Thursday, March 6, 2014

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம்

ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம்

சென்னையில்

3 ஆகஸ்ட் 2014, ஞாயிற்றுக்கிழமை



ஏற்றுமதி என்பது புதையலா?

ஏற்றுமதி புதையல் அல்ல, இதுவும் ஒரு தொழில் தான். எவ்வளவு திறம்பட நடத்துகிறோமோ அவ்வளவு சிறப்பாக நடக்கும்.

ஏற்றுமதி என்றதும் அது ஏதோ புதையல் போல பல போய் விழுந்து மாட்டிக்கொள்கிறார்கள். அதாவது பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய நினைத்து வழிமுறைகள் சரிவர தெரியாததால் நிறைய நஷ்டப்படுகிறார்கள். ஏற்றுமதியின் அடிப்படைகளை தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு செய்தால் ஏற்றுமதியும் இனிக்கும்.


ஏற்றுமதியில் நல்ல தொழில் வாய்ப்புக்கள் உள்ளது. ஆகவே, முறையான பயிற்சி பெற்று ஏற்றுமதி தவறில்லாமல் செய்யும் போது தொழில் பெருக வாய்ப்புக்கள் உள்ளது.



சேவைகளையும் ஏற்றுமதி செய்யலாம்

பொருட்களை மட்டும் தான் ஏற்றுமதி செய்யலாம் என்று இருந்து விடாதீர்கள். கல்வி, மருத்துவம், டூரிசம், கணக்கு தணிக்கை ஆகிய சேவைகளையும் ஏற்றுமதி செய்ய முடியும். .

ஏற்றுமதி கருத்தரங்கம்

ஏற்றுமதி வளர்ந்து வருகிறது. உள்நாட்டு வியாபாரிகளுக்கு மேலும் வருமானம் தரும் ஒரு விஷயமாகவும் இருக்கிறது. ஆனால், நடைமுறைகள் தெரியாமல் ஏற்றுமதி செய்தால் போட்ட பணம் எல்லாம் போகும் என்ற நிலையும் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது, எப்படி ஒரு சிறந்த ஏற்றுமதியாளராவது என்ற கனவு பலருக்கு இருக்கும். அது போன்ற கனவுகளை நனவாக்க மும்பையைச் சேர்ந்த முன்னணி தமிழ் வழி ஏற்றுமதி பயிற்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் லேர்னின்ங் எக்ஸ்போர்ட்ஸ், இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி பயிற்சியாளர்களில் ஒருவரான திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்களைக் கொண்டு
ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் ஆகஸ்ட்3ம் தேதி, ஞாயிறன்று சென்னையில் நடத்தவுள்ளது.


ஏற்றுமதி கருத்தரங்கத்தில் என்ன தெரிந்து கொள்ளலாம்?

ஏற்றுமதி பற்றி அடிப்படையிலிருந்து, தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது எப்படி என்பது வரை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மணி நேர உரைக்கு பிறகும் 15 நிமிடங்கள் கேள்வி பதிலுக்காக ஒதுக்கப்படும். உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


கீழ்கண்ட பகுதிகளுக்கு அதிக நேரம் பயிற்சியில் ஒதுக்கப்படும்.

ஏற்றுமதிக்கான பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது
ஏற்றுமதிக்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது?
ஏற்றுமதிப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது (Marketing)?
ஏஜென்ட்டுகள் மூலம் ஏற்றுமதி செய்யலாமா? எவ்வாறு அதை பாதுகாப்பாக செய்வது?
உங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ள வெளிநாட்டு இறக்குமதியாளர் நம்பிக்கைக்கு உரியவரா? பணம் தாமதமில்லாமல் கிடைக்குமா? அதை எவ்வாறு அறிந்து கொள்வது?
பாதுகாப்பாக ஏற்றுமதி செய்வது எப்படி?
தவறில்லாமல் ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பது எப்படி?
எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்வது எப்படி?
ஏற்றுமதி டாக்குமெண்டேஷன் செய்வது எப்படி?
யூ.சி.பி. 600 – விளக்கம் (ஏற்றுமதிக்கான உலகளவிலான விதிகள்)

புத்தகம்
300 பக்க ஏற்றுமதி பயிற்சி கையேடு வழங்கப்படும்.


முன்பே ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்த கருத்தரங்கம் உதவுமா?

கட்டாயம் உதவும். குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள் பெறுவது எப்படி?, ஆர்டர்கள் போலியா, உண்மையா என்று எப்படி கண்டுபிடிப்பது?, ஏற்றுமதி எப்படி பாதுகாப்பாக செய்வது? ஏற்றுமதியில் நஷ்டம் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி? ஏற்றுமதியில் மிகவும் முக்கியமான டாக்குமெண்டேஷன் தவறில்லாமல் தயாரிப்பது எப்படி? என்று பல வகைகளில் உதவும்.

