Tuesday, December 23, 2014

கோவையில் முதன் முறையாக தமிழில் ஏற்றுமதி கருத்தரங்கு: மகளிர் குழுவுக்கு இலவச பயிற்சி

கோவையில் முதன் முறையாக தமிழில் ஏற்றுமதி கருத்தரங்கு: மகளிர் குழுவுக்கு இலவச பயிற்சி

Advertisement

பதிவு செய்த நாள்

24டிச
2014 
00:12
'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?' மற்றும் 'ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?' என்ற தலைப்பில், கோவையில் முதன் முறையாக, தமிழில் கருத்தரங்கு நடக்கிறது. இதில், ஏற்றுமதி தரத்தில் பொருள் தயாரிக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
புது நம்பிக்கை:

மும்பையில் இயங்கி வரும் முன்னணி ஏற்றுமதி பயிற்சி நிறுவனமான, 'இன்ஸ்டிடியூட் பார் லேர்னிங் எக்ஸ்போர்ட்ஸ்' விடுத்துள்ள அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின், 'மேக் இன் இந்தியா' அறிவிப்புக்கு பிறகு, இந்தியாவின் உற்பத்தி துறையில் புதிய சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. சிறு பொருளை உற்பத்தி செய்பவர் மத்தியில் கூட புது நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. உலக நாடுகளிடம் இந்திய வர்த்தகர்கள் மீதான தனி கவனம் பதிந்துள்ளது. தென்னிந்தியாவின் வர்த்தக கேந்திரங்களாக, தமிழகத்தின் முக்கிய பொருளாதார மையங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புதிய தலைமுறை தொழிலதிபர்கள், சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வர்த்தகம், நிதி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் போன்றோருக்கு, ஏற்றுமதி தொழில் குறித்த விழிப்புணர்வு தேவைப்படும் மிகச் சரியான தருணம் இது. இதை கருத்தில் கொண்டு, கோவையில் முதன் முறையாக, 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?' மற்றும் 'ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?' என்ற தலைப்பில், இனிய தமிழில் ஒரு நாள் கருத்தரங்கம் நடக்க இருக்கிறது.

புதிய மார்க்கெட்டிங்:

ஏற்றுமதி தொழில் தொடங்கியவுடன், புதையல் போல நமக்கு டாலர்களை கொட்டிக் கொடுக்காது. முறையான பயிற்சி பெற்று, தவறில்லாமல் தொழில் செய்யும்போது, ஏற்றுமதியில் லாபம் பார்க்கலாம். தொழில் சிந்தனையுள்ள இளைஞர்களும், சுயதொழில், சிறுதொழில் புரிபவர்களும் ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதி தொழிலை தவறில்லாமல் தெரிந்து கொண்டு, அதில் வெற்றிகரமாக ஈடுபடவும், புதிய மார்க்கெட்டிங் வாயில்களை ஏற்றுமதியாளர்கள் தேடித் திறக்க உதவும் வகையில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட இருக்கிறது. ஏற்றுமதி டாக்குமென்டேஷன் விதிகள் பற்றிய சிறந்த பயிற்சியாளரும், ஏற்றுமதி மற்றும் பங்குச் சந்தை வர்த்தகம் குறித்த கட்டுரைகளை முன்னணி தமிழ் நாளிதழ்கள், வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவரும், தமிழகம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுமதி பயிற்சி அளித்து வருபவருமான, மும்பையின் பிரபல வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் இந்த பயிற்சியை அளிக்க உள்ளார்.

இலவச அனுமதி:

கோவை பீளமேட்டில் உள்ள, 'பி.எஸ்.ஜி. டெக்.,' கல்லூரி அரங்கத்தில், வரும் டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கருத்தரங்கு நடக்கிறது. பயிற்சி கட்டணம், 2,500 ரூபாய். மதிய உணவு, பயிற்சி புத்தகம் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு, 50 சதவீத கட்டண சலுகை. ஏற்றுமதி தரத்தில் பொருள் தயாரிக்கும் மகளிர் சுய உதவி குழு பெண்கள், 20 பேருக்கு, இலவசஅனுமதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 098696 - 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கோவை விஜயா பதிப்பகம், இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது. விஜயா பதிப்பக கிளைகளில் நேரில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் - 

Sunday, December 14, 2014

Export Programme in Kovai on 28th - Dinamalar advt


Advt in Today's Kovai Dinamalar for the programme. Thanks Dinamalar for the sponsorship. It is great to associate with Dinamalar.



Sunday, December 7, 2014

கோவையில் டிசம்பர் 28 ஞாயிறன்று ஏற்றுமதி செமினார்

ஏற்றுமதி, பங்குச் சந்தை சார்ந்த கட்டுரைகளை, 15 ஆண்டுகளாக எழுதியும், பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி' என்ற கருத்தரங்கை, கோவையில் முதன் முறையாக தமிழில் நடத்துகிறார்.

சிறு தொழில் வணிகம் துவங்கி, முன்னணி நிறுவனங்கள் வரை, எல்லாருமே தொழில் வியாபாரத்தில் முன்னணி இடத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்திய கரன்சிகளை பார்த்து பூரித்து தொழில் செய்யும் பலருக்கும், அமெரிக்க டாலர்களையும், உலக கரன்சிகளையும் கொட்டித்தரும் ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு உண்டு. ஏற்றுமதி என்பது, வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யும் தொழில் தான். ஆனால் அது, தொழில் துவங்கியவுடன் புதையல் போல டாலர்கள் கொட்டாது. முறைப்படி, தவறில்லாமல், தெளிவான வெளிநாடுகளின் சட்ட, திட்டங்களை புரிந்து கொண்டு செய்தால் ஏற்றுமதியில் ஜெயிக்கலாம். இறக்குமதி செய்ய நினைப்போர், பொருட்களை மார்கெட்டிங் செய்வது எப்படி என்று தெரியாமல் உள்ளனர். இதில் தான், பல தடங்கல்கள் வருகின்றன. இவற்றைப் போக்கும் விதமாக, ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி மற்றும் இணையம் மூலம் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என, ஏற்றுமதி, பங்குச்சந்தை சார்ந்த கட்டுரை களை, 15 ஆண்டுகளாக எழுதி, பல நாடுகளிலும் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், கோவையில் வரும் டிசம்பர் 28ம் தேதி ஞாயிறன்று  விவரிக்க உள்ளார். இந்த கருத்தரங்கம், முற்றிலும் தமிழில் நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடக்கும். பயிற்சிக் கட்டணம், 2,500 ரூபாய். தேநீர், மதிய உணவு, பயிற்சி புத்தங்கள் இதில் அடங்கும்.

இலவச அனுமதி

ஏற்றுமதி தரத்துக்கு பொருட்களை தயாரித்து, ஆனால், ஏற்றுமதியில் இதுவரை ஈடுபடாமல் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த, 20 பேருக்கு, இலவச அனுமதியுடன் பயிற்சி தரப்பட உள்ளது. மாணவர்களுக்கு, 50 சதவீத கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 'தகுதி உடைய மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மும்பை எண்ணுக்கு தொடர்பு கொண்டு (எண்: 09869616533 கணேசன் ) முன்பதிவு செய்யலாம்.

கருத்தரங்கம் கோவையில் கீழ்கண்ட இடத்தில் நடைபெறுகிறது:
பி.எஸ்.ஜி. காலேஜ் ஆடிட்டோரியம், பீளமேடு, கோவை.