Monday, September 10, 2012

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்


பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்

உலகத்திலேயே அதிக பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடங்களில் ஒன்று உண்டு. ஆனால், இவைகளின் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2017ம் வருடத்திற்குள் இதற்காக மத்திய அரசாங்கம் 5000 கோடி ரூபாய்கள் செலவழிக்கவுள்ளது. இதன் மூலம் தனியார் கம்பெனிகள் விவசாயிகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு உற்பத்தி செய்யும் திட்டமாகும். 33 தனியார் கம்பெனிகள் ஆர்வத்துடன் முன்வந்துள்ளன. இன்னும் பல கம்பெனிகள் வரலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு கடன்களும், உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். மேலும் நிலையான வருமானத்திற்கும், நாட்டின் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment