Showing posts with label ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?. Show all posts
Showing posts with label ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?. Show all posts

Sunday, May 6, 2012

விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?


விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்றம் தருமா?

தட்பவெப்ப நிலை காரணமாக இந்த வருடம் மாங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியா முழுவது இதே நிலை தான். இந்தியாவில் அதிகம் மாம்பழம் உற்பத்தி செய்யும் மஹாராஷ்டிராவிலேயும் இதே நிலை தான். அங்கு அதிகமாக விளையும் அல்போன்சா மாம்பழம் இந்த வருடம் 5 டஜன்கள் 5000 ரூபாய் வரை சென்றது. தற்போது 2000 ரூபாய் வரை வந்து நிற்கிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைச்சல் குறைவால்,  மாங்காயின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக பெங்களூரா, தோத்தாபுரி, மல்கோவா உள்ளிட்ட ரக மா அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊறுகாய் தயாரிப்பதற்கு உகந்த ரகம் பீத்தர் ஆகும். இதுவும் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது . 

இந்தாண்டு தட்பவெப்ப நிலை காரணமாக, மா மரங்களில் பூக்கள் பூப்பது தாமதமானது. இதனால், ஊறுகாய் மாங்காய் அறுவடையும் தாமதமாகியுள்ளது. விலையும் கூடியுள்ளது. சீ சீ இந்த மாம்பழம் புளிக்கும் என்று நிலைக்கு போகாமல் நம்மை மாம்பழங்கள் விலை குறைந்து நம்மை மகிழ்விக்க வேண்டும். விலை கூடுதலாலும், விளைச்சல் குறைவாலும் இந்த வருடம் ஏற்றுமதி குறைய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.