Monday, April 23, 2012

லிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி


லிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 

பீகாரில் உள்ள முஸாபூர் மாவட்டத்தில் 76 கிராமங்களை சேர்ந்த 2,100 விவசாயிகள் 1,200 ஹெக்டேரில் ஆர்கானிக் லிச்சி  உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது  15,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து வருகிறார்கள்.
தில்லி மற்றும் மகாராஷ்டிரா, உ.பி. போன்ற மாநிலங்களில் லிச்சிக்கு பெரிய சந்தை உள்ளது. தென்இந்தியாவில் குறிப்பாக  ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் லிச்சி விரும்பப்படுகிறது. தற்போது கேரளா மாநிலத்திலும் பீகாரின் ஆர்கானிக்  லிச்சிக்கு ஆர்வம் காட்டப்படுகிறது.
தேசிய மொத்த உற்பத்தியில் 55 சதவீதத்தை பீகார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பீகாரில் உற்பத்தி செய்யப்படும் ஆர்கானிக் லிச்சியில் சுமார் 1000 கிலோ வரை அந்த மாநிலத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. இது அவர்களின் விற்பனையை கூட்டுவதற்கு உதவுகிறது என்கிறார்கள். மேலும், இண்டர்நேஷனல் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை.

No comments:

Post a Comment