Monday, March 5, 2012

ஏற்றுமதியாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்?, மிளகு ஏற்றுமதி


ஏற்றுமதியாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்?

வெளிநாட்டில் கம்பெனி வைத்திருப்பவர் உங்களை தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பார்கள். அந்த நாட்டில் அவர்கள் கம்பெனி, கம்பெனி அதிகாரிகள் மற்றும் கவர்மெண்ட் அதிகாரிகளை பார்த்துப் பேசலாம் என்றும் பின்னர் ஏற்றுமதி பற்றி பேசலாம் என்று கூறுவார்கள். நீங்களும் இது தான் சரியான வழி என்று நினைத்து போவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் போது அங்கு இருப்பவர்களுக்கு கிப்ட்கள் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு லிஸ்ட்  வரும். அதை நீங்கள் வாங்கிக் கொண்டு சென்றால் உங்களை தங்கியிருக்கும் ஒட்டலில் வந்து பார்த்து அந்த கிப்ட்களை வாங்கி முடித்தவுடன் ஆட்கள் மாயமாக மறைந்து விடுவார்கள். அப்புபுறம் எவ்வளவு தொடர்பு கொண்டாலும் போனை எடுக்க மாட்டார்கள்.


மிளகு ஏற்றுமதி

இந்தியாவில் மிளகு உற்பத்தி தென் இந்திய மாநிலங்களில் தான் அதிகம் இருக்கிறது. அதாவது குறிப்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான். கேரளா இந்திய உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு அதிகமாக  செய்து வருகிறது. இந்தியாவில் 75 வகையான மிளகு விளைவிக்கப்படுகிறது.

4 comments: