Saturday, October 20, 2012

எங்களது வெளிநாட்டு கம்பெனி நாங்கள் இந்தியாவிற்குள் அவர்கள் சொல்லும் கம்பெனிக்கு சப்ளை செய்வதற்காக எங்களுக்கு பாரின் கரன்சியாக பணத்தை அனுப்ப இயலுமா? அதை நாங்கள் ஏற்றுமதி வரவு என்று எடுத்துக் கொள்ள இயலுமா?


ஏற்றுமதி கேள்வி பதில்

ராமசுப்ரமணியன்
கோவை


கேள்வி

இந்தியாவில் ஒரு கம்பெனி வெளிநாட்டில் இருந்து சரக்குகளை ஆர்டர் செய்துள்ளது.  அந்த வெளிநாட்டுக் கம்பெனிக்கு இந்தியாவில் தொழிற்சாலை இருப்பதால், அந்த தொழிற்சாலையை இந்தியாவிலிருந்து வாங்கும் கம்பெனிக்கு சப்ளை செய்யச் சொல்கிறது. வெளிநாட்டு கம்பெனிக்கு இந்திய கம்பெனி வெளிநாட்டு பணமாக அனுப்பி விடும். எங்களது வெளிநாட்டு கம்பெனி நாங்கள் இந்தியாவிற்குள் அவர்கள் சொல்லும் கம்பெனிக்கு சப்ளை செய்வதற்காக எங்களுக்கு பாரின் கரன்சியாக பணத்தை அனுப்ப இயலுமா? அதை நாங்கள் ஏற்றுமதி வரவு என்று எடுத்துக் கொள்ள இயலுமா?


பதில்
கடினமான கேள்வி. இரண்டு முறை படித்தால் தான் புரியும். பதில் சுலபம். நீங்கள் சரக்குகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யாததால் அதை நீங்கள் ஏற்றுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது. உங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதில் தப்பில்லை. ஆனால் அதை ஏற்றுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டாவது இந்தியாவில் உங்களிடமிருந்து பொருட்கள் வாங்கும் கம்பெனியும் பாரின் கரன்சியை அனுப்ப நினைப்பதால் (சரக்குகளை  இந்தியாவில் இருந்து வாங்கிக்கொண்டு) ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவேண்டும்.

No comments:

Post a Comment