Sunday, December 25, 2011

ஏறுகிறதா ஏற்றுமதி? அடைவோமோ இந்த வருட டார்கெட்டை?, மஞ்சள் விலை மர்மம், காடு வளர்ப்பும், ஏற்றுமதியும், ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்,


ஏறுகிறதா ஏற்றுமதி? அடைவோமோ இந்த வருட டார்கெட்டை?

நாம் சில வாரங்களுக்கு முன்பு எதிர்பார்த்தது நடந்தே விட்டது. அதாவது ஏற்றுமதி புள்ளிவிபரங்களில் தவறு நடந்துள்ளதா என்று பலரும் அரசாங்கத்திடம் கேட்ட போது, அப்போது இல்லை என்று சமாளித்தாலும், தற்போது கொல்கத்தாவில் உள்ள ஏற்றுமதி புள்ளி விபர அலுவலகத்தில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குளறுபடியால் 9 பில்லியன் டாலர் அளவு ஏற்றுமதி உயர்த்தி காட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது 45,000 கோடி ரூபாய் அளவிற்கு.  ஆண்டு தொடக்கத்தில் நன்றாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி படிப்படியாக குறைந்து தற்போது நவம்பர் மாத ஏற்றுமதி சென்ற வருட இதே கால ஏற்றுமதி அளவை விட 4.2 சதவீதமே கூடியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஷாக்கடிக்கும் செய்தி தான். உலகம் முழுவது பல ஷாக்கடிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இது ஒரு பெரிய செய்தியல்ல என்பதே நமது கருத்து. இந்த வருட ஏற்றுமதி டார்கெட்டை எட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் என்று அரசாங்கமே தெரிவித்துள்ளது.
இந்த வருடம் அதிகம் ஏற்றுமதி செய்துள்ளவை தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், பெட்ரோலியம் பொருட்கள், எஞ்சினியரிங் பொருட்கள், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், செயற்கை இழை, காட்டன் யார்ன் மேட் அப்ஸ், எலக்ட்ரானிக் சாமான்கள், மருந்துப் பொருட்கள், கெமிக்கல்ஸ், ப்ளாஸ்டிக் பொருட்கள், லெதர் மற்றும் லெதர் பொருட்கள், மெரைன் ப்ராடக்ஸ் போன்றவை ஆகும்.


மஞ்சள் விலை மர்மம்
200 கிராம் மஞ்சள்தூள் வாங்கினேன், விலை ரூபாய் 50 என்று போட்டிருந்தது. அதற்கு அரை மணிநேரம் முன்பு தான் ஒரு மஞ்சள் உற்பத்தியாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறினார் சென்ற வருடம் 100 ரூபாய் கிலோ வரை இருந்தது, தற்போது கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கு வந்து விட்டது என்று கூறினார். பாருங்கள் அரைக்காத மஞ்சள் கிலோ 35 முதல் 45 ரூபாய், ஆனால் அரைத்த மஞ்சள் கிலோ 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? பொருளை வேல்யு அடிசன் செய்து விற்பது நல்லது என்று. 

இந்தியாவில் மொத்தமே மூன்று மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. முதலிடம் ஆந்திராவுக்கு. தமிழ்நாடும், ஒரிசாவும் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன. ஆந்திரா 60 சதவீதமும், தமிழ்நாடு, ஒரிசா தலா 20 சதவீதமும் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளில் 70 சதவீதம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. மீதம் 30 சதவீதம் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாகிஸதான், சைனா, ஹைதி, ஜமைக்கா நாடுகள் மஞ்சள் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன. ரஷ்யா, அமெரிக்கா, யு.கே., ஜப்பான் ஆகிய நாடுகள் முக்கியமான இறக்குமதி நாடுகள் ஆகும்.


காடு வளர்ப்பும், ஏற்றுமதியும்
சும்மா இருந்த தரிசு நிலங்களில் காடு வளர்ப்புக்காக பிரித்து கம்பெனிகளுக்கும், தனியார்களுக்கும் பிரித்து கொடுத்து வியட்நாம் தமது காட்டுப் பொருட்களின் ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது 1998ல் 108 மில்லியன் டாலர் அளவாக இருந்த ஏற்றுமதி, 2005ம் வருடம் 1700 மில்லியன் டாலராக கூட்டியுள்ளது. இது போல இந்தியாவில் 28 மில்லியன் ஹெக்டேர்கள் இது போல காடு வளர்க்க ஏதுவாக இருக்கிறது. கம்பெனிகளுக்கும், தனியார்களுக்கும் பிரித்து கொடுத்து காடு வளர்ப்பை ஊக்கப்படுத்தினால் காட்டுப் பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் கூடும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. முன்பு டீ, காபி தோட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் இது போல செய்துள்ளது. இது டிம்பர், பேப்பர் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தாராளமாக வழங்கும். மேலும், நாட்டின் பசுமைக்கும் வழிவகுக்கும்.


ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்
ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் செய்வதற்கு இந்தியாவில் பல அரசாங்க இன்ஸ்பெக்ஷன் நிலையங்கள் இருக்கின்றன. சில சமயம் பல வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் வெளிநாட்டை சேர்ந்த இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகளை குறிப்பிடுவார்கள். இதில் இரண்டு ஏஜென்சிகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று SGS, இன்னொன்று Lloyd's Register Inpsection Agency.  இவை இரண்டும் உலகப் புகழ் பெற்ற இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகள். இவை இந்தியாவில் பல இடங்களில் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன.


கேள்விக்கு என்ன பதில்?

சுதர்சன்
கேள்வி

ASAP மற்றும் MAQ என்றால் என்ன?

பதில்ASAP என்றால் As Soon As Possible என்று அர்த்தம். அதாவது எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று பொருள். MAQ என்றால் Minimum Order Quantity என்று அர்த்தம். அதாவது ஏற்றுமதியிலோ அல்லது உள்நாட்டு வியாபாரத்திலோ குறைந்த பட்ச ஆர்டர் என்பதை தான் இவ்வாறு கூறுவார்கள்.


கேள்வி
நாம் முன்னோர்கள் போல அரிசி உணவை குறைத்து வரகு, சோளம், கம்பு, கேப்பை என்று உட்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இது போல தானியங்களுக்கு வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இவைகள் ஹிந்தியில் எப்படி அழைக்கப்படுகின்றன?

பதில்
வரகு ஹிந்தியில் செனா என்றும், சோளம் ஹிந்தியில் ஜோவர் என்றும், கம்பு ஹிந்தியில் பஜ்ரா என்றும், கேப்பை ஹிந்தியில் ராகி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ப்ரோஸ, சோர்கம், பேர்ல், பிங்கர் என்று அழைக்கப்படுகின்றன.


இந்த வார இணையதளம்
 
www.msme.gov.in

சிறிய மற்றும் குறும் தொழில்களை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அரசாங்க இணையதளம். சிறிய தொழில்கள் செய்பவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணையதளம். அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் உதவி, ஏற்றுமதி, டிரெயினிங், அவர்களின் பப்ளிகேஷன்ஸ், மேலும் பல இணையதளங்களின் இணைப்புக்கள் என்று ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்த தொடர் சம்பந்தமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment