Tuesday, December 23, 2014

கோவையில் முதன் முறையாக தமிழில் ஏற்றுமதி கருத்தரங்கு: மகளிர் குழுவுக்கு இலவச பயிற்சி

கோவையில் முதன் முறையாக தமிழில் ஏற்றுமதி கருத்தரங்கு: மகளிர் குழுவுக்கு இலவச பயிற்சி

Advertisement

பதிவு செய்த நாள்

24டிச
2014 
00:12
'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?' மற்றும் 'ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?' என்ற தலைப்பில், கோவையில் முதன் முறையாக, தமிழில் கருத்தரங்கு நடக்கிறது. இதில், ஏற்றுமதி தரத்தில் பொருள் தயாரிக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
புது நம்பிக்கை:

மும்பையில் இயங்கி வரும் முன்னணி ஏற்றுமதி பயிற்சி நிறுவனமான, 'இன்ஸ்டிடியூட் பார் லேர்னிங் எக்ஸ்போர்ட்ஸ்' விடுத்துள்ள அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின், 'மேக் இன் இந்தியா' அறிவிப்புக்கு பிறகு, இந்தியாவின் உற்பத்தி துறையில் புதிய சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. சிறு பொருளை உற்பத்தி செய்பவர் மத்தியில் கூட புது நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. உலக நாடுகளிடம் இந்திய வர்த்தகர்கள் மீதான தனி கவனம் பதிந்துள்ளது. தென்னிந்தியாவின் வர்த்தக கேந்திரங்களாக, தமிழகத்தின் முக்கிய பொருளாதார மையங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புதிய தலைமுறை தொழிலதிபர்கள், சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வர்த்தகம், நிதி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் போன்றோருக்கு, ஏற்றுமதி தொழில் குறித்த விழிப்புணர்வு தேவைப்படும் மிகச் சரியான தருணம் இது. இதை கருத்தில் கொண்டு, கோவையில் முதன் முறையாக, 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?' மற்றும் 'ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?' என்ற தலைப்பில், இனிய தமிழில் ஒரு நாள் கருத்தரங்கம் நடக்க இருக்கிறது.

புதிய மார்க்கெட்டிங்:

ஏற்றுமதி தொழில் தொடங்கியவுடன், புதையல் போல நமக்கு டாலர்களை கொட்டிக் கொடுக்காது. முறையான பயிற்சி பெற்று, தவறில்லாமல் தொழில் செய்யும்போது, ஏற்றுமதியில் லாபம் பார்க்கலாம். தொழில் சிந்தனையுள்ள இளைஞர்களும், சுயதொழில், சிறுதொழில் புரிபவர்களும் ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதி தொழிலை தவறில்லாமல் தெரிந்து கொண்டு, அதில் வெற்றிகரமாக ஈடுபடவும், புதிய மார்க்கெட்டிங் வாயில்களை ஏற்றுமதியாளர்கள் தேடித் திறக்க உதவும் வகையில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட இருக்கிறது. ஏற்றுமதி டாக்குமென்டேஷன் விதிகள் பற்றிய சிறந்த பயிற்சியாளரும், ஏற்றுமதி மற்றும் பங்குச் சந்தை வர்த்தகம் குறித்த கட்டுரைகளை முன்னணி தமிழ் நாளிதழ்கள், வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவரும், தமிழகம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுமதி பயிற்சி அளித்து வருபவருமான, மும்பையின் பிரபல வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் இந்த பயிற்சியை அளிக்க உள்ளார்.

இலவச அனுமதி:

கோவை பீளமேட்டில் உள்ள, 'பி.எஸ்.ஜி. டெக்.,' கல்லூரி அரங்கத்தில், வரும் டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கருத்தரங்கு நடக்கிறது. பயிற்சி கட்டணம், 2,500 ரூபாய். மதிய உணவு, பயிற்சி புத்தகம் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு, 50 சதவீத கட்டண சலுகை. ஏற்றுமதி தரத்தில் பொருள் தயாரிக்கும் மகளிர் சுய உதவி குழு பெண்கள், 20 பேருக்கு, இலவசஅனுமதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 098696 - 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கோவை விஜயா பதிப்பகம், இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது. விஜயா பதிப்பக கிளைகளில் நேரில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் - 

Sunday, December 14, 2014

Export Programme in Kovai on 28th - Dinamalar advt


Advt in Today's Kovai Dinamalar for the programme. Thanks Dinamalar for the sponsorship. It is great to associate with Dinamalar.



Sunday, December 7, 2014

கோவையில் டிசம்பர் 28 ஞாயிறன்று ஏற்றுமதி செமினார்

ஏற்றுமதி, பங்குச் சந்தை சார்ந்த கட்டுரைகளை, 15 ஆண்டுகளாக எழுதியும், பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி' என்ற கருத்தரங்கை, கோவையில் முதன் முறையாக தமிழில் நடத்துகிறார்.

சிறு தொழில் வணிகம் துவங்கி, முன்னணி நிறுவனங்கள் வரை, எல்லாருமே தொழில் வியாபாரத்தில் முன்னணி இடத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்திய கரன்சிகளை பார்த்து பூரித்து தொழில் செய்யும் பலருக்கும், அமெரிக்க டாலர்களையும், உலக கரன்சிகளையும் கொட்டித்தரும் ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு உண்டு. ஏற்றுமதி என்பது, வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யும் தொழில் தான். ஆனால் அது, தொழில் துவங்கியவுடன் புதையல் போல டாலர்கள் கொட்டாது. முறைப்படி, தவறில்லாமல், தெளிவான வெளிநாடுகளின் சட்ட, திட்டங்களை புரிந்து கொண்டு செய்தால் ஏற்றுமதியில் ஜெயிக்கலாம். இறக்குமதி செய்ய நினைப்போர், பொருட்களை மார்கெட்டிங் செய்வது எப்படி என்று தெரியாமல் உள்ளனர். இதில் தான், பல தடங்கல்கள் வருகின்றன. இவற்றைப் போக்கும் விதமாக, ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி மற்றும் இணையம் மூலம் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என, ஏற்றுமதி, பங்குச்சந்தை சார்ந்த கட்டுரை களை, 15 ஆண்டுகளாக எழுதி, பல நாடுகளிலும் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், கோவையில் வரும் டிசம்பர் 28ம் தேதி ஞாயிறன்று  விவரிக்க உள்ளார். இந்த கருத்தரங்கம், முற்றிலும் தமிழில் நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடக்கும். பயிற்சிக் கட்டணம், 2,500 ரூபாய். தேநீர், மதிய உணவு, பயிற்சி புத்தங்கள் இதில் அடங்கும்.

இலவச அனுமதி

ஏற்றுமதி தரத்துக்கு பொருட்களை தயாரித்து, ஆனால், ஏற்றுமதியில் இதுவரை ஈடுபடாமல் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த, 20 பேருக்கு, இலவச அனுமதியுடன் பயிற்சி தரப்பட உள்ளது. மாணவர்களுக்கு, 50 சதவீத கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 'தகுதி உடைய மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மும்பை எண்ணுக்கு தொடர்பு கொண்டு (எண்: 09869616533 கணேசன் ) முன்பதிவு செய்யலாம்.

கருத்தரங்கம் கோவையில் கீழ்கண்ட இடத்தில் நடைபெறுகிறது:
பி.எஸ்.ஜி. காலேஜ் ஆடிட்டோரியம், பீளமேடு, கோவை.



Friday, October 24, 2014

இந்த வார இணையதளம் http://www.learningexports.com


இந்த வார இணையதளம்



தமிழில் ஏற்றுமதி சம்பந்தமாக விரிவாக தபால் மூலம் படிக்க, ஏற்றுமதி ஆவணங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தால் முழு விபரங்கள் கிடைக்கும்.


காயர் பொருட்கள் ஏற்றுமதி


காயர் பொருட்கள் ஏற்றுமதி


முன்பெல்லாம் காயர் ஏற்றுமதி என்றால் மிதியடிகள் 80 சதவீதம் இருக்கும். ஆனால் தற்போது அவை காயர் ஏற்றுமதியில் 50 சதவீதம் அளவே பங்கு வகிக்கின்றன. காயர் ஏற்றுமதி என்றால் கேரளா எல்லோருக்கும் உடனடியாக ஞாபகம் வரும். கேரளாவில் என்.சி.ஜான் அண்ட் சன்ஸ் கம்பெனி காயர் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

Thursday, October 23, 2014

மாட்டிறைச்சி ஏற்றுமதி


மாட்டிறைச்சி ஏற்றுமதி


மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. அதாவது எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியில். பசு மாட்டு இறைச்சி ஏற்றுமதி இந்தியாவிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் இந்தியா, பிரேசில் நாட்டை விட அதிகமாக ஏற்றுமதி செய்து முதலிடத்தைப் பெற்றது. சென்ற வருடம் 1.7 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சி இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டிலும் 2.1 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சி உபயோகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

அபிடா நிறுவன இணையதளத்திற்கு சென்றால் இன்னும் அதிக விபரங்கள் கிடைக்கும்.

Sunday, October 19, 2014

விவசாய உபகரணங்கள் இறக்குமதி


விவசாய உபகரணங்கள் இறக்குமதி


நெதர்லாந்தை சேர்ந்த ஸ்டீன்க்ஸ் சர்வீசஸ் என்ற கம்பெனி விவசாயத்திற்கு உதவும் பல உபகரணங்களைத் தயாரித்து வருகிறது. இது விவசாய நாடான இந்தியாவிற்கு பலவிதமாகவும் உதவும். இவர்களின் இணையத்தளமான http://www.steenks-service.nl/site/en  சென்று பாருங்கள். இறக்குமதி செய்து விற்பதற்கு யோசிக்கலாம்.

Saturday, October 18, 2014

கார்ன் ஏற்றுமதி


கார்ன் ஏற்றுமதி


சாதாரணமாக மே, ஜுன் மாதங்களில் பீகாரிலிருந்து கார்ன் ஏற்றுமதி தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவலாக இருக்கும். சுமார் 500,000 டன்கள் வரை இருக்கும். இந்த முறை அங்கு மழை பெய்ததால் ஏற்றுமதி தடைப்படுகிறது. இது பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்த நாடுகளில் இந்த வருடம் பம்பர் விளைச்சல். ஆதலால் அங்கிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கியுள்ளது. பெய்தும் கெடுக்கிறது, பெய்யாமலும் கெடுக்கிறது.

ஏற்றுமதி செய்வதற்கு, உள்நாட்டில் விற்பதற்கு லிச்சி பழங்கள் எங்கு வாங்கலாம்?

அன்பழகன்

சென்னை



கேள்வி

ஏற்றுமதி செய்வதற்கு, உள்நாட்டில் விற்பதற்கு  லிச்சி பழங்கள் எங்கு வாங்கலாம்?

பதில்



இந்தியாவில் பீகார் தான் லிச்சி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் உற்பத்தியில் 70 சதவீதம் இந்த மாநிலத்தில் தான் செய்யப்படுகிறது. குறிப்பாக ஐ.ஜி. இண்டர்நேஷனல் என்ற கம்பெனி தான் இந்தியாவில் லிச்சி பழங்களை அதிகம் விற்பனை செய்து வருகிறது. அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Thursday, October 9, 2014

இந்த வார இணையதளம்

இந்த வார இணையதளம்



நெதர்லாந்தை சேர்ந்த செர்தான் என்ற கம்பெனி பசுமைக் குடில்கள் அமைப்பதில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் மலர்கள், காய்கறிகள் என்று தற்போது பசுமைக் குடில்களில் வளர்ப்பது அதிகம் ஆகிவருகிறது. இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தால் பல பசுமைக் குடில்கள் பற்றி பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும்.

Wednesday, October 8, 2014

செவன் ஸ்டார் ப்ரூட்ஸ்


செவன் ஸ்டார் ப்ரூட்ஸ்


செவன் ஸ்டார் ப்ரூட்ஸ் என்ற கம்பெனி இந்தியாவிலிருந்து அதிக அளவில் பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற வருடம் அதிகம் அளவில் திராட்சை ஏற்றுமதி செய்த கம்பெனி என்ற பெயரை எடுத்துள்ளது. இது தவிர மாதுளம்பழம், மாம்பழங்களும் அதிகம் அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலிருந்து முதல் முறையாக குஜராத்தின் கேசர் மாம்பழத்தை ஏற்றுமதி செய்த பெருமையை பெறுகிறது. இதை கடல் மூலமாக முழுவதும் குளிரூட்டப்பட்டு  கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்டெய்னர் மூலமாக யு.கே. யிலுள்ள பவ்பார்ட் இம்போர்ட்ஸ் என்ற கம்பெனிக்கு செய்துள்ளது. இந்த கம்பெனி தான் யு.கே.யிலுள்ள அனைத்து மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Tuesday, October 7, 2014

மதுரை ஏர்போர்ட்டிலிருந்து கார்கோ ஏற்றுமதிக்கு அனுமதி


மதுரை ஏர்போர்ட்டிலிருந்து கார்கோ ஏற்றுமதிக்கு அனுமதி


இதுவரை மதுரை பகுதிகளிலிருந்து ஏற்றுமதி செய்பவர்கள் திருவனந்தபுரம், கொச்சின், திருச்சி, சென்னை, கோவை என்று சென்று தான் ஏற்றுமதி சரக்குகளை ஏற்றுமதி செய்து வந்தார்கள். ஆனால், தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து சரக்குகளை ஏற்றுமதி செய்யலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளது. இது ஏற்றுமதி செலவுகளைக் குறைக்கும். மதுரை பகுதிகளிலிருந்து காய்கறி, பூ, பழங்கள், இஞ்சினியரிங் பொருட்கள், ஹாண்ட்லூம், ஆட்டோமொபைல் பார்ட்ஸ், கிரானைட் ஆகியவை ஏற்றுமதி ஆகிறது.

Monday, October 6, 2014

கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு மார்க்கெட் டெவலப்மெண்ட் அசிஸ்டன்ஸ்

கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு மார்க்கெட் டெவலப்மெண்ட் அசிஸ்டன்ஸ்


இந்தியப் கார்மெண்ட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்ய கண்காட்சிகளில் பங்குபெறுவது மிகவும் முக்கியம். அப்படி உலக நாடுகளில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெற இதுவரை 15 கோடி ரூபாய் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது 30 கோடி ரூபாய் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் கார்மெண்ட் ஏற்றுமதியை கூட்டுவதற்கு உதவும். குறிப்பாக திருப்பூர்கார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  

Sunday, October 5, 2014

மரத்திலான கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அத்தாட்சி

மரத்திலான கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அத்தாட்சி


கைவினைப் பொருட்கள் இந்தியாவிலிருந்து வருடத்திற்கு
17970 கோடி ரூபாய் மதிப்பிற்கு செய்யப்படுகிறதுஇதில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு மரத்திலான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றனஅனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதுஅப்படி அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்களில் இருந்து செய்யப்படும் மரத்திலான கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு பல நாடுகளில் தடை இருக்கிறது.இதை தவிர்க்க இந்தியா “விரிக்ஷ்” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் அனுமதியுடன் வெட்டப்பட்ட மரங்களிலிருந்து தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகுந்த அத்தாட்சிகள் பெற்று அதற்கான விரிக்ஷ் என்ற சான்றிதழை வழங்கவுள்ளதுஇது பல நாடுகளில் நமது மரத்திலான கைவினைப் பொருட்கள் விற்பதற்கு உதவும்.

Saturday, September 20, 2014

கத்தாரும், இந்திய பழங்கள், காய்கறிகளும்

கத்தாரும், இந்திய பழங்கள், காய்கறிகளும்

கத்தார் நாட்டுக்கு அதிக அளவு பழங்கள், காய்கறிகள் அனுப்புவதில் முதலிடம் வகிப்பது இந்தியா தான். அங்கு  அதிக அளவு இந்தியர்கள் இருப்பதும், அந்த நாடு அருகில் இருப்பது தான் காரணம்.

Thursday, September 18, 2014

கென்யாவிற்கு ஏற்றுமதி

கென்யாவிற்கு ஏற்றுமதி

கென்யா நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது. கென்யா நாடு பல பொருட்களை இறக்குமதி செய்து தான் உபயோகித்து வருகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்து வரும் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஒரு தீர்வு. ஆதலால் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது.
2012 ம் வருடத்தில் கென்யா 195 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 149 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.

2012 ம் வருடத்தில் கென்யா 167 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 143 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.

 

மதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அது வெளிநாடுகளில் எந்த வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது?

காசிராம்

சூளைமேடு


கேள்வி

மதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அது வெளிநாடுகளில் எந்த வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது?

 

பதில்

அது நம்ம ஊர் மாதிரி தலையில் சூடிக்கொள்ள அதிகம் பயனபடுத்தப்படுவதில்லை. அங்கு கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது அல்லது பூவிலிருந்து வாசனைத் திரவியங்கள் எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.


Wednesday, September 17, 2014

ஒரிசாவிலிருந்து கடல் பொருட்கள்

ஒரிசாவிலிருந்து கடல் பொருட்கள்

ஒரிசாவிலிருந்து கடல் பொருட்கள் ஏற்றுமதி 20 சதவீதம் கூடியுள்ளது. 2012-13ம் வருடத்தில் 903 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது. இது சென்ற வருடத்தில் 792 கோடியாக இருந்தது. ஷிரிம்ப் மீன் வகைகள் தாம் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. அதுவும் அதிக அளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகின்றது.

இந்தோனிஷியா இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதில் சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா?


கண்மணி
சென்னை

கேள்வி
இந்தோனிஷியா இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதில் சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா?

பதில்

நல்ல கேள்வி. இப்படி எங்கெங்கு வாய்ப்புக்கள் இருக்கிறது என்று பார்த்து அந்த நாடுகளில் இறக்குமதியாளர்களை தேடுவது நல்லது. இந்தோனிஷியா, இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர்களாக இருந்தாலும் அதில் பெரும்பாலும் நிலக்கரி, பாமாயில் இறக்குமதியாக இருக்கிறது. சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புக்கள் பெரிதாக இல்லை.

Tuesday, September 16, 2014

ஜெ.சி.பி.

ஜெ.சி.பி.

ஜெ.சி.பி. என்றால் சின்ன குழந்தை கூட தமிழ்நாட்டில் சொல்லிவிடும். அந்த அளவிற்கு அந்த கம்பெனியின் மிஷின் கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கன்ஸ்டிரக்ஷன் மிஷனரி என்றால் இங்கிலாந்தில் உள்ள ஜெ.சி.பி. கம்பெனியை யாரும் மறக்க முடியாது. சென்ற வருடம் மட்டும் இந்தியாவில் 26000 மிஷின் கள் விற்பனை செய்துள்ளார்கள். இது அவர்களின் 30 சதவீதம் சேல்ஸ் ஆகும். ஆதலால் இந்திய விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும்  சேர்த்து ஜெய்ப்பூரில் தற்போது ஒரு பிளாண்ட் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Sunday, September 14, 2014

மெஹாடிரின்

மெஹாடிரின்

இஸ்ரேலில் உள்ள மெஹாடிரின் என்ற கம்பெனி பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்து வருகிறது. உலகத்தில் உள்ள பெரிய கம்பெனிகளில் இதுவும் ஒன்று. 8500 ஹெக்டேரில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்து வருகிறது. ஜெப்பா என்ற பிராண்டில் உலகளவில் விற்பனை செய்து வருகிறது. மெஹாடிரின் ஐரோப்பாவில் உள்ள ரீடெய்ல் செயின் களில்மிகப்பெரியதாகும். இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள். பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும்.

www.mehadrin.co.il

 

Saturday, September 13, 2014

கேரளாவுக்கு இறக்குமதி ஆகும் பழங்கள்

கேரளாவுக்கு இறக்குமதி ஆகும் பழங்கள்

கேரளத்தவர்கள் வாழைப்பழத்திற்கு அடிமையானவர்கள். அதற்கு தகுந்தது போல் அங்கு பல வகை வாழைப்பழங்கள் விளைகின்றது. ஆனால், தற்போது கேரளத்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து பழங்களை இறக்குமதி செய்து உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். சிலியிலிருந்து ஆப்பிள், எகிப்திலிருந்து ஆரஞ்சு, இஸ்ரேலிருந்து திராட்சை என்று தினசரி நிறைய இறக்குமதி ஆகின்றன.
ஒரு நாளைக்கு 40,000 பாக்ஸ் ஆப்பிள்கள், அதாவது 80,000 கிலோக்கள் இறக்குமதி ஆகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இது தவிர ஒரு நாளைக்கு 30 முதல் 35 லோடு வரை திராட்சை மஹாராஷ்டிராவிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் ஏற்றுமதி


எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் ஏற்றுமதி

எம்.எஸ்.எம்.இ. என்றால் என்ன? மீடியம், சுமால், மைக்ரோ எண்டர்பிரைசஸ் என்று அர்த்தம். அதாவது மீடியம் சைஸ் கம்பெனிகளுக்கு கீழே வருபவை. இந்த வகை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிக்கின்றன. 

சிறிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய முடியுமா என்ற கேள்வி பல தடவைகள் என்னிடம் கேட்கப்படுகிறது. இந்தியாவின் 40 சதவீத ஏற்றுமதி சிறிய கம்பெனிகளால் தான் செய்யப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது என்று.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் பங்கு ஏற்றுமதியில் அதிகம் இருப்பதால் அதை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசாங்கம் ஒரு கமிட்டி நிர்ணயித்துள்ளது.

உலத்தின் பாதி மாங்காய் உற்பத்தி இந்தியாவில்


உலத்தின் பாதி மாங்காய் உற்பத்தி இந்தியாவில்


உலகத்தின் பாதியளவு மாங்காய் உற்பத்தி இந்தியாவில் நடக்கின்றது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. அது தான் உண்மை.இந்தியா வருடத்திற்கு10.9 மில்லியன் டன்கள் மாங்காய் உற்பத்தி செய்கிறது. ஆனால் ஏற்றுமதி மிகவும் குறைவு.

Thursday, September 11, 2014

பாமாயில் அதிக அளவில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது?

ராமசுவாமி
இந்தூர்

கேள்வி

பாமாயில் அதிக அளவில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது?

பதில்

உலகிலேயே அதிக அளவு பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தோனிஷியா, மலேஷியா ஆகும். இந்தியாவில் இந்த இரண்டு நாடுகளிலிருந்துமே இறக்குமதி செய்தாலும், இந்தோனிஷியாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் பரிட்சாத்த முறையில் ஆந்திராவில் பாம் மரங்கள் வளர்க்கப்பட்டு பாமாயில் எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

 

ஏற்றுமதி உதவும் இணையதளம்


ஏற்றுமதி உதவும் இணையதளம்

www.perishablenews.com

 

எளிதில் அழுகக்கூடிய அல்லது கெட்டுபோகக்கூடிய பொருட்களின் ஏற்றுமதி, உற்பத்தி, பேக்கிங் ஆகியவைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய இணையதளம். பேக்கரி, மலர்கள், மாமிசம், ரீடெய்ல் துறையில் உள்ள ப்ரெஷ் உணவு வகைகள் ஆகியவை பற்றி ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியானது. சென்று பாருங்கள்.

 

Wednesday, September 10, 2014

பவர் செக்டார் ஏற்றுமதி

பவர் செக்டார் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து பவர் செக்டார் சம்பந்தமான ஏற்றுமதிக்கு தென் ஆப்பிரிக்காவில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. இதுவரை அங்கு ஐரோப்பிய நாடுகள் தாம் ஆதிக்கம் செய்து வந்தன. தற்போது இந்திய கம்பெனிகளுக்கு அங்கு நிறைய வாய்ப்புக்கள் வருகின்றன. தற்போது வருடத்திற்கு சுமார் 12,500 கோடி ரூபாய்க்கு அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற ஒரு பவர் செக்டர் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 39 கம்பெனிகள் கலந்து கொண்டன.

  

சிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்குகள்டாக்குமெண்டிற்கு முன்பே போய் சேர்ந்து விடுகிறது. பின்பு டிமரேஜ் அதிகம் ஆகி விடுகிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது.

அன்புகரசன்
சென்னை

கேள்வி

சிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்குகள்டாக்குமெண்டிற்கு முன்பே போய் சேர்ந்து விடுகிறது. பின்பு டிமரேஜ் அதிகம் ஆகி விடுகிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது.

பதில்

அருகில் உள்ள நாடுகளுக்கு சரக்குகள் கப்பல் மூலம் அனுப்பும் போது நான் நெகோசியபுள் சீ வே பில் மூலம் அனுப்புவது நல்லது. இதன் மூலம் சரக்குகள் அங்கு டாக்குமெண்ட்களுக்கு முன்பு போய் சேர்ந்து விட்டால் ஏர்வே பில் போல ஒரிஜினல் இல்லாமலேயே எடுக்கலாம். இந்த முறைய பின்பற்றி சரக்குகளை அனுப்பலாம். ஆனால் இந்த வகை கப்பல் ரசீதை மாற்றிக் கொடுக்க முடியாது.

 

Monday, September 1, 2014

ஏற்றுமதி லாபம் தரும் தொழிலா? அதில் இப்போது இறங்கலாமா?


ராஜாமணி
கோவை

கேள்வி

ஏற்றுமதி லாபம் தரும் தொழிலாஅதில் இப்போது இறங்கலாமா?


பதில்
  

எந்த தொழிலிலும் ஆராய்ந்துவிருப்ப பட்டு இறங்கினால் லாபமே. அதாவது அரசாங்கம் ஏற்றுமதியை ஊக்குவிக்க பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆதலால் இது இறங்க சிறந்த சந்தர்ப்பம். ஆனால்முழுமையாக ஏற்றுமதியின் நெளிவு சுளிவுகள் தெரிந்து இறங்குவதே நல்லது.





Wednesday, August 27, 2014

பானிபட்டும் காட்டன் தூரிகளும்


பானிபட்டும் காட்டன் தூரிகளும்

  
பானிப்பட் காட்டன் தூரிகளுக்கும்ரக்ஸ்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. பெரிய அளவில் அங்கிருந்து ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. அங்கு தயாரிக்கப்படும் காட்டன் ரக்ஸ்தூரிகள் குவாலிட்டியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் தற்போது அமெரிக்காஐரொப்பிய நாடுகளில் இருந்து அவர்களுக்கு வரும் வியாபார விசாரனைகளில் விலையை குறைத்துக் கொடுக்கும்படியும்குவாலிட்டியில் சிறிது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் குவாலிட்டியில் காம்ப்ரமைஸ் செய்யாத ஏற்றுமதியாளர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. அவர்களின் ஏற்றுமதி குறைகிறது.



உணவுப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி கூறுங்களேன்?


கேள்வி

உணவுப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி கூறுங்களேன்?



பதில்

பலர் அப்பளம்வடாம்ஊறுகாய் போன்றவை ஏற்றுமதி செய்ய அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில் அது தான் அதிகம் முதலீடு தேவைப்படாதது. ஆனால் வெளிநாட்டில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பல கட்டுப்பாடுகள் உள்ளது. ஆதலால்பல நாடுகளின் இறக்குமதி சட்ட திட்டங்களைப் பார்த்து தான் நீங்கள் ஏற்றுமதிக்கு முயற்சி செய்ய வேண்டும். மற்றபடி பிராண்டட் பொருட்களை நீங்கள் ஏற்றுமதி செய்வதாக இருந்தால் அந்த கம்பெனியின் அனுமதி பெற்று செய்வது நல்லது. மேலும் இந்தியா பிராண்ட்களின் பெயர்கள் பெரும்பாலும் உள்நாட்டை சார்ந்து இருப்பதால் பல வெளிநாட்டவர்கள் அந்த பிராண்ட்கள் இந்தியாவில்தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு தெரியாது. ஆதலால் விற்பனை பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.


Monday, August 25, 2014

கப்பல் ரசீதிற்கும், ஏர்வே பில்லிற்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி பதில்

ராமசாமி
கரூர்


கேள்வி

கப்பல் ரசீதிற்கும்ஏர்வே பில்லிற்கும் என்ன வித்தியாசம்?

பதில்

கப்பல் ரசீது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியும். அதாவது நெகோஷியபிள். அதாவது சரக்குகளை எடுக்காமலே வேறு ஒரு நபருக்கு மாற்றிக் கொடுக்க முடியும். அவர் சரக்குகளை அந்த கப்பல் ரசீதைக் காட்டி எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஏர்வே பில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றி கொடுக்க முடியாது. ஏர்வே பில் நான் நெகோஷியபுள்.


Sunday, August 24, 2014

பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?

பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?



நீங்கள் சரக்குகளை இறக்குமதி செய்கிறீர்கள். அதற்கு வெளிநாட்டு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வீர்கள்உங்களிடம் இருக்கும் பணத்தை கொடுப்பீர்கள். அல்லது வங்கிகளிடம் லோன் வாங்கி அதைக் கொடுப்பீர்கள். வங்கிகளிடம் இந்தியாவில் இந்திய பணமாக லோன் வாங்கும் போது அதற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கும்.

