Sunday, November 27, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 20, ஆர்கானிக், ஏமாற்று புராடக்ட்கள், சணல் பொருட்கள் ஏற்றுமதி, அக்டோபர் மாத ஏற்றுமதி, கேள்விக்கு என்ன பதில்?, இந்த வார இணையதளங்கள்

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 20
சேதுராமன் சாத்தப்பன்



டாலர் ரூபாய் மதிப்பு 50ரூபாயை தாண்டி ஏற்றுமதியாளர்கள் மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. சென்ற வார நிகழ்வுகளை பார்ப்போம்.

கைவினைப்பொருட்கள்
நவம்பர் 14 முதல் 27ம் தேதி வரை டெல்லி பிரகதி மைதானில் இண்டர்நேஷனல் டிரேட் பேர் நடக்கவுள்ளது. அதை ஒட்டி கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்காக கைவினைபொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகமும், தேசிய டிசைன் மற்றும் புராடக்ட் டெவலப்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஏற்றுமதியாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. இது இந்திய கைவினைப்பொருட்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் விளங்கும். க்ராப்ட் எக்ஸ்சேஞ் புரோகிராமும் நடைபெறவுள்ளது. அதாவது இந்தியாவில் ஒரு மாநிலத்தில், ஒரு கிளஸ்டரில்  உள்ள கைவினைஞர்கள் தங்கள் திறமைகளை மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும். ஒருகிணைந்த விற்பனை முயற்சி, ஒருகிணைந்த மார்க்கெட்டிங் போன்றவைகளுக்கு அடித்தளங்கள் ஏற்பட இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும்.


ஆர்கானிக்
கர்நாடாகாவில் மட்டும் 76000 ஹெக்டேர்களுக்கு மேல் ஆர்கானிக் விவசாயம் நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆர்கானிக் பேரில் ஐரோப்பா நாடுகளை சேர்ந்த 170 ஸ்டால்கள் பங்கு பெற்றன. இது தவிர இந்தியாவின் 12 மாநிலங்களும் பங்கு பெற்றன. ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புக்கள் இருக்கிறது. ஜெர்மனி ஆர்கானிக் பொருட்களை அதிகம் வாங்குகிறது. அதாவது 40 சதவீதம் பொருட்களை சீனா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வாங்குகிறது. இந்தியாவில் இருந்து 5 முதல் 6 சதவீதம் மட்டுமே வாங்குகிறது.



ஏமாற்று புராடக்ட்கள்

ஒரு பிராண்டட் புராடக்டைப் போலவே போலியான புராடக்ட்கள் தயாரித்து விற்பனை செய்பவர்களால் வருடத்திற்கு 5 பில்லியன் டாலர்கள் நஷ்டமாகிறது (சுமார் 25000 கோடி ரூபாய்கள்). இது கடத்தப்படுதல், வரி ஏமாற்றும், பிராண்ட் மோசடி, போலியான புராடக்ட்கள் என்று பல வழிகளில் நடக்கிறது. மருந்திலும் போலிகள் உலவுகிறது.


சணல் பொருட்கள் ஏற்றுமதி

சணல் வாரியம் சிறிய மற்றும் நடுத்தர  தயாரிப்பாளர்களுக்கும், சிறிய குழுக்களுக்கும் சணல் பொருட்கள் தயாரிப்பில் பயிற்சி அளிக்கிறது சணல் வாரியம். பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பல இடங்களில் சணல் பைகளுக்கும், பேப்பர் பைகளுக்கும் நல்ல தேவை இருக்கிறது. இந்த வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 14000 கோடி ரூபாய்களுக்கு சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த வருடம் 15000 கோடி ரூபாய்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சணல் வாரியம் பல இடங்களில் பொருட்காட்சிகள் நடத்துகிறது. அங்கு ஸ்டால்களில் தங்களது தயாரிப்புக்களை வைப்பதற்கு சிறிய தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக இடம் வழங்கப்படுகிறது

அக்டோபர் மாத ஏற்றுமதி

ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி குறைவது கவலையளிக்ககூடிய விஷயம் தான். இந்த வருட அக்டோபர் மாத இந்திய ஏற்றுமதி, சென்ற வருட அக்டோபர் மாத ஏற்றுமதியை விட 10 சதவீதம் மட்டுமே கூடியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற வளர்ச்சி 80 சதவீதத்திற்கு மேல் இருந்தது. இரும்பு தாது ஏற்றுமதி தடை செய்யப்பட்டதும் ஒரு காரணம். அக்டோபர் மாதம் 19.9 பில்லியன் டாலர் அளவு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு வருடத்தில் மிகவும் குறைந்த அளவாகும்.

கேள்விக்கு என்ன பதில்?
கேள்வி

சென்ற வார கேள்வியை தொடர்ந்து, ஏற்றுமதி பணம் டிமாண்ட் டிராப்டாக அல்லது செக்காக வரும் போது என்ன ரேட் தருவார்கள் வங்கியில் என்று பலர் கேட்டுள்ளார்கள். நல்ல கேள்வி.

பதில்

ஏற்றுமதிக்கு பணம் சாதாரணமாக வங்கி மூலம் டி.டி. (டெலிகிராபிக் டிரான்ஸ்பர்) ஆகத்தான் வரும். டிமாண்ட் டிராப்ட் அல்லது செக்காக வரும் பட்சத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, அது போலியாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே, அந்த டிமாண்ட் டிராப்ட் அல்லது செக் மாறி உங்கள் அக்கவுண்டில் பணமாக வரும் வரை சரக்குகளை ஏற்றி அனுப்பி விட வேண்டாம். அப்படி பணமாக மாறி உங்கள் அக்கவுண்ட்க்கு வரும் பட்சத்தில் உங்களுக்கு டி.டி. பையிங் (அதாவது டெலிகிராபிக் டிரான்ஸ்பர் பையிங்) என்ற ரேட்டே கிடைக்கும்.



இந்த வார இணையதளங்கள்
நிறைய பேர் இந்திய அளவில் நடக்கும் டிரேட் பேர் பற்றிய தகவல்கள் கேட்பதால் அது சம்பந்தமான இணையதளங்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

அக்ரி டெக்னாலஜி பொருட்காட்சி, டெல்லி, டிசம்பர் 8 முதல் 10 வரை
http://www.eimaagrimach.in/

தேசிய மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அரசாங்கம் நடத்தும் நேஷனல் எக்ஸ்போ, டிசம்பர் 16 முதல் 18 வரை, ஆக்ரா. http://www.dcmsme.gov.in/  . மேலும்  விபரங்களுக்கு dcdi-agra@dcmsme.gov.in என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

தேசிய பிளாஸ்டிக் கண்காட்சி, பிப்ரவர் 1 முதல் 6 வரை, 2012, டெல்லியில். 1600க்கு மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்குபெறவுள்ளார்கள். 40 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகிறார்கள். விபரங்களுக்கு http://www.plastindia.org/

இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் sethuraman.sathappan@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்.

No comments:

Post a Comment