிவித்து அதற்கான வாய்ப்புகளை விளம்பரபடுத்துதல்
8.ஏற்றுமதி நாடுகளுடன் போட்டி போட நம் பொருட்களின் தரத்தை உயர்த்த  ஆலோசனை தெரிவித்தல்

அன்புடன்
சு. துரைசிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாடு


Sunday, August 5, 2012

ஏற்றுமதிக்கு பேஸ்புக் மார்க்கெட்டிங்


ஏற்றுமதிக்கு பேஸ்புக் மார்க்கெட்டிங்

பேஸ்புக், பிக்கி (FICCI) ஆகியவை இணைந்து சிறிய மற்றும் நடுத்தர இஞ்சினியரிங் கம்பெனிகளை டார்கெட் செய்து அவர்களுக்கு இண்டர்நெட் மூலமாக ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்று கற்றுத் தர உள்ளது. முதலில் பரிதாபாத் மற்றும் ஹைதரபாத் ஆகிய ஊர்களில் இருக்கும் 600 உற்பத்தியாளர்களை இணைத்து இந்த மார்க்கெட்டிங் காம்பெயினை நடத்தவுள்ளது. பின்னர் இன்னும் 4 ஊர்களில் நடைபெறும். இது போல அமெரிக்கா, யு.கே., ஆகிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் வர்த்தக சபைகளுடன் இணைந்து நடத்திய செமினார்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததால் அதைத் தொடர்ந்து பேஸ்புக்கில் உலகில் அதிக அளவு உறுப்பினர்களை உடைய இந்தியாவிலும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதாவது பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் 50 டாலர் மதிப்புள்ள பேஸ்புக் வவுச்சர்களும், மார்க்கெட்டிங் உத்திகள் பற்றிய புத்தகங்களும் கொடுக்கவுள்ளார்கள்.  தமிழ்நாட்டுக்கும் வருவார்களா? யார் கூப்பிடுவார்கள். 

Thursday, August 2, 2012

ஏற்றுமதி உலகம் ப்ளாக்கில் ஜூலை மாதம் எழுதிய தலைப்புக்கள்


ஏற்றுமதி உலகம் ப்ளாக்கில் ஜூலை மாதம் எழுதிய தலைப்புக்கள்

  • இந்திய உணவு வகைகள் துபாயில்

  • இந்திய சேலைகள்

  • கோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும், மாம்பழமும்

  • வெங்காயம் ஏற்றுமதி 

  • கேள்வி பதில்
தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?

  • பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி

  • தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள் 

  • ஹைதராபாத் கராச்சி பேக்கரியும், நிலான் என்டர்பிரைசும்

·         ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி?



  • ஏற்றுமதி கேள்வி பதில்
      ஏற்றுமதிக்கான ஆர்டர் வாங்கும் முன்பு அதற்கான காண்டிராக்டை போடும் வழிகள் என்னென்ன?

      ஏற்றுமதிக்கு உதவும்  இணையதளம்

  • எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 

  • காய்கறிகள் வாங்குவதற்கு

  • சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி

  • வெளிநாட்டில் இருந்து டெக்னீஷியன்களை இந்தியாவிற்கு கூட்டி வர முடியுமா? அவர்களுக்கு வெளிநாட்டு பணமாக கொடுக்க முடியுமா

  • ஏற்றுமதியில் LIBOR  என்றால் என்ன?

  • உலகளவில் ரீடெய்ல் கம்பெனிகளின் விற்பனைகள்

  • பாசுமதி அரிசி ஏற்றுமதி 

·         சணல் பொருட்கள் ஏற்றுமதி


  • அலங்கார மீன் ஏற்றுமதி

  • இன்கோடெர்ம்ஸ்  என்றால் என்ன? அதன் பயன் என்ன?

  • ஏற்றுமதி  சந்தேகங்கள் 


  • 10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி

  • வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை

  • செக்கோஸ்லோவோக்கியா வாங்கும் குர்கான் துணிகள்

  • மாம்பழம் இல்லாத ஏற்றுமதி உலகமா

  • ஏற்றுமதி கேள்வி பதில்

  • கென்யாவிற்கு என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் உள்ளது?