Saturday, June 30, 2012

இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி


இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி

இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் நடைபெறுகிறது. இதில் மஹாராஷ்டிராவின் பங்கு 55 சதவீதம் ஆகும்.


Thursday, June 28, 2012

விவசாய விளைபொருட்களுக்கு தனி டிரெயின்


விவசாய விளைபொருட்களுக்கு  தனி  டிரெயின்

விவசாய விளைபொருட்கள் அறுவடை செய்த பின் சந்தைகளை சரியான சமயத்தில் சென்றடைய வேண்டும். இல்லாவிடில் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதற்காக விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஒரு தனி டிரெயின் நாசிக்கிலிருந்து கொல்கத்தா புறப்பட்டது. இது ரயில்வே பட்ஜெட்டில் செய்யப்பட்ட ஒரு அறிவிப்பு தான். கத்திரிக்காய் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கலாம். நாசிக்கிலிருந்து செல்வதால் வெங்காயம் எக்ஸ்பிரஸ் என்றும் வைக்கலாம்.

வைரம் ஏற்றுமதி மின்னுமா?


வைரம் ஏற்றுமதி மின்னுமா?

இந்தியாவிலிருந்து பட்டை தீட்டிய வைரம் ஏற்றுமதி மே மாதத்தில் சென்ற வருடம் மே மாதத்தை விட 50 சதவீதம் குறைந்துள்ளது. இது இந்த தொழிலில் இருப்பவர்களை ஒரு கிலியை கொடுத்துள்ளது. வைரம் ஏற்றுமதிக்கு 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது தான் இந்த ஏற்றுமதி சரிவுக்கு காரணம் ஆகும்.

Tuesday, June 26, 2012

ஐரோப்பிய நாடுகளுக்கு மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள்


ஐரோப்பிய நாடுகளுக்கு மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்வதற்கு 700 விவசாயிகளை அந்த மாநிலம் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் விளைவிக்கும் காய்கறிகள் அங்கு ஏற்றுமதி செய்யப்படும். கத்திரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், பாகற்காய், முருங்கைகாய், கறிவேப்பிலை ஆகியவை ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். இந்த 6 காய்கறிகள் தாம் இந்தியாவின் மொத்த காய்கறி ஏற்றுமதியில் 80 சதவீதம் பங்களிக்கின்றன.

Sunday, June 24, 2012

இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு


இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு

மாம்பழ சீசன் முடியப்போகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாம்பழங்களின் கதைகள் இன்னும் நின்றபாடில்லை. 
அமெரிக்காவிற்கு செல்லும் மாம்பழங்கள் இராடியேஷன் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முன்பே பார்த்தோம். அப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று சான்றிதழ் அளிக்க அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் இந்தியா வந்து 21 நாட்கள் தங்கி அளித்து சென்றிருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க டாலர்கள் 85000 செலவு ஆகியுள்ளது. இது மாம்பழம் விலையைக் கூட்டும் அல்லது லாபத்தை குறைக்கும். ஆதலால் அமெரிக்க அதிகாரிகள் வரவேண்டாம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனிப்பான மாம்பழத்திற்குள் இவ்வளவு செய்திகள்.


கொசுறாக ஒரு செய்தி இந்தியாவில் தற்போது குஜராத்தில் ஆண்டு முழுவதும் மாம்பழம் உற்பத்தி செய்யும் முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளனர். மாம்பழ சீசன் என்று ஏங்கி கொண்டு இனி இருக்க வேண்டாம். ஆப்பிள் போல ஆண்டு முழுவதும் சாப்பிடலாம், அப்படியே சாப்பிடலாம். இது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஒரு கசப்பான செய்தி.

Friday, June 22, 2012

பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு


பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு 

உலகளவில் அதிகம் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், வாழை, மாம்பழம் இன்னும் சில பழங்கள் ஆகியவை உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், உற்பத்தி செய்யும் பழங்களில் சுமார் 40 சதவீதம் விற்பனைக்கு செல்லும் முன்பே அழுகிவிடுகிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நமது கோவை வேளான் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்ததன் பலன், இன்னும் சில வருடங்களில் நமக்கு உதவும். கனடாவின் கயல்ப் யுனிவர்சிட்டியும் கண்டுபிடித்த ஹெக்சானேல் என்று ஒருவித கெமிக்கலும், கோவை வேளான் பல்கலைக்கழக விஞ்ஞானி கண்டுபிடித்த நானோ பிலிமும் இணைந்து பாக்கிங் செய்து அனுப்பும் போது பழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருக்க உதவுகிறது. இது 30 சதவீதம் பழங்கள் கெடாமல் இருக்க வழிவகை செய்கிறது. இது நமது ஏற்றுமதிக்கு பெரிதும் உதவும்.

Thursday, June 21, 2012

இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம்


இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம்

இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம் தற்போது வருடத்திற்கு 20 பில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது சுமார் 110,000 கோடி ரூபாய்கள். இது 2015ம் வருடத்தில் 45 பில்லியன் டாலராக கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (சுமார் 252,000 கோடி ரூபாய்கள்). 
மேலும், 2020ம் வருடத்தில் இந்தோனேஷியாவில் அதிக அளவு முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா முதலாவதாக இருக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? வர்த்தகத்திற்கு ஏற்ற நாடு என்று. இந்தியாவிலிருந்து பல பொருட்கள் ஏற்றுமதியானாலும், இறக்குமதி அதிக அளவில் நிலக்கரி, கச்சா பாமாயில், வெட்டப்பட்ட மரம், ரப்பர், பர்னிச்சர் ஆகியவை செய்யப்படுகிறது. 

Monday, June 18, 2012

ஏற்றுமதிக்கு விளம்பரம் தேவையா


விளம்பரம் என்றால் ஏற்றுமதிக்கு விளம்பரம் தேவையா 

அந்தக் காலத்திலேயே விளம்பரம் மூலம் உலகப் புகழ்பெற்றவர் என்றால் பழநி டாக்டர் காளிமுத்துவை கூறலாம். அப்படி விளம்பரம் செய்வார். அதைப் பார்த்து கூட்டமும் அள்ளி வரும். அதுபோல எந்தப் பொருளை நீங்கள் விற்க வேண்டும் என்றாலும் ஒரு சிறிய அளவிலாவது விளம்பரம் தேவை. அது ஈமெயில் மார்க்கெட்டிங்காக இருக்கலாம், பேப்பர் விளம்பரமாக இருக்கலாம், ரேடியோ விளம்பரமாக இருக்கலாம், டிவி விளம்பரமாக இருக்கலாம். ஏன் துண்டு பிட்நோட்டீசாக கூட இருக்கலாம். ஆனால், உங்கள் பொருள் சரியான முறைப்படி விளம்பரம் செய்யப்படவேண்டும். அப்போது தான் செல்ல வேண்டியவர்களை சரியானபடி சென்றடையும். எங்கு புறப்பட்டு விட்டீர்கள்.. விளம்பரம் செய்யவா?

இந்திய மாம்பழங்கள் அமெரிக்காவில்



இந்திய மாம்பழங்கள் அமெரிக்காவில் 

ஏதாவது ஒரு புதிய பொருளை மார்க்கெட்டில் விற்க முயலும் போது சாம்பிள் கொடுத்து டேஸட் பார்க்கச் சொல்வார்கள். அது போல இந்திய பெரிய பழங்கள் ஏற்றுமதியாளரான கேபி எக்ஸ்போர்ட்ஸ்  இந்திய மாம்பழங்களை அமெரிக்காவில் விற்க அங்கு வாஷிங்டனில் நடைபெறும் சம்மர் பேன்சி உணவுக் கண்காட்சியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கண்காட்சியில் அபிடா ஒரு ஸ்டால் போட்டுள்ளது. அதில் இந்திய மாம்பழங்களை வைத்து அங்கு சுவைத்துப் பார்க்க எல்லோருக்கும் கொடுக்கவுள்ளார்கள். இது ஒரு மார்க்கெட்டிங் உத்தி தான்.

Friday, June 15, 2012

குல்பி ஐஸ்கீரீம் ஏற்றுமதி செய்ய முடியுமா? கோழிக்கறி ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்வி

குல்பி ஐஸ்கீரீம் ஏற்றுமதி செய்ய முடியுமா?
கோழிக்கறி ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில் 

இது போன்ற கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.

ஏற்றுமதி செய்ய இயலும் எவ்வளவு முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்றால் 50,000 முதல் 100,000 ரூபாய் வரை என்று பதில் வரும்.

அதாவது இங்கிருந்து ஐஸ்கீரீமை சிறிய அளவில் ஏற்றுமதி செய்ய நினைக்கும் போது அங்கு வாங்குவதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள். மேலும் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்திரமாக செல்லுமா (சிறிய அளவில் ஏற்றுமதி செய்யும் போது), அதாவது உருகாமல் செல்லுமா? மேலும் நீங்கள் சிறிய அளவில் செய்வதால் வெளிநாடுகளிலிருந்து உங்களிடம் சரக்குகள் வாங்குபவர்கள் நீங்கள் சுத்தமான தண்ணீரை உபயோகப்படுத்தியுள்ளீர்களா என்ற யோசனையும் வரும்.

இது போன்ற கோழிக்கறியும் கெடாமல் அனுப்ப வேண்டுமென்றால், அது பெரிய அளவில் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் அனுப்பப்பட வேண்டும். இவையெல்லாம், 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய்க்குள் செய்ய முடியும் ஏற்றுமதிகள் அல்ல.  இவைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் பெரிய அளவில் பணம் தேவைப்படும். 
 
உங்களுக்கு தெரிந்த, உங்கள் குடும்ப தொழில் சார்ந்த பொருட்களையே சிறிய அளவில் முதலில் ஏற்றுமதி செய்ய நினையுங்கள்.

Thursday, June 14, 2012

அனிமேஷன் சாப்ட்வேர் ஏற்றுமதி


அனிமேஷன் சாப்ட்வேர் ஏற்றுமதி

இந்தியா இந்த துறையில் முன்னேறி வருகிறது. அனிமேஷன், கேமிங், சினிமா, மீடியா, எஜுகேஷன் ஆகிய துறைகளுக்கு கன்ட்ன்ட் டெவலப்மெண்ட் ஆகியவற்றிக்கு அதிகம் ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது. சைனா இந்த துறைகளில் 97.8 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், இந்தியா 13.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே செய்து வருகிறது. 

Wednesday, June 13, 2012

ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம்


ஏற்றுமதி இறக்குமதி 
எக்சிம் வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம்

எக்சிம் வங்கி குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 500 மில்லியன் டாலர்கள் அவர்களுக்கு நீண்டகால கடனாக வழங்கப்படும். இது குறுந்தொழில் செய்பவர்கள் தொழிலார்களின் திறன் முன்னேற்றத்திற்கும், டிசைனுக்கும், பாக்கேஜிங் ஆகியவற்றிக்கும் உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும். இது அவர்களின் ஏற்றுமதியை கூட்டுவதற்கு வழி வகுக்கும். 

Tuesday, June 12, 2012

இந்திய டெனிம் ஏற்றுமதி


இந்திய டெனிம் ஏற்றுமதி 

இந்திய டெனிம் துணிகள் ஏற்றுமதி கூடி வருகிறது. சைனாவின் கரன்சியான் யுவானின் மதிப்பு உலக கரன்சிகளுக்கு எதிராக கூடிவருவதாலும், அங்கு வேலையாட்களின் சம்பளங்கள் கூடி வருவதாலும், உலக டெனிம் இறக்குமதியாளர்கள் இந்திய டெனிம்களை அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளார்கள். இருந்தாலும் தற்போதும் உலகளவில் சைனா தான் டெனிம் ஏற்றுமதியில் கொடிகட்டி பறக்கிறது. இந்த வியாபாரத்தில் 5 சதவீதம் அளவு இந்தியாவிற்கு கிடைத்தாலே அதுவே ஒரு பெரிய வியாபார வாய்ப்பாக இருக்கும். இந்தியாவிலிருந்து துணிகளை வாங்கி பங்களாதேஷில் கொடுத்து தைத்து அதி உலகளவில் வியாபாரம் செய்து வருகின்றனர்.  உலகளவில் சைனா 3 பில்லியன் மீட்டர்களும், இந்தியா 1 பில்லியன் மீட்டர்களும், துருக்கி, பாகிஸதான் ஆகிய நாடுகள் தலா 500 மில்லியன் மீட்டர்களும் டெனிம் உற்பத்தி செய்து வருகின்றன.

Monday, June 11, 2012

மாம்பழம் ஏற்றுமதி


மாம்பழம் ஏற்றுமதி 

நாம் முன்பே கூறியிருந்தோம் இந்தியாவிலிருந்து இந்த வருட மாம்பழம் ஏற்றுமதி கூட வாய்ப்பிருக்கிறது என்று. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சில வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவிலேயே மாம்பழம் ஏற்றுமதி செய்து வந்தோம். சென்ற வருடம் 95 டன்கள் வரை ஏற்றுமதி செய்திருந்தோம். இந்த வருடம் இது சுமார் 140 டன்கள் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு மாம்பழம் விமானம் மூலமாகவே பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இராடியேஷன் செய்யப்பட்ட மாம்பழங்களே அங்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வசதி மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் மட்டுமே இருப்பதால் அல்போன்சா, கேசர் போன்ற மாம்பழங்களே பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு மாம்பழங்கள் அமெரிக்க செல்ல வாய்ப்பு குறைவாக இருக்கிறது. ஏன் தமிழ்நாடும் ஒரு இராடியேஷன் சென்டர் அமைக்கக்கூடாது?

இந்தியாவிலிருந்து ஏலக்காய் ஏற்றுமதி


இந்தியாவிலிருந்து ஏலக்காய் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியா நாட்டுக்கு சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் 4 மடங்கு கூடியுள்ளது. சென்ற வருடம் 723 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அது இந்த வருடம்  2968 டன்களாக உயர்ந்திருக்கிறது. அரபு நாடுகளில் விருந்தினர்களுக்கு பேரீச்சம்பழத்துடன், உயர்தரமான ஏலக்காய் சாற்றில் தயாரிக்கப்பட்ட காபியை அளிப்பார்கள். மேலும், அவர்களுடைய தினசரி உணவிலும் அதிக அளவில் வாசனை சாமான்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் அங்கு தரமிக்க ஏலக்காய்க்கு நல்ல வரவேற்பு அதிகம். இந்திய ஏலக்காய்களுக்கு அங்கு மதிப்பு அதிகம்.  ஏலக்காய் விற்பவர்கள் சவூதி அரேபியாவில் நல்ல இறக்குமதியாளர்களை தொடர்பு கொண்டால் வியாபார வாய்ப்புக்கள் பெருகும். மேலும், சவுதியில் உள்ள இந்திய சவூதி வர்த்தக சபை அடிக்கடி வாங்குபவர், விற்பவர் சந்திப்புக்களை நடத்துகிறது.

Friday, June 8, 2012

ஆர்கிட் மலர்கள் ஏற்றுமதி

ஆர்கிட் மலர்கள் ஏற்றுமதி

பல நாடுகளில் மலர் ஏற்றுமதியில் ஆர்கிட் மலர்கள் தாம் பெரும் இடத்தை
பிடித்துள்ளன. குறிப்பாக தைவான் நாட்டை எடுத்துக்கொண்டால், அந்த நாட்டின்
மலர்கள் ஏற்றுமதி 150 மில்லன் டாலரில் 77  சதவிதத்தை ஆர்கிட் மலர்கள்
தாம் எடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவிலும் இந்த மலர் வளர்ப்புக்கு நல்ல
வாய்ப்புக்கள் உள்ளது. புனே அருகில் உள்ள தலேகான் என்ற இடத்தில உள்ள மலர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.

Thursday, June 7, 2012

ஏற்றுமதியும் 2013 வருட இலக்கும்

ஏற்றுமதியும் 2013 வருட இலக்கும்

2012 வருட இலக்காக 300  பில்லியன் டாலர் அரசாங்கம் நிர்ணயித்திருந்தது.
பல சிரமங்களுக்கிடையே அதை எட்டி விட்டோம். அடுத்த வருட இலக்காக 350
பில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்றுமதி இலக்கு நாடுகள்
கண்டரியப்பட்டுளதால் இந்த இலக்கு எட்டுவது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை
என்று கூறப்படுகிறது. 2012 வருட இறக்குமதி அளவு எவ்வளவு தெரியுமா ?
சுமார் 485  பில்லியன் டாலர்கள். சரி இவ்வளவு இறக்குமதி செய்திருக்கிறோமா
என்று ஆச்சிரியபடுகிறீர்களா? இதில் அதிகம் ஆயில் இறக்குமதி தான்.

Wednesday, June 6, 2012

டாலரும் ரூபாயும்

டாலரும் ரூபாயும்

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவதால் ஏற்றுமதியலர்களுக்கு லாபம்
என்று பலரும் நினைத்து
கொண்டிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் வெளிநாட்டில்
இருக்கும் இறக்குமதியாளர்கள் ரூபாய் மதிப்பு குறைவதால் உங்களுக்கு நிறைய
லாபம், ஆதலால் சரக்குகளின் விலையில் குறைத்து தாருங்கள் என்று
ஏற்றுமதியாளர்களை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த டாலர் ரூபாய்
மதிப்பு எவ்வளவு நாள் இருக்கும், எந்த அளவு இருக்கும் என்று அவர்களால்
கணிக்க இயலாததால் ஏற்றுமதியாளர்கள் குழம்பி இருக்கிறார்கள் என்பது தான்
உண்மை.  ஒரு உதாரணம் டாலருக்கு எதிராக ரூபாய் 56 மேல் சென்றது, ஆனால்
தற்போது 55 க்கு அருகில் வந்து நிற்கிறது. இது போன்ற சூழ்நிலையில்
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை சரியாக கணிப்பது என்பது கடினமான
காரியம்

Tuesday, June 5, 2012

இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்த வார ஏற்றுமதி  இணையதளம்


நடுத்தர மற்றும் சிறிய தொழில்களின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இணையதளம். இதன் மூலம் அரசாங்க திட்டங்களையும், சலுகைகள் என்னென்ன என்பது பற்றியும், ஏற்றுமதிக்கு என்ன வகையில் உதவுவார்கள் என்பது பற்றியும், மார்க்கெட்டிங் உதவிகள் பற்றியும், டிரெயினிங் பற்றியும், யார் யார் என்ன பொருட்கள் வாங்க விரும்புகின்றனர் என்பது பற்றியும், டெண்டர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். சென்று பாருங்கள் நல்ல  இணையதளம்.

Sunday, June 3, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்

கேள்விக்கு என்ன பதில்

சுப்பிரமணியன்
சென்னை


கேள்வி
ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் அதிகமா?

பதில்
இந்தியாவில் இன்னும் வளர்ச்சி பெற சில ஆண்டுகள் ஆகும். ஆனால் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். குண்டூசி முதல் பிரிட்ஜ் வரை, புத்தகம் முதல் டி.வி. வரை வாங்கலாம். விலை கடையை விட குறைவாகக் கிடைக்கிறது. தற்போது பல கம்பெனிகள் போட்டி போட்டு ஆன்லைன் வியாபரங்களை துவங்கி வருகின்றன. பிலிப்கார்ட் என்ற நிறுவனம் சக்கைபோடு போட்டு வருகிறது. ஆனால் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. சிலர் கூட்டாக சேர்ந்து தங்களுக்கு பிடித்த பொருட்களை வியாபாரம் செய்ய ஏற்ற தொழில் இது. காய்கறி கூட செய்கிறார்கள் சிலர்.

உற்பத்தி கூடுதலால் குண்டு மிளகாய் விலை வீழ்ச்சி


உற்பத்தி கூடுதலால் குண்டு மிளகாய் விலை வீழ்ச்சி

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்ட குண்டு மிளகாய்க்கு ஒரு மதிப்பு எப்போதும் உண்டு. ஆந்திரா சம்பா மிளகாய் வரத்து அதிகரிப்பால், இளையான்குடி குண்டு மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைக்கிராமத்தில், 4,000 ஹெக்டேரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், சூராணம், ஆனந்தூர் பகுதியிலும் குண்டு மிளகாய் விளைகிறது. மிளகாய் வத்தலாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 
இந்த ஆண்டு குண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே நேரம், ஆந்திராவிலும் சம்பா மிளகாய் வரத்து அதிகரித்துள்ளதால், 

கடந்த ஆண்டு கிலோ, 70 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கு விற்ற மிளகாய், இந்த ஆண்டு கிலோ, 55 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்கிறது. 

Friday, June 1, 2012

ஏற்றுமதி வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்


ஏற்றுமதி வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் பகுதியில், பனியன் துணிகளால் ஆன கையுறைகள் அதிக அளவில் தயாரிக்கப் டுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கையுறைகள், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பனியன் செய்தது போக, கழிவு பனியன் துணிகளை கொண்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள குறு தொழிற்சாலைகளில் கையுறைகள் செய்யப்படுகின்றன.

இவற்றை ஓசூர் மற்றும் பெங்களூரிலுள்ள மருந்து, கைகடிகாரம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு கையுறையை பயன்படுத்துவதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான கையுறைகள் தேவைப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இருந்து மட்டும் மாதத்துக்கு, இரண்டு லட்சம் கையுறைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதத்துக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கையுறைகள் பலதரப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கையுறைக்கு ஓசூர் மட்டுமன்றி, பெங்களூரு, புனே உள்ளிட்ட தொழிற் நகரங்களில் வரவேற்பு உள்ளதால், நாளுக்கு நாள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறப்பான ஏற்றுமதிக்கு வாய்ப்பும் உள்ளது.