இந்த வட்டிகளை குறைக்க வெளிநாட்டு வங்கிகளிடம் வட்டிக்கு கடனாக வாங்கி அதை இறக்குமதிக்கு உபயோகப்படுத்திக் கொண்டால் எப்படி இருக்கும். அது தான் பையர்ஸ் கிரிடிட். இது சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டியில் கிடைக்கும். இந்தக் கடனை வெளிநாட்டுப்பணமாக வாங்குவதால் அப்படியே திருப்பி கொடுக்க வேண்டும். ஆதலால் அதற்கு பார்வர்ட் காண்டிராக்ட் புக் செய்வதற்கு ஒரு 2 முதல் 3 சதவீதம் வரை வந்தாலும்மொத்தமாக 6 சதவீதத்திற்குள் தான் வரும். ஆகையால் இந்தியாவில் கடன் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். ஆதலால் வட்டிச் செலவுகளைக் குறைக்க இதை பலர் நாடுகிறார்கள்.


Saturday, August 23, 2014

மாதுளம்பழம் ஏற்றுமதி



மாதுளம்பழம் ஏற்றுமதி 

இந்தியாவிலிருந்து அதிக அளவில் மாதுளம்பழம் ஏற்றுமதி செய்து வருபவர்கள் மும்பையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. பார்க்ம்ஸ் என்ற கம்பெனி தான். கிமாயே என்ற பிராண்ட் பெயரில் மாதுளம்பழங்களை ஐரோப்பாவிற்கு அதிக அளவு ஏற்றுமதி செய்து வருகிறது. அவர்களின் வெப்சைட் முகவரி www.inifarms.com

Wednesday, August 20, 2014

வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்


வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்



இந்திய அளவில் வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. சுமார் 80,00,000 டன்கள் தமிழ்நாடு உற்பத்தி செய்துள்ளது. இதையடுத்து மஹாராஷ்டிரா 40,00,000 டன்கள் உற்பத்தி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி 3 கோடி டன்களாக இருக்கிறது. இதில் மிகச் சிறிய அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றதெல்லாம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி வெரைட்டியை பயிரிட முயற்சி செய்து ஏற்றுமதி செய்யுங்கப்பா.... இந்திய வாழைப்பழமும் உலகளவில் பெயர் பெறட்டும்.

Monday, August 18, 2014

ஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதி


ஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதி



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பழங்கள் ஏற்றுமதி வருடத்திற்கு 4200 கோடி ரூபாயாக கூடியுள்ளது. அதிகப்படியாக ஆப்பிள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும்இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் உபயோகிக்கும் ஆப்பிள்களில் 90 சதவீதம் அந்த மாநிலத்தில் இருந்து தான் வருகிறது.


திராட்சை ஏற்றுமதி

திராட்சை ஏற்றுமதி


வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு நாசிக் ஒரு உதாரணம். இந்தியாவிலேயே அதிக அளவு திராட்சை ஏற்றுமதி செய்யும் மாநிலம் மஹாராஷ்டிரா தான். இந்த வருடம் ஐரோப்பாவில் சீட்லெஸ் திராட்சைக்கு பற்றாக்குறை வந்துள்ளது என்று தெரிந்தவுடன் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது நாசிக்கிலுள்ள ஏற்றுமதியாளர்கள் தாம். உடனடியாக களத்தில் இறங்கி பெருமளவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். அது வெற்றியாக மாறியது. யூரோ புரூட்ஸ் என்ற திராட்சை ஏற்றுமதியாளர் கடந்த 21 வருடமாக ஏற்றுமதி செய்து வருகிறார். ஆனால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமாஒவ்வொரு வருடமும் ஏற்றுமதியில் வேறு வேறு சேலஞ்ச்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று.


Euro Fruits
Tel: +91 22 2520 7838
Fax: +91 22 2520 5080
Email: nitin@eurofruits.com
www.eurofruits.com




Saturday, August 16, 2014

இந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி

இந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி
  


இந்தியாவிலிருந்து நைஜீரியாவிற்கு கடந்த வருடம் 307 மில்லியன் டாலர் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியா அதிகமாக மருந்துப் பொருட்களை இந்தியாவிலிருந்த்து தான் இறக்குமதி செய்து வருகிறது. சமீபத்தில் அங்குள்ள இந்திய தூதரகம் ஒரு வாங்குபவர், விற்பவர் சந்திப்பை நடத்தியது. அதில் 70 இந்திய கம்பெனிகள் கலந்து கொண்டன. முக்கியமான விஷயம் அதில் 1000 வாங்குபவர்கள் கலந்து கொண்டது தான். வாய்ப்புக்கள் உள்ள நாடு. அதே சமயம் போலி இறக்குமதியாளர்கள் அதிகம் உள்ள நாடு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Friday, August 15, 2014

ப்ளாக்கில் 500 வது மெம்பர் ஆகப்போவது யார்?

எனது ப்ளாக்கில் 498 பேர் இதுவரை மெம்பராக உள்ளார்கள். 500 வது நபராக யார் மெம்பராக ஆகப்போகிறார்களோ அவருக்கு எனது புத்தகம் ஒன்று பரிசாக அனுப்பி வைக்கப்படும். அவர் எனது ப்ளாக்கில் மெம்பராக ஆனவுடன் அவருடைய ஈமெயில் விலாசத்தை எனது ஈமெயில் ஐ.டி.க்கு அனுப்பவும் sethuraman.sathappan@gmail.com.  அன்புடன் சேதுராமன் சாத்தப்பன்

டிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைக்குமா?

அருண்
கரூர்
 
கேள்வி
டிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைக்குமா?

பதில்
டிரேடு ஜர்னல் என்பது நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறை வெளியிடும் மாதந்திர அல்லது காலாண்டு பத்திரிக்கையாக இருக்கும். அதில் உங்கள் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களை வெளியிடும் போது அது உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆதலால் உங்கள் வியாபார வாய்ப்புக்கள் பெருக வாய்ப்பு உண்டு. செய்யலாம் ஆனால் சில சமயங்களில் கட்டணங்கள் கூடுதலாக இருக்கும்.

பாவா மூப்பன் - 1000 முறை படிக்கப்பட்ட ஏற்றுமதி செய்தி

பாவா மூப்பன்


பாவா மூப்பன்

கேரளாவில் திரூர் என்ற ஊரிலிருக்கும் 65 வயது முதியவர் பாவா மூப்பன் என்பவர் காலையில் எழுந்தவுடன் தினசரி அன்றைய பேப்பர்களில் பார்ப்பது என்ன தெரியுமா பாகிஸதான் சம்பந்தப்பட்ட நல்ல, கெட்ட செய்திகளைத் தான். ஏனெனில் அவர் வாரம் 5 டன் வெற்றிலையை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து அதிக அளவு பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்பவர் இவர் தான். இவரிடமிருந்து இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று இந்த வயதிலும் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது, இரண்டாவது இரண்டு நாடுகளுக்கிடையே ஆன செய்திகளை தெரிந்து கொள்வதில் காட்டும் முக்கியத்துவம். 

செய்திகள் மிகவும் முக்கியம். பாகிஸ்தானில் ஏதாவது பிராபளம் என்றால் அந்த வாரம் வெற்றிலை ஏற்றுமதி குறைந்து விடும், அதை என்ன செய்வது என்று அவர் யோசிக்க வேண்டும். 

Thursday, August 14, 2014

ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க அடிப்படை தேவைகள் என்னென்ன?


இம்மானுவேல்
திருச்சி


கேள்வி
ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க அடிப்படை தேவைகள் என்னென்ன?

பதில்
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி.

  • ஒரு நிறுவனம். தனிப்பட்ட அல்லது பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிடெட் போன்ற வகைகளில்
  • அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் உரிமம் வாங்குதல் (லைசென்ஸ்)
  • அந்த நிறுவனத்தை பதிவு (ரிஜிஸ்டிரேஷன்) செய்ய வேண்டும் (தனிப்பட்ட நிறுவனமாக இருந்தால் தேவையில்லை)
  • வங்கியில் நடப்புக் கணக்கு (கரண்ட் அக்கவுண்ட்)
  • நிறுவனம் பெயரில் பான் கார்டு
  • சேல்ஸ் டாக்ஸ் / வாட் பதிவு எண் (நீங்கள் ஏற்றுமதிக்காக உள்நாட்டில் சரக்குகள் வாங்கும் போது சேல்ஸ் டாக்ஸ் / வாட் இல்லாமல் வாங்க முடியும் அல்லது அதைக் கட்டியிருந்தால் திருப்பிப் பெற வாய்ப்புக்கள் உண்டு).
  • இம்போர்ட்டர் எக்ஸ்போர்ட்டர் கோடு நம்பர்
  • நீங்கள் சார்ந்த ஏற்றுமதி முன்னேற்ற கழகத்தில் பதிவு செய்து கொள்ளுதல்

ஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை அனுப்ப இயலும். அதற்கு பணம் கிடைக்குமா?


கேள்வி பதில்
பாலகிருஷ்ணன்
சமயபுரம்


கேள்வி
ஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை அனுப்ப இயலும். அதற்கு பணம் கிடைக்குமா?

பதில்
அரசாங்க விதிகளின் படி ஏற்றுமதி சாம்பிள்கள் ரூபாய் 5 லட்சம் வரை அனுமதி எதுவும் தேவையில்லாமல அனுப்ப இயலும். சாதாரணமாக சாம்பிள்களுக்கு பணம் கிடைக்காது. ஆனால், கேட்பதில் தவறில்லை. அப்படி அதற்கு பணம் கிடைத்தால் அது லாபம் தான்.
சாம்பிள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கக்கூடாது என்பதை நினைவில் வைக்கவும்.

Wednesday, August 13, 2014

மாங்காய் கிரேடிங்

மாங்காய் கிரேடிங்


மாங்காயில் கிரேடிங் மிகவும் முக்கியம். அதை துரிதப்படுத்தப்படுத்த கம்ப்யூட்டர் விஷன் என்ற விதத்தை உபயோகப்படுத்தி அதன் மூலம் மிக வேகமாக தரம் பிரிக்க செய்யலாம் என்று ஒரு ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளார்கள் பூனா மற்றும் பண்டர்பூரைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள். அந்த ஆய்வறிக்கையை முழுவதும் படிக்க சிலருக்கு ஆர்வம் இருக்கும். அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.