Monday, March 12, 2012

அர்ஜென்டினாவில் புதிய இறக்குமதி விதி

அர்ஜென்டினாவில் புதிதாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இறக்குமதி செய்வதற்கு முன்பு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுத் தான் இறக்குமதி செய்யமுடியும் என்று. இது முன்பே காண்டிராக்ட் போட்டவர்களுக்கும், சரக்குகளை தயார் செய்து வைத்திருப்பவர்களுக்கும் மிகவும் கஷ்டமான ஒன்று. இதனால் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் நாட்டின் பிரபலமான லோகோ, அந்த நாட்டின் பிரபலமான கம்பெனிகளின் லோகோ போன்றவைகளை போட்டு சரக்குகள் தயார் செய்து வைத்திருப்பவர்களின் பாடு இன்னும் திண்டாட்டம் தான். தற்போது இந்திய அரசாங்கத்தின் மூலம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் இந்த கஷ்டங்களை எடுத்துக் கூற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment