Sunday, June 19, 2011

ஏற்றுமதி உலகம் 1


சேதுராமன் சாத்தப்பன்
இந்தியாவின் ஏற்றுமதி பெருகி வருகிறது. தமிழ்நாட்டின் ஏற்றுமதியும் பெருகி வருகிறது. இந்த சமயத்தில் ஏற்றுமதி உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் எடுத்துக் கூறும் விதமாக இந்த தொடர் அமையும். சென்ற வாரத்தில் ஏற்றுமதி உலகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லும், வழிகாட்டியாக அமையும்.

இந்தியாவும் ஏற்றுமதியும்2009-2010 வருடத்தில் குறைந்து கொண்டே சென்ற ஏற்றுமதி, 2010-2011ம் ஆண்டில் மிகச் சிறப்பாக இருந்தது. மார்ச் மாத ஏற்றுமதி டார்கெட்டான 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தாண்டி 246 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 3000 கோடி ரூபாய்கள் அளவு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து வருகிறோம். வருடம் வருடத்தில் இன்னும் 25 சதவீதம் கூடுதலாக ஏற்றுமதி செய்ய டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வருடத்தில் இதை இரட்டிப்பாக்கவும், அதாவது 500 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கடல்பொருட்கள் ஏற்றுமதி உயர்வு

இந்தியாவின் கடல்பொருட்கள் ஏற்றுமதி 2009-10ம் ஆண்டு 2.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2010-11ம் ஆண்டு 2.6 பில்லியனாக கூடியுள்ளது. அதாவது சுமார் 25 சதவீதம் கூடியுள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கடல் உணவுப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் மஹாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஆகும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


குறைந்து வரும் மஞ்சள் ஏற்றுமதி


தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டு கொண்டு சென்ற வருடம் முழுவதும் ஏறிவந்தது மஞ்சள் (ஒரு வேளை அதுவும் தங்க கலரில் இருந்ததாலேயே என்னவோ). ஆனால், சமீப காலமாக சரிவு நிலை தொடங்கியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அதிகமான வரத்து, இரண்டாவது அதிகம் டிமாண்ட் இல்லாதது. கடந்த வருட ஏற்றுமதி அதற்கு முந்தைய வருட ஏற்றுமதியை விட குறைந்துள்ளது. இது தவிர இந்த வருடம் விளைச்சலும் அதிகம். இவை எல்லாம் சேர்ந்து விலையையும் குறைத்துள்ளன.


வெள்ளிப் பொருட்கள்


ஏற்றுமதிவெள்ளி விலை கூடிவருவது எல்லோருக்கும் ஒரு கவலை அளிக்கு விஷயம் தான். ஆனால், வெள்ளி விலை என்ன கூடினால் என்ன என்று வெள்ளிப் பொருட்களின் ஏற்றுமதி கூடி வருகிறது. அதாவது இந்தியாவிலிருந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்கள் 179 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் இதே சமயத்தில் செய்யப்பட்ட ஏற்றுமதியான 133 கோடி ரூபாயை விட அதிகமாகும். இந்திய வெள்ளிப் பொருட்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு ஏற்பட்டு வருகிறது. நம் சேலம் தான் இந்திய அளவில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ளவர்கள் மதிப்புக்கூட்டப்பட்ட மற்ற வெள்ளிப் பொருட்களை தயாரிப்பார்களேயானால் அது உலகளவில் சேலத்தை திரும்பிப் பார்க்க வைக்கும்.


தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது எப்படி?


தவறாமல் எல்லோரும் கேட்கும் கேள்வி இது. தவறில்லாமல் ஏற்றுமதி செய்ய மூன்று விஷயங்களை உங்கள் கண்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஒன்று தரமான பொருட்கள், இரண்டாவது சரியான விலை, மூன்றாவது தவறில்லாத ஏற்றுமதி டாக்