Monday, October 3, 2011

ஏற்றுமதி உலகம் - 12

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



மாதுளம்பழம் ஏற்றுமதி
இந்தியா உலகத்தில் அதிகமாக பழங்கள் உற்பத்தி செய்தாலும் அதன் ஏற்றுமதியில் சிறக்கவில்லை. இந்தியாவின் முன்னனி பழங்கள் ஏற்றுமதியாளர்களான கேபி எக்ஸ்போர்ட்ஸ் தற்போது கேப் சர்ட்டிபைட் மாதுளம்பழங்களை தங்களது அகமதாபாத் தோட்டத்திலிருந்து விளைவித்து ஏற்றுமதி செய்கிறார்கள். விளைச்சலில் குறைந்த அளவு பூச்சி மருந்துகள் உபயோகித்து விளைவிக்கிறார்கள். வருடத்திற்கு 2000 டன்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சோயா மீல்மாதத்திற்கு சுமார் 150,000 டன்கள் சோயா மீல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகமாக இந்தூரிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சோயா மீல் அதிகமாக தீவனங்களில் கலப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது

ஹெ.எஸ். கோடுஒரு பொருளுக்கு இந்தியாவில் ஒரு பெயர் இருக்கும். அதே பொருளுக்கு மற்ற நாட்டில் வேறு பெயர் இருக்கும். இந்தக் குழப்பத்தை தவிர்ப்பதற்காக தான் ஹெ.எஸ். கோடு கொண்டுவரப்பெற்றது. அதாவது, ஹார்மனைஸ்டு கோடு எனப்படும். இது கிட்டதட்ட 11000 பொருட்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நம்பர் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நம்பரை குறிப்பிடும் போது இரு நாட்டவரும் தாம் வாங்கும் பொருள், விற்கும் பொருள் சரியானது தானா என்று சரிபார்த்துக் கொள்ள உதவும். இது புத்தகமாகவும் கிடைக்கிறது. பல இணையத்தளங்களிலும் எளிதாக இந்த கோடுகளை காணலாம்.


இந்தியாவின் ஏற்றுமதிஏப்ரல் முதல் ஜுன் வரை மூன்று மாதங்களில் 108 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். சென்ற வருடம் முழுவதும் 246 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இந்த வருட டார்கெட் 300 பில்லியன் டாலர்களாகும். முதல் மூன்று மாதத்திலேயே 108 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துவிட்டதால் 300 பில்லியன் டாலர் அளவை இந்த வருடம் எட்டிவிட முடியும் என அரசாங்கம் கருதுகிறது.


முந்திரிப்பருப்பு2009-10 வருடத்தில் இந்தியாவிலிருந்து 117453 டன்கள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2797 கோடி ரூபாய்கள் ஆகும். இந்த வருடம் 2010-11 வருடம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 67792 டன்கள் 1920 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் பண்ருட்டி, கன்யாகுமரி மாவட்டங்களில் பல இடங்கள், கேரளாவில் கொல்லம் ஆகிய இடங்கள் முந்திரி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சென்று பார்த்தால் உங்களுக்கும் இதன் ஏற்றுமதி பற்றி ஆர்வம் வரும். முந்திரி ஏற்றுமதி வாரியம், முந்திரி ஏற்றுமதிக்கு உதவும் வகையில் பல திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.


நேபாளத்தின் ஏற்றுமதி, இறக்குமதிநேபாளம் வருடத்திற்கு 6000 கோடி ரூபாய்கள் தாம் ஏற்றுமதி செய்கிறது. அதே சமயம் இறக்குமதி அதற்கு 6 மடங்கு இருக்கிறது. அதாவது கிட்டதட்ட 36000 கோடி ரூபாய்கள். நேபாளம் நாடு நமக்கு அருகில் இருப்பதால் இந்திய பொருட்களுக்கு அந்த நாட்டிலும், அருகில் உள்ள பூட்டான் போன்ற நாட்டிலும் மவுசு அதிகம். நேபாளத்திலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்
உல்லன் கார்பெட், கார்மெண்ட், பருப்பு வகைகள், டெக்ஸ்டைல்ஸ், பாலியஸ்டர் மற்றும் யார்ன். இது தவிர மற்ற எல்லா பொருட்களுக்கும் இந்தியாவிலிருந்து நிறைய ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருக்கிறது.

என்னனென்ன கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன?ஆர்ட் மெட்டல் பொருட்கள், மர வேலைப்பாடு பொருட்கள், கையால் பிரிண்ட் செய்யப்பட்ட டெக்ஸ்டைல்ஸ், ஸ்கார்ப், எம்பிராய்டட் துணிகள், ஷால், ஜரி மற்றும் ஜரி வேலைப்பாடு உள்ள துணிகள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. மாதத்திற்கு 700 கோடி ரூபாய்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


இந்த வார இணையதளம்இணையதளங்கள் உங்களது ஏற்றுமதிக்கு மிகவும் இன்றியமையாதது.
http://www.singaporefva.com/ சிங்கப்பூர் பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணையதளம். 1948ல் 18 மெம்பர்களுடன் துவங்கப்பட்ட இந்த சங்கம் தற்போது மிகவும் பெரிதாக வளர்ந்துள்ளது. இதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன. நிச்சியம் உங்களுக்கு உபயோகமான இணையதளம்.


கேள்விக்கு என்ன பதில்?
ஜவஹர், சீர்காழி
கேள்வி
ஏற்றுமதியை ஏஜெண்ட் மூலமாக செய்யும் போது அவருக்கு கமிஷன் கொடுக்க இயலுமா? அவர் வெளிநாட்டில் இருக்கிறார், ஆகவே வெளிநாட்டிற்கு பணத்தை அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?
பதில்
ஏற்றுமதி வணிகத்தில் நாமே ஆர்டர் பிடிப்பது என்பது சிறிது கடினமான ஒன்று தான். ஆதலால் ஏஜெண்ட்களை நியமித்துக் கொள்ளலாம். அவர்கள் வாங்கிக் கொடுக்கும் ஆர்டர்களுக்கு கமிஷன் நீங்கள் வெளிநாட்டுப் பணமாக அனுப்பலாம். இதை ரிசர்வ் வங்கி அனுமதியளிக்கிறது. முன்பு இத்தனை சதவிகிதம் தான் கமிஷன் அனுப்பலாம் என்று இருந்ததை தற்போது எடுத்து விட்டார்கள். எத்தனை சதவீதம் கமிஷன் வேண்டுமானாலும் வங்கி முலமாக அனுப்பலாம்.


துரை, வேலூர்
கேள்வி
ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதுண்டா?
பதில்:
நல்ல கேள்வி. பொதுவாக ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், சில பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்யும் விதமாக ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பொருள் இந்தியாவிற்கே தேவையாக இருக்கிறது, அதே சமயம் அதன் ஏற்றுமதியை தடை செய்யாமல் குறைக்க வரி விதிக்கப்படும். அப்படி வரி விதிக்கப்படும் சமயத்தில் அந்தப் பொருளின் விலை அதிகமாவதால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வேறு நாடுகளிலிருந்து அந்தப் பொருளை வாங்கிக் கொள்வார்கள். இதன் மூலம் அந்தப் பொருளின் ஏற்றுமதி குறையும் வாய்ப்புக்கள் உள்ளது.

உங்களது கேள்விகளையும், கருத்துக்களையும் எழுதி அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment