Thursday, May 31, 2012

ஜவுளி ஏற்றுமதி வருடத்திற்கு ரூ.150,000 கோடி


ஜவுளி ஏற்றுமதி வருடத்திற்கு ரூ.150,000 கோடி 


சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், சென்ற நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, 1,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருத்திருக்கிறது. இந்திய ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அதிகளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகளால் ஐரோப்பிய நாடுகளில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கான தேவை குறைந்து போயுள்ளது. 

இருப்பினும், தென் அமெரிக்கா மற்றும் புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள ஒரு சில நாடுகளுக்கு இவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,300 கோடி டாலராக (65 ஆயிரம் கோடி ரூபாய்) இருக்கிறது.  

டெனிம் துணி வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, அதிகளவில் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

Wednesday, May 30, 2012

ஏற்றுமதி கேள்வி பதில் 


ஏற்றுமதி கேள்வி பதில் 


ராமசாமி
கரூர்

கேள்வி

வங்கி கியாரண்டிக்கும், ஸ்டாண்ட் பை லெட்டர் ஆப் கிரிடிட்க்கும் (எஸ.பி.எல்.சி.,) என்ன வித்தியாசம்? 

பதில்

பெரிய வித்தியாசங்கள் இரண்டுக்கும் அதிகம் இல்லை. கியாரண்டி என்ற பதம் பல நாடுகளில் உபயோகப்படுத்தப்படுவது இல்லை. குறிப்பாக அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளில். ஆகவே அங்கெல்லாம் ஸ்டாண்ட் பை லெட்டர் ஆப் கிரிடிட்க்கும் 
(எஸ் .பி.எல்.சி.,) உபயோகப்படுத்தப்படுகிறது. கியாரண்டிக்கு உள்ள அகில உலக ரூல்கள் தனி, அதாவது யூனிபார்ம் ரூல்ஸ்  பார் கியாரண்டியின் கீழ் வரும். ஸ்டாண்ட் பை லெட்டர் ஆப் கிரிடிட்க்கும் (எஸ்.பி.எல்.சி.,), இண்டர்நேஷனல் ஸ்டாண்ட் பை பிராக்டிஸ்  98ன் கீழ் வரும். 

Tuesday, May 29, 2012

இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்த வார ஏற்றுமதி இணையதளம் 


பேஷன் உலகத்தை உங்களுக்கு அருகில் காட்டும் இன்னொரு இணையதளம். தற்போதைய பேஷன்கள் என்னென்ன?, அந்தத் துறையில் வேலை வாய்ப்புக்கள், புதிய டிரண்ட்கள், ஈ மார்க்கெட்டிங் என்று பேஷன் துறையை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் ஒரு இணையதளம். பேஷன் துறையில் இருப்பவர்கள் தினசரி சென்று பார்க்க வேண்டிய இணையதளம்.

பங்களாதேஷிலிருந்து இறக்குமதிக்கு பூடான் தடை, இந்தியாவிற்கு லாபம்


பங்களாதேஷிலிருந்து இறக்குமதிக்கு பூடான் தடை, இந்தியாவிற்கு லாபம்

பங்களாதேஷிலிருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்ய பூடான் தடை செய்துள்ளது. இதில் ஜுஸ்  மற்றும் எனர்ஜி டிரிங் ஆகியவைகளும் அடங்கும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு தடை இல்லை. ஆதலால் இந்தப் பொருட்கள் இந்தியாவிலிருந்து செல்லும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. முயற்சி செய்யுங்கள்.

Monday, May 28, 2012

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடி


வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடி


கடந்த 2011-12ம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என அபெடா தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி சுமார் 43500 கோடி ரூபாயாக இருந்தது. வேளாண் பொருட்கள் பிரிவில், பழங்கள், காய்கறிகள், பாசுமதி அரிசி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. 

மலர்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், பயிறு வகைகள், மூலிகை மருந்துகள், மூலிகை தாவரங்கள், கொத்தவரை உள்ளிட்ட 14 வகை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில், 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்திருக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, May 20, 2012

ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க்

ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க் 

இந்த ப்ளாக் யை தொடங்கும்போது தமிழ்மணம் இணையதளத்தில் ரேங்க் 1450 ஆக இருந்தது. கிட்டதட்ட 10 மாதத்தில் 800 ரேங்க் குறைந்து தற்போது 643 என்ற அளவில் இருக்கிறது. இது வாசகர்கள் இந்த ப்ளாக்குக்கு கொடுக்கும் வரவேற்பு. தங்கள் ஆதரவுக்கு நன்றி.  

அன்புடன் சேதுராமன் சாத்தப்பன், மும்பை 

மாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியா முதலிடம் பிடிக்கும்


மாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியா முதலிடம் பிடிக்கும்

உலகளவில், வரும் 2013ம் ஆண்டு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், நியாயமான விலையில், தரமான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.அவற்றின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா, தரமான மாட்டிறைச்சியை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், அடுத்த ஆண்டில், இந்தியா, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. 

Saturday, May 19, 2012

விலை வீழ்ச்சியால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு


விலை வீழ்ச்சியால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு

மஞ்சள் விலை வீழ்ச்சியால், அதன் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் மஞ்சள் உற்பத்தியில், இந்தியா 78 சதவீதம் பெற்று  முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து சீனா (8 சதவீதம்), மியான்மர் (4 சதவீதம்), நைஜீரியா (3 சதவீதம்) மற்றும் வங்கதேசம் (3 சதவீதம்) ஆகியவை உள்ளன.

இந்நிலையில், சென்ற ஆண்டில் மஞ்சள் விலை 75 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. தற்போது, ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு கிலோ மஞ்சள் 33-34 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 167-170 ரூபாயாக இருந்தது.

மஞ்சள் விலை குறைந்ததால், அதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்திய மஞ்சளுக்கு மிகப் பெரிய சந்தையாக ஐக்கிய அரபு எமிரேட் விளங்குகிறது. அடுத்த இடங்களில் மலேசியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

மஞ்சள் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்திய மஞ்சளில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட "கர்குமின்' என்ற பொருள்தான் அதன் விலையை நிர்ணயிக்கிறது. இந்திய மஞ்சளில் இது அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாகவே, சர்வதேசச் சந்தையில் இந்திய மஞ்சளுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

Wednesday, May 16, 2012

ரோஜா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி


ரோஜா உற்பத்தி  மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி


ஆசியாவில் அதிகமான ரோஜா மலர் சாகுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் திறந்த வெளியிலும், பசுமை கிடங்கு முறையிலும் விவசாயிகள், 5,000 ஹெக்டேரில் ஆண்டு முழுவதும் ரோஜா மலர் சாகுபடி செய்கின்றனர்.

ஓசூர் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால், ரோஜா உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ரோஜாவின் தரம் குறைந்ததால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. 

பசுமை கிடங்குகளில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. திறந்த வெளியில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், உள்ளூர் பண்டிகைகள், முகூர்த்த நிகழ்ச்சிகளை குறி வைத்து வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

தற்போது செடிகளில் உற்பத்தியாகும் பூக்கள் தரமற்றதாக உள்ளன.அதனால், தற்போது ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாட்டு ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமே தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த காலத்தில், காம்புடன் கூடிய ஒரு மலர் 45 முதல் 50 செ.மீ., வரை இருந்தது. தற்போது பூக்கள் சிறுத்தும், காம்பு கட்டையாகவும் இருக்கிறது. அதனால், தற்போது முற்றிலும் வெளிநாட்டு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 

Tuesday, May 15, 2012

இந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக மவுசு


இந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக மவுசு

இந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த ஆன்டில் நிதியாண்டில், இந்தியாவிலிருந்து அதிக அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொண்ட நாடுகளில், வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 1,742 கோடி ரூபாய் மதிப்பிற்கான வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இதில், வங்கதேசத்திற்கு 572 கோடி ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவிற்கு (463 கோடி ரூபாய்), இலங்கைக்கு (176 கோடி ரூபாய்), ஐக்கிய அரபு எமிரேட் (166 கோடி ரூபாய்), இந்தோனேசியா (90 கோடி ரூபாய்), பாகிஸ்தான் (54 கோடி ரூபாய்), சிங்கப்பூர் (29 கோடி ரூபாய்), நேபாளம் (25 கோடி ரூபாய்), ஓமன் (23 கோடி ரூபாய்) மற்றும் வியட்னாம் (21 கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

Sunday, May 13, 2012

இந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி


இந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி

இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியுள்ளது. இதையடுத்து, ஈரானுடன்  பிரச்சனையை சந்தித்து வந்த இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு,சீனா புதிய சந்தை வாய்ப்பை வழங்கியுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகம் உற்பத்தியாகிறது. சென்ற வருடம் பாசுமதி அரிசி ஏற்றுமதி 25 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வருடத்தில் இது 22 லட்சம் டன்னாக இருந்தது.

உள்நாட்டு சந்தையில், ஒரு டன் பாசுமதி அரிசி 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது, சீனாவிற்கும் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால் ஏற்றுமதி இன்னும் கூடும்.



Saturday, May 12, 2012

நாட்டின் தானிய ஏற்றுமதி கூடும்


நாட்டின் தானிய ஏற்றுமதி கூடும் 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் தானிய உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாடு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும்.

சில வருடங்களுக்கு முன்பு உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து போனதை அடுத்து, மத்திய அரசு, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு களாக, நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாக உள்ளது.

சென்ற செப்டம்பர் மாதத்தில், கோதுமை மற்றும் சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

அண்மைக் காலமாக, நம் நாடு, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு நாடுகளுக்கு, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. வங்க தேசத்திற்கு, குறைந்தளவில், கோதுமையும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 120 கோடிமக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு, ஆண்டுக்கு 7.60 கோடி டன் கோதுமையும், 9 கோடி டன் அரிசியும் தேவைப் படுகிறது. அதே சமயம், இவைகளின் உற்பத்தி நமக்கு தேவையை விட அதிகரித்துள்ளது. 

Wednesday, May 9, 2012

வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் பொருட்களை எப்படி மார்க்கெட்டிங் செய்வது



இந்த வார இணையதளம்


சிறிய பிசினஸ்களுக்கு உள்ள ப்ராபளமே எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பது தான். குறிப்பாக வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் தங்களுடைய பொருட்களை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பது குறித்துத் தான். பெரிய கம்பெனிகளுக்கு இந்த ப்ராபளம் இல்லை. மிகுந்த பொருட்செலவில் மார்க்கெட்டிங் டிவிஷனே துவங்கி அதன் மூலம் தங்கள் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து விடலாம், விளம்பரங்களும் பெரிய அளவிலும் செய்யலாம். இந்த இணையதளம் சிறிய பிசினஸ்கள் தங்கள் வியாபாரத்தை எப்படி உலகளவில் கொண்டு செல்லலாம் என்பதை உங்களுக்கு விளக்கும் இணையதளம். சிறிது நேரம் செலவழித்து படிக்க / பார்க்க வேண்டிய இணையதளம்.

Tuesday, May 8, 2012

எனக்கு வெளிநாட்டிலிருந்து சரக்கு வேண்டும் என்று கேட்டுள்ளவர் எப்.ஒ.பி., லண்டன் என்று கேட்டுள்ளார். எப்படி விலை நிர்ணயிப்பது?


கேள்விக்கு என்ன பதில்?

சுதர் ராஜ்

கேள்வி
எனக்கு வெளிநாட்டிலிருந்து சரக்கு வேண்டும் என்று கேட்டுள்ளவர் எப்.ஒ.பி., லண்டன் என்று கேட்டுள்ளார். எப்படி விலை நிர்ணயிப்பது?

பதில்
எப்.ஓ.பி. லண்டன் என்று வராது. எப்.ஓ.பி., என்றால் சரக்குகளை நீங்கள் கப்பலில் ஏற்றி அனுப்பியுடன் உங்கள் பொறுப்பு முடிந்தது. ஆதலால் எப்.ஓ.பி., மும்பை அல்லது சென்னை என்று தான் வரும். எப்.ஓ.பி., என்றால் ப்ரி ஆன் போர்டு என்று அர்த்தம், அதாவது சரக்குகளை துறைமுகம் வரை எடுத்துச் செல்ல வேண்டியது உங்கள் கடமை, மேலும் சரக்குகளை கப்பலில் தளத்தில் வைப்பது வரையான செலவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். சரக்குக் கட்டணம், இன்சூரன்ஸ்  நீங்கள் செலுத்தத் தேவையில்லை.

Sunday, May 6, 2012

விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?


விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?

தட்பவெப்ப நிலை காரணமாக இந்த வருடம் மாங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியா முழுவது இதே நிலை தான். இந்தியாவில் அதிகம் மாம்பழம் உற்பத்தி செய்யும் மஹாராஷ்டிராவிலேயும் இதே நிலை தான். அங்கு அதிகமாக விளையும் அல்போன்சா மாம்பழம் இந்த வருடம் 5 டஜன்கள் 5000 ரூபாய் வரை சென்றது. தற்போது 2000 ரூபாய் வரை வந்து நிற்கிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைச்சல் குறைவால்,  மாங்காயின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக பெங்களூரா, தோத்தாபுரி, மல்கோவா உள்ளிட்ட ரக மா அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊறுகாய் தயாரிப்பதற்கு உகந்த ரகம் பீத்தர் ஆகும். இதுவும் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது . 

இந்தாண்டு தட்பவெப்ப நிலை காரணமாக, மா மரங்களில் பூக்கள் பூப்பது தாமதமானது. இதனால், ஊறுகாய் மாங்காய் அறுவடையும் தாமதமாகியுள்ளது. விலையும் கூடியுள்ளது. சீ சீ இந்த மாம்பழம் புளிக்கும் என்று நிலைக்கு போகாமல் நம்மை மாம்பழங்கள் விலை குறைந்து நம்மை மகிழ்விக்க வேண்டும். விலை கூடுதலாலும், விளைச்சல் குறைவாலும் இந்த வருடம் ஏற்றுமதி குறைய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

Friday, May 4, 2012

மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது


மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது

தமிழ்நாடு மக்காச்சோளம் அதிகம் தயாரிக்கும் மாநிலங்களில் ஒன்று. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடக்கிறது. 10,000 டன் மக்காச்சோளம், பிஸ்கட், மாவு உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் தயாரிக்க வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் கறிக்கோழி தீவனத்திற்காக கோழிப் பண்ணைகளுக்கும் அனுப்பப்படுகிறது. ஏற்றுமதிக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உள்நாட்டிலேயே போதுமான தேவை இருப்பதால் வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அறுவடை செய்தபின், மீதமாகும் சோள தட்டை மாட்டுக்கு தீவனமாக போடப்படுகிறது. விறகாகவும் பயன்படுத்தப்படுகிறது.  

Wednesday, May 2, 2012

வெள்ளை பூண்டு ஏற்றுமதிக்கு வாய்ப்பு


வெள்ளை பூண்டு ஏற்றுமதிக்கு வாய்ப்பு

வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வெள்ளைப் பூண்டு ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. பூண்டு உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து, பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு  அனுப்பப்படுகிறது. அங்குள்ள கூட்டுறவு சங்கங்கள் விலை நிர்ணயிக்கின்றன. தமிழகத்தில், தேனி வடுகப்பட்டி, திண்டுக்கல் வத்தலக்குண்டு, கோவை மேட்டுப்பாளையத்தில் பூண்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்கிறது. இந்தியாவில் இருந்து, மே முதல், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், மலேசியாவிற்கு பூண்டு ஏற்றுமதி துவங்கிவிடும்.