பணம் செலுத்தும் விபரம்

பயிற்சி கட்டணம் ரூபாய் 2500. இது பயிற்சி கட்டணம், தேநீர், மதிய உணவு, பயிற்சி புத்தகங்கள் அடங்கிய கட்டணமாகும்.

அருகிலுள்ள அக்சிஸ் பாங்கிற்கு செல்க, கீழ்கண்ட அக்கவுண்டில் பணம் செலுத்தவும். பணம் செலுத்திய பின் 09820451259 / 09869616533 என்ற எண்களுக்கு பணம் கட்டிய விபரங்களை எஸ்.எம்.எஸ். செய்யவும்.

CURRENT A/C:    018010200006750
Account Name:      THE INSTITUTE FOR LEARNING EXPORTS   
Branch:                  AXIS BANK, BORIVALI (W), MUMBAI

டி.டி.யாக அனுப்ப விரும்புபவர்கள் THE INSTITUTE FOR LEARNING EXPORTS என்ற பெயருக்கு டி.டி. எடுத்து அதை கூரியரில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

The Institute for Learning Exports
54 A, Apollo Industrial Estate
Mahakali Caves Road
Andheri East

Mumbai 93

Monday, March 3, 2014

இந்தியாவில் தானிய உற்பத்தி கூடி வருகிறதா? ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

கேள்வி பதில்

கனகராஜ்
சென்னை


கேள்வி
இந்தியாவில் தானிய உற்பத்தி கூடி வருகிறதா? ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

பதில்
தானிய உற்பத்தி கூடி வருகிறதா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் கூடி வருகிறது.

உதாரணமாக அரிசி உற்பத்தி 2007-08ம் வருடத்தில் 96.69 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2012-2013ம் வருடத்தில் 101.80 மில்லியன் டன்னாக இருக்கிறது.
கோதுமை உற்பத்தி 2007-08ம் வருடத்தில் 78.57 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2012-2013ம் வருடத்தில் 92.30 மில்லியன் டன்னாக இருக்கிறது.
பருப்பு வகைகளின்  உற்பத்தி 2007-08ம் வருடத்தில் 14.76மில்லியன் டன்னாக இருந்தது. அது 2012-2013ம் வருடத்தில் 17.58மில்லியன் டன்னாக இருக்கிறது.
ஏற்றுமதி என்று பார்க்கும் போது அரிசி, கோதுமை ஆகியவைகளுக்கு வாய்ப்புக்கள் இருக்கிறது. அரசாங்கத்தின் அறிவிப்புக்களின் படி அதாவது ஏற்றுமதி செய்யலாம், செய்யக்கூடாது என்ற பின்பற்றுதல்களின்படி ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. பருப்பு வகைகளில் நாம் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. ஆதலால், இறக்குமதி தான் நடைபெற்றுவருகிறது.

Sunday, March 2, 2014

ஏற்றுமதி ஆர்டர்களை இந்திய ரூபாயில் போடலாமா ?

ஏற்றுமதி ஆர்டர்களை இந்திய ரூபாயில் போடலாமா ?


ரகுபதி
உலகம்பட்டி

கேள்வி
ஏற்றுமதி ஆர்டர்களை இந்திய ரூபாயில் போட்டால் நமக்கு டாலர் இந்திய ரூபாய் மதிப்பு ஏறி இறங்கினால் கூட ப்ராபளம் இல்லையே? ஏன் அது போல செய்யக்கூடாது?

பதில்
தாராளமாகச் செய்யலாம். இந்திய அரசாங்கமும் காண்டிராக்ட்களை இந்திய ரூபாயில் போடுவதற்கு வழி வகை செய்துள்ளது. ஆனால் பல சமயங்களில் வெளிநாட்டு இறக்குமதியாளர் ஒத்துக் கொள்ள மாட்டார். ஏனெனில் டாலர் ரூபாய் ஏற்ற தாழ்வுகளை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமே அதனால் தான்? முயற்சி செய்து பாருங்கள்.


சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும். 
http://sethuramansathappan.blogspot.com/2014/02/blog-post_28.html


தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி www.learningexports.com சென்று பாருங்கள் 




Saturday, March 1, 2014

கார்பெட் ஏற்றுமதி


கார்பெட் ஏற்றுமதி

இந்திய கார்பெட்கள் உலகளவில் பிரசித்தம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இந்திய கார்பெட்களால் கவரப்பட்டு தங்களுடனே கார்பெட்கள் வாங்கிச் செல்பவர்களும் உண்டு. சென்ற வருடம் 808 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அது இந்த வருடம் 1 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது (கிட்டதட்ட 5400 கோடி ரூபாய்கள்).
ஒரு நல்ல காஷ்மீர் கார்பெட் என்ன விலை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சராசரி விலை என்று வைத்துப் பார்த்தால் சுமார் 40,000 ரூபாய் வரை இருக்கும்.


சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்
சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்