Friday, September 21, 2012

பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?


பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

ஒரு காலத்தில் வீடுகளில் கிணற்றடியில் வைக்கப்படும் செடியாக இருந்தது பப்பாளி. தற்போது மக்களின் அன்றாட உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி சாகுபடியை முழுநேரத் தொழிலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவில் தற்போது செய்து வருகின்றனர். 2006-07 வருடத்தில் இந்தியாவில் 2,482,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது 2010-11ம் ஆண்டில் 4,196,000 டன்களாக உயர்ந்திருக்கிறது. அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் குஜராத், அடுத்து ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகியவை ஆகும். தமிழ்நாட்டின் பங்கு இந்தியாவின் உற்பத்தியில் 2.5 சதவீதம் தான். ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் பதில் அதிகம் இல்லை என்பது தான். ஏனெனில் பெருமளவில் உள்நாட்டிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment