Sunday, December 25, 2011

ஏறுகிறதா ஏற்றுமதி? அடைவோமோ இந்த வருட டார்கெட்டை?, மஞ்சள் விலை மர்மம், காடு வளர்ப்பும், ஏற்றுமதியும், ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்,


ஏறுகிறதா ஏற்றுமதி? அடைவோமோ இந்த வருட டார்கெட்டை?

நாம் சில வாரங்களுக்கு முன்பு எதிர்பார்த்தது நடந்தே விட்டது. அதாவது ஏற்றுமதி புள்ளிவிபரங்களில் தவறு நடந்துள்ளதா என்று பலரும் அரசாங்கத்திடம் கேட்ட போது, அப்போது இல்லை என்று சமாளித்தாலும், தற்போது கொல்கத்தாவில் உள்ள ஏற்றுமதி புள்ளி விபர அலுவலகத்தில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குளறுபடியால் 9 பில்லியன் டாலர் அளவு ஏற்றுமதி உயர்த்தி காட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது 45,000 கோடி ரூபாய் அளவிற்கு.  ஆண்டு தொடக்கத்தில் நன்றாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி படிப்படியாக குறைந்து தற்போது நவம்பர் மாத ஏற்றுமதி சென்ற வருட இதே கால ஏற்றுமதி அளவை விட 4.2 சதவீதமே கூடியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஷாக்கடிக்கும் செய்தி தான். உலகம் முழுவது பல ஷாக்கடிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இது ஒரு பெரிய செய்தியல்ல என்பதே நமது கருத்து. இந்த வருட ஏற்றுமதி டார்கெட்டை எட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் என்று அரசாங்கமே தெரிவித்துள்ளது.
இந்த வருடம் அதிகம் ஏற்றுமதி செய்துள்ளவை தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், பெட்ரோலியம் பொருட்கள், எஞ்சினியரிங் பொருட்கள், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், செயற்கை இழை, காட்டன் யார்ன் மேட் அப்ஸ், எலக்ட்ரானிக் சாமான்கள், மருந்துப் பொருட்கள், கெமிக்கல்ஸ், ப்ளாஸ்டிக் பொருட்கள், லெதர் மற்றும் லெதர் பொருட்கள், மெரைன் ப்ராடக்ஸ் போன்றவை ஆகும்.


மஞ்சள் விலை மர்மம்
200 கிராம் மஞ்சள்தூள் வாங்கினேன், விலை ரூபாய் 50 என்று போட்டிருந்தது. அதற்கு அரை மணிநேரம் முன்பு தான் ஒரு மஞ்சள் உற்பத்தியாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறினார் சென்ற வருடம் 100 ரூபாய் கிலோ வரை இருந்தது, தற்போது கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கு வந்து விட்டது என்று கூறினார். பாருங்கள் அரைக்காத மஞ்சள் கிலோ 35 முதல் 45 ரூபாய், ஆனால் அரைத்த மஞ்சள் கிலோ 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? பொருளை வேல்யு அடிசன் செய்து விற்பது நல்லது என்று. 

இந்தியாவில் மொத்தமே மூன்று மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. முதலிடம் ஆந்திராவுக்கு. தமிழ்நாடும், ஒரிசாவும் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன. ஆந்திரா 60 சதவீதமும், தமிழ்நாடு, ஒரிசா தலா 20 சதவீதமும் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளில் 70 சதவீதம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. மீதம் 30 சதவீதம் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாகிஸதான், சைனா, ஹைதி, ஜமைக்கா நாடுகள் மஞ்சள் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன. ரஷ்யா, அமெரிக்கா, யு.கே., ஜப்பான் ஆகிய நாடுகள் முக்கியமான இறக்குமதி நாடுகள் ஆகும்.


காடு வளர்ப்பும், ஏற்றுமதியும்
சும்மா இருந்த தரிசு நிலங்களில் காடு வளர்ப்புக்காக பிரித்து கம்பெனிகளுக்கும், தனியார்களுக்கும் பிரித்து கொடுத்து வியட்நாம் தமது காட்டுப் பொருட்களின் ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது 1998ல் 108 மில்லியன் டாலர் அளவாக இருந்த ஏற்றுமதி, 2005ம் வருடம் 1700 மில்லியன் டாலராக கூட்டியுள்ளது. இது போல இந்தியாவில் 28 மில்லியன் ஹெக்டேர்கள் இது போல காடு வளர்க்க ஏதுவாக இருக்கிறது. கம்பெனிகளுக்கும், தனியார்களுக்கும் பிரித்து கொடுத்து காடு வளர்ப்பை ஊக்கப்படுத்தினால் காட்டுப் பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் கூடும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. முன்பு டீ, காபி தோட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் இது போல செய்துள்ளது. இது டிம்பர், பேப்பர் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தாராளமாக வழங்கும். மேலும், நாட்டின் பசுமைக்கும் வழிவகுக்கும்.


ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்
ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் செய்வதற்கு இந்தியாவில் பல அரசாங்க இன்ஸ்பெக்ஷன் நிலையங்கள் இருக்கின்றன. சில சமயம் பல வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் வெளிநாட்டை சேர்ந்த இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகளை குறிப்பிடுவார்கள். இதில் இரண்டு ஏஜென்சிகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று SGS, இன்னொன்று Lloyd's Register Inpsection Agency.  இவை இரண்டும் உலகப் புகழ் பெற்ற இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகள். இவை இந்தியாவில் பல இடங்களில் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன.


கேள்விக்கு என்ன பதில்?

சுதர்சன்
கேள்வி

ASAP மற்றும் MAQ என்றால் என்ன?

பதில்ASAP என்றால் As Soon As Possible என்று அர்த்தம். அதாவது எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று பொருள். MAQ என்றால் Minimum Order Quantity என்று அர்த்தம். அதாவது ஏற்றுமதியிலோ அல்லது உள்நாட்டு வியாபாரத்திலோ குறைந்த பட்ச ஆர்டர் என்பதை தான் இவ்வாறு கூறுவார்கள்.


கேள்வி
நாம் முன்னோர்கள் போல அரிசி உணவை குறைத்து வரகு, சோளம், கம்பு, கேப்பை என்று உட்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இது போல தானியங்களுக்கு வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இவைகள் ஹிந்தியில் எப்படி அழைக்கப்படுகின்றன?

பதில்
வரகு ஹிந்தியில் செனா என்றும், சோளம் ஹிந்தியில் ஜோவர் என்றும், கம்பு ஹிந்தியில் பஜ்ரா என்றும், கேப்பை ஹிந்தியில் ராகி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ப்ரோஸ, சோர்கம், பேர்ல், பிங்கர் என்று அழைக்கப்படுகின்றன.


இந்த வார இணையதளம்
 
www.msme.gov.in

சிறிய மற்றும் குறும் தொழில்களை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அரசாங்க இணையதளம். சிறிய தொழில்கள் செய்பவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணையதளம். அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் உதவி, ஏற்றுமதி, டிரெயினிங், அவர்களின் பப்ளிகேஷன்ஸ், மேலும் பல இணையதளங்களின் இணைப்புக்கள் என்று ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்த தொடர் சம்பந்தமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Monday, December 19, 2011

என்னுடைய அடுத்த புத்தகம் எனது அன்பளிப்பாக

வணக்கம்

தாங்கள் தங்கள் 50 நண்பர்களுக்கு மெயில் மூலமாகவோ அல்லது facebook மூலமாகவோ அல்லது தங்களது  ப்ளாக் மூலமாகவோ  அல்லது ஓர்குட் மூலமாகவோ  என்னுடைய ப்ளாக் யை (http://www.sethuramansathappan.blogspot.com/) பற்றி சொல்லி அதன் பிறகு எனக்கு தங்களுடைய முகவரி அனுப்புவீர்கள் ஆனால் முதலில் வரும் 50 ௦ ஈமெயில் களுக்கு பொங்கல் சமயத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படவுள்ள என்னுடைய அடுத்த புத்தகம் எனது அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்

சேதுராமன் சாத்தப்பன்

Sunday, December 18, 2011

வணக்கம்

வணக்கம்,

சென்ற வர ஏற்றுமதி உலகம் (http://www.sethuramansathappan.blogspot.com/) ப்ளாக் க்கு தினசரி 50 பார்வையாளர்கள் வரை தான் வருகிறார்கள். இது மிகவும் குறைவு என்பது என் கருத்து. தங்கள் தங்கள் நண்பர்களுக்கு ஜிமெயில் மூலமாகவோ அல்லது facebook மூலமாகவோ அல்லது தங்களது  ப்ளாக் மூலமாகவோ  அல்லது ஓர்குட் மூலமாகவோ  என்னுடைய ப்ளாக் யை (http://www.sethuramansathappan.blogspot.com/) பற்றி சொல்வீர்களேயானால் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். இனி சென்ற வார ஏற்றுமதி உலகத்தை படியுங்கள்.

அன்புடன்

சேதுராமன் சாத்தப்பன்
௦ 

சென்ற வார ஏற்றுமதி உலகம், போலி ஆர்டர்கள் உஷார், மீன்கள் ஏற்றுமதி, வெங்காயம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


இந்த தொடருக்கு வரும் பாராட்டுக்களை பார்க்கும் போது  மகிழ்சியாக இருக்கின்றது. இனி  சென்ற வார ஏற்றுமதி உலகத்தை பார்ப்போம்.


போலி ஆர்டர்கள் உஷார்

ஏற்றுமதி செய்ய ஆர்வம் பலருக்கு இருப்பதால், ஆர்டர் ஏதும் கிடைத்து விட்டால் வானத்துக்கும், பூமிக்கும் குதித்து விட்டு யாரிடமும் இது பற்றி சொல்வதில்லை. சொன்னால், அந்த ஆர்டரை அந்த நண்பர் செய்து விடுவாரோ என்ற எண்ணமும் தலை தூக்கி விடுகிறது. ஆதலால், ரகசியத்தை காப்பது போல் காத்து ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்கள். என்னிடம் சந்தேகம் கேட்கும் போது கூட யாரிடமிருந்து ஆர்டர் வந்துள்ளது, என்ன ஆர்டர் வந்துள்ளது என்று கூறுவதில் சிறிது தயக்கம். எங்கே ஆர்டர் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம். ஆனால், உண்மையில் நடப்பது என்ன? பலர் தங்களுக்கு வரும் ஆர்டரை உண்மையான ஆர்டரா இல்லை போலியா என்று கூட பார்ப்பதில்லை. இதுவோ பல இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அவர் நேரடியாக வருவார், சரக்கை பார்த்து விட்டு சென்றுவிடுவார் (சரக்கு நன்றாக இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்கு). பின்னர் ஆர்டர் வரும். நீங்கள் சரக்குகளை அனுப்புவீர்கள், அவர் டாக்குமெண்டில் குறை கண்டுபிடித்து சரக்குகளை நிராகரித்து விடுவார். சரக்குகளை நிராகரித்து விடும் போது உங்களுக்கு பயம் வந்து விடும், ஆதலால் பெரிய தள்ளுபடிகள் கொடுத்து நீங்கள் மீதிப்பணத்தை பெறவேண்டி இருக்கும். இதற்காக தான் சொல்வது ஏற்றுமதியில் ஒவ்வொரு படியும் மிகவும் முக்கியம். அவசரப்படக்கூடாது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி டாக்குமெண்ட்கள் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. உங்களுக்கு எல்.சி. மற்றும் டாக்குமெண்ட்களில் சந்தேகம் வரும் போது உடனடியாக எங்களுக்கு மெயில் செய்யுங்கள், இலவசமான ஆலோசனைகளைப் பெறுங்கள். நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம் பத்திரமாக இருக்க இது உதவும்.


மீன்கள் ஏற்றுமதி

மீன்கள் ஏற்றுமதி ஆந்திரா சிறந்து விளங்கி வருகிறது. அங்கிருக்கும் விவசாயிகள் மீன்கள் வளர்ப்பதிலும், மார்க்கெட்டிங் செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் தற்போது சிறந்து விளங்கி வருகிறார்கள். நெல்லூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, சிரிகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இந்த தொழில் சிறந்து விளங்கி வருகிறது. மீன் வளர்ப்பது மட்டும் முக்கியம் அல்ல, அதற்கான கட்டமைப்பு வசதிகளும் தேவை. அதாவது ஐஸ்   பேக்டரிகள், பாக்கேஜிங் வசதிகள் போன்றவை. இவைகளையும் இவர்களே ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியம். தற்போது அமெரிக்கா, ஜப்பான், யூ.கே., ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

வெங்காயம்

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ஒரு டன்னுக்கு 250 அமெரிக்க டாலர்கள் என்று குறைக்கப்பட்டுவுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு சிறிது டிமாண்ட் கூடியுள்ளது. நாசிக்கில் இருக்கும் யுனைடெட் பசிபிக் அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி அதிக அளவில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

கேள்விக்கு என்ன பதில்

சுதர்சன்

கேள்வி
ஒ.இ.எம். என்றால் என்ன?
 பதில்
ஒ.இ.எம். என்றால் ஒரிஜினல் எக்யூவிப்மெண்ட் மெனுபெக்சரர் என்று அர்த்தம். அதாவது, நீங்கள் ஒரு கம்பெனி வைத்துள்ளீர்கள், ஏற்றுமதி செய்யப் போகும் பொருளை நீங்கள் தான் தயாரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் தாம் ஒ.இ.எம். எனப்படுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த கேள்வியை உங்களிடம் கேட்பார்கள். ஏனெனில் சரக்குகள் உங்களிடம் இருந்து தான் வருகிறதா, இல்லை வேறு யாரிடமாவது நீங்கள் வாங்கித் தருகிறீர்களா என்று தெரிந்து கொள்வதற்காகத் தான்.
ராமசாமி
திருப்பூர்


கேள்வி
எனக்கு ஏற்றுமதி மூலம் வரும் டாலரை, டாலராகவே வங்கியில் வைத்துக் கொள்ள முடியுமா?

பதில்
தாராளமாக முடியும். ஈ.ஈ.எப்.சி., என்ற கணக்கின் கீழ், அதாவது எக்சேஞ் ஏனர்ஸ் பாரின் கரன்சி என்ற கணக்கில் வரும் வெளிநாட்டு பணத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாம். பிறகு வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்த பணத்திற்கு வட்டி கிடைக்காது. வங்கியில் ஏற்றுமதிக்காக கடன்கள் வாங்கியிருந்தால் அதை முதலில் செலுத்த வேண்டும், மீதியைத் தான் இந்தக் கணக்கில் வைத்துக் கொள்ள இயலும்.

இந்த வார இணையதளம்
www.textrendsindiafair.com

டெல்லியில் ஜனவரி 19 முதல் 21 வரை பிரகதி மைதானில் நடக்கவிருக்கும் பெரிய கண்காட்சி இது. இதில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தபட்ட 1000 ஸ்டால்கள் இருக்கும். டெக்ஸ்டைல்ஸ் தவிர, கார்பெட், கைவினைபொருட்கள், சணல் பொருட்கள் ஹாண்ட்லூம், சில்க், பேஷன் ஜுவல்லரி,  ஆகியவையும் காட்சியில் இருக்கும். டெல்லியும் பார்த்தது போல இருக்கும், கண்காட்சியும் பார்த்தது போல இருக்கும்.

இந்த தொடர் சம்பந்தமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com

Tuesday, December 13, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம், டாலரும் ரூபாயும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாசுமதி அரிசி, சைனா கண்காட்சி, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும் போட்டியும்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


டாலரும் ரூபாயும்
வாராவாரம் எழுத வேண்டிய அளவிற்கு முக்கியமான விஷயமாகி விட்டது டாலர் ரூபாய். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இழந்து கொண்டே இருக்கிறது. ஒரு நிலையில் 52.73 வரை சென்று ஏற்றுமதியாளர்களுக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டது. ஏன் ரூபாய் மதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டிருக்கிற சரிவை விட அதிகமாக பொருட்களின் விலையில் டிஸகவுண்ட் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தான் கவலையான விஷயம்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சிறிய அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு வென்சர் கேபிட்டல் உதவிகளும், வரி விலக்குகளும் வருங்காலத்தில் இருக்கும் என்று தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பமாக பெரிய அளவில் புட் பார்க்குகளும், குளிர்சாதன கிடங்குகளும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இந்த வசதிகள் இல்லாமல் பெரிய அளவில் செய்ய முடியாமல் இருக்கிறது. வருங்காலங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு குளிர்காலமாக இருக்கட்டும்.

பாசுமதி அரிசி
அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பாசுமதி அரிசியில் டிரைசைக்லாசோல் டிரேசஸ்  இருப்பதாக கண்டுபிடித்து அனுப்பப்பட்ட கண்டெய்னர்களில் 150 வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 டன்கள் அரிசி உள்ளது. ஆனால், குறைந்த அளவு டிரைசைக்லாசோல் இருப்பது துரு அண்டுவதை தடுக்கவும் உதவுகிறது எனவும், இதை அரிசி ஏற்றுமதி நாடுகள் பலவும் (தாய்லாந்து, ஜப்பான் போன்றவை) பயன்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது.

சைனா கண்காட்சி
மும்பையில் சமீபத்தில் நடந்த சைனா கண்காட்சியில் சைனாவை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நுகர்பொருள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. எலக்ட்ரானிக், செக்யூரிட்டி உபகரணங்கள், வீட்டு உபயோக சாதனங்கள், பரிசுப் பொருட்கள், கட்டுமானத்துறை பொருட்கள், பாத்ரூம் புராடக்ட்ஸ்  போன்றவை இருந்தன. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் இந்தியாவின் மிகப்பெரிய கம்பெனிகள் இந்த கண்காட்சியை பார்க்கவும், வாங்கவும் மிகவும் ஆர்வம் காட்டின.

ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும், போட்டியும்
இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு போட்டி அருகில் உள்ள நாடுகளான பங்களாதேஷும், வியட்நாமும் தான். ஏனெனில் அங்கு லேபர் மிக மலிவாக இருப்பது தான். இதை சமாளிப்பது தான் தற்போது இந்தியாவிற்கு பெரிய தலைவலி. சைனா போன்று பெரிய அளவில் புரடெக்ஷன் செய்யவும் முடியாது, அதே நடுத்தர அளவில் செய்யும் போது மிஷன் மூலம் உற்பத்திகளை அதிகரிக்கலாம் என்றால் அது மூலதனத்தை அதிகப்படுத்துகிறது.


கேள்விக்கு என்ன பதில்?

ராமு
புதுக்கோட்டை
ஹோம் டெக்ஸ்டைல்ஸ்  என்றால் என்ன? அதில் என்னென்ன பொருட்கள் வரும்?

பதில்
ப்ளாங்கெட், திரைசீலைகள், பெட்ஷீட்டுக்கள், பில்லோ கவர்கள், டவல்கள், நாப்கின்கள், ரக், குவில்ட், சமையலறையில் உபயோகப்படுத்தப்படும் துணிவகைகள் போன்றவை அடங்கும்.
விவேக்
சென்னை 


கேள்விநாஸ்ட்ரோ, வாஸ்ட்ரோ அக்கவுண்ட் என்றால் என்ன?
 


பதில்

இந்திய வங்கி தான் வெளிநாட்டில் ஒரு வங்கியுடன் வைத்திருக்கும் அக்கவுண்டிற்கு பெயர் நாஸ்ட்ரோ அக்கவுண்ட் ஆகும். வெளிநாட்டில் இருக்கும் ஒரு வங்கி தன்னுடைய தேவைகளுக்காக இந்தியாவில் உள்ள ஒரு வங்கியுடன் வைத்திருக்கும் அக்கவுண்ட் வாஸ்ட்ரோ அக்கவுண்ட் ஆகும்.

இந்த வார இணையதளம்
www.fibre2fashion.com

இந்தியாவில் ஆயத்த ஆடைகள தயாரிப்பில் இருப்பவர்கள், துணி வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட மிஷினரி தயாரிப்பவர்கள் என்று அனைவருக்கும் பயன்படும் ஒரு சிறப்பான இணையதளம் இது. ஆயத்த ஆடைகள், துணி, லெதர், யார்ன், ஹேண்ட்லூம், ஹோம் டெக்ஸடைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில்  இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இணையதளம்.

அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com

Monday, December 5, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம், பூடான் நாட்டிற்கு ஏற்றுமதி, தங்கம், வைரம் ஏற்றுமதி, காட்டன் ஏற்றுமதி, 25 வகை தேன்

சென்ற வார ஏற்றுமதி உலகம் 21
சேதுராமன் சாத்தப்பன்


பூடான் நாட்டிற்கு ஏற்றுமதி

பூட்டான் போன்ற பக்கத்து நாடுகள் அவர்களுடைய தினசரி தேவைகளுக்கு கூட நம்மையே சார்ந்திருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பிரச்சனை. என்னவென்றால் தூரம் தான். கெல்கத்தாவிற்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து பெரும்பாலான பொருட்கள் சென்று விடுகின்றன. ஆனால், நீங்கள் ஒரு முறை சென்று வந்தால் அங்கு என்னென்ன பொருட்கள் விரும்பி வாங்கப்படுகின்றன, என்ன விலைக்கு விற்கிறார்கள். அதன் இந்திய மதிப்பு என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஏற்றுமதி செய்வதா வேண்டாமா என்று முடிவு எடுக்கலாம். அழகு பிரதெசம், குளிர் அதிகம், மக்கள் அங்கு ஆங்கிலம், இந்தி சரளமாக பேசுகின்றனர், பூடான் ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பிறகு சமம். இது போல நமக்கு சாதகமாக உள்ள இடங்கள் அந்தமான் (போர்ட்பிளயர்), மாலத்தீவுகள்  போன்றவை ஆகும். அங்கும் சென்று அழகையும் ரசித்து, வியாபரமும் செய்து வரலாம். மாலத் தீவுகளுக்கு செய்யப்படுவது ஏற்றுமதியாக கருதப்படும், ஆனால் அந்தமான் இந்தியாவின் பகுதியாக இருப்பதால் அங்கு விற்பது ஏற்றுமதியாக கருதப்படாது. ஆனால், அங்கு தமிழர்கள் அதிகம் இருப்பதால் வியாபார வாய்ப்புக்கள் அதிகம். அங்கு அருமையான மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. அங்கிருந்து மீன் முதலியவற்றை இறக்குமதி செய்யவும் முயற்சிக்கலாம்.


தங்கம், வைரம் ஏற்றுமதி


இந்தியா உலகத்தில் அதிக அளவில் தங்கம், வைரம் இறக்குமதி செய்பவர்கள். அப்படி இறக்குமதி செய்யும் தங்கம், வைரம் எல்லாம் இங்கே உபயோகப்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. ஏனெனில் பெருமளவு அவை ஆபரணமாக செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  ஒரு மாதத்திற்கு கிட்டதட்ட 17000 முதல்18000 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள ஆபரணப் பொருட்களை ஏற்றும்தி செய்கிறோம். வாங்குபவர்கள் யார்? வளைகுடா நாடுகள், ஹாங்காங், அமெரிக்கா முக்கியமானவை. புதிய மார்க்கெட்டுக்கள் என்று எடுத்துக் கொண்டால் ரஷ்யா, சீனா, ஐரோப்பா ஆகும்.

பழங்கள், காய்கறிகள் இறக்குமதி


பழங்கள், காய்கறிகள் பாகிஸ் தானில் இருந்து வருடத்திற்கு 10000 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதியும் செய்கிறோம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை.
குறிப்பாக மாம்பழம் போன்றவைகளை இரண்டு நாடுகளும் கூட்டாக சேர்ந்து செய்தால் உலகளவில் நல்ல வாய்ப்புக்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் மாம்பழ சீசன் மார்ச் முதல் ஜுன் வரை உள்ளது. அதே சமயம் பாகிஸ்தானில் ஜுன் முதல் அக்டோபர் வரை உள்ளது. கூட்டாக செய்யும் போது உலகளவில் 9 மாதங்களுக்கு மாம்பழம் விற்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கருதப்படுகிறது. இதிலாவது கூட்டாக இருக்கலாமே?


காட்டன் ஏற்றுமதி

காட்டன் ஏற்றுமதி வரும் வருடத்தில் 8 மில்லியன் பேல்களாக இருக்கும். இது இந்த வருட ஏற்றுமதியை விட 1 மில்லியன் பேல்கள் கூடுதலாக இருக்கும். இந்த கூடுதல் ஏற்றுமதி வாய்ப்புக்களுக்கு காரணம் சீனாவின் இறக்குமதி தான். ஒரு கிலோ ரூபாய் 170 வரை செல்கிறது.


25 வகை தேன்

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்  25 வகை தேன்கள் சமீபத்தில் நடந்த ஒரு கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் நடந்த இண்டர்நேஷனல் டிரேட் பேரில் நாவற்பழ தேன், நெல்லிக்காய் மிட்டாய்கள் போன்றவற்றிக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தது. ஏனெனில் உலகளவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் இந்தியாவில் இருக்கிறார்கள். அதற்கு நெல்லிக்காய், நாவற்பழம் போன்றவை அருமருந்தாகும்.

நாவற்பழ தேன் நாவற்பழ மரத்தில் தேன் கூடு வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் தேன் ஆகும். இது பற்றி அறிய விபிஸ நேச்சுரல் பீ பார்ம் என்ற கம்பெனியை தொடர்பு கொள்ளலாம்.



இந்த வார இணையதளம்http://www.ecgc.in/

உலகளவில் பல நாடுகளில் ஏற்றுமதி கியாரண்டி கார்ப்பரேஷன்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகமாகும். இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான பல உபயோகமான தகவல்கள் உள்ளது. புதிய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த கடன் உத்திரவாத கழகம் ஒரு வரப்பிரசாதமாகும்.



கேள்விக்கு என்ன பதில்?
ரவிக்குமார்
திண்டுக்கல


அய்யா என் பெயர் ரவிகுமார்   நான் திண்டுக்கல் லிருந்து மெயில் அனுப்புகிறேன். நான் ஏற்றுமதி செய்வதற்கு மிக ஆர்வமாக உள்ளேன், நான் கடந்த ஆண்டு IE CODE வாங்கிவிட்டேன். இறக்குமதியாளர்களை  கண்டு பிடிக்க பல வழிகளில்  முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எனது நோக்கம் தரமான பொருட்களை ஏற்றுமதி செய்து சிறந்த ஏற்றுமதியாளர் ஆக வேண்டும் . எனது ஊரை சுற்றி ஏற்றுமதி செய்வதற்கு நிறைய பொருட்கள் உள்ளன (ஒட்டன்சத்திரம்  -காய்கறிகள்  , சிறுமலை -பழங்கள் , நத்தம் -புளி, மாங்காய் , கரூர் -துணிகள் , நிலக்கோட்டை -பூக்கள் ). அகவே இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய  இறக்குமதியாளர்களை அறிந்து கொள்வதற்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பதில்

இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி:
1  உங்கள் பொருட்களுக்கு எந்த நாட்டில் வரவேற்பு இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.
2  அந்த நாட்டில் அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் சிறிய / பெரிய இறக்குமதியாளர்களை கண்டுபிடியுங்கள்.
3  இதற்கு அங்குள்ள எல்லோ பேஜஸ் / இணைய  தளங்கள் ஆகியவற்றை தொடர்பு கொண்டு வாங்குபவர் முகவரி கண்டுபிடியுங்கள். உங்கள் உறவினர் / நண்பர்களும் உதவலாம்.
4 பின் அவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
5 பின்னர் அந்த இறக்குமதியாளரை   பற்றி விசாரித்து ஏற்றுமதி செய்யுங்கள்.
6 சில பொருட்களை மட்டும் தெரிவு செய்து கொள்ளுங்கள். நிறைய பொருட்களை எடுத்து கொள்ளாதீர்கள்


இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gamil.com