Showing posts with label பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு. Show all posts
Showing posts with label பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு. Show all posts

Friday, June 22, 2012

பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு


பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு 

உலகளவில் அதிகம் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், வாழை, மாம்பழம் இன்னும் சில பழங்கள் ஆகியவை உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், உற்பத்தி செய்யும் பழங்களில் சுமார் 40 சதவீதம் விற்பனைக்கு செல்லும் முன்பே அழுகிவிடுகிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நமது கோவை வேளான் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்ததன் பலன், இன்னும் சில வருடங்களில் நமக்கு உதவும். கனடாவின் கயல்ப் யுனிவர்சிட்டியும் கண்டுபிடித்த ஹெக்சானேல் என்று ஒருவித கெமிக்கலும், கோவை வேளான் பல்கலைக்கழக விஞ்ஞானி கண்டுபிடித்த நானோ பிலிமும் இணைந்து பாக்கிங் செய்து அனுப்பும் போது பழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருக்க உதவுகிறது. இது 30 சதவீதம் பழங்கள் கெடாமல் இருக்க வழிவகை செய்கிறது. இது நமது ஏற்றுமதிக்கு பெரிதும் உதவும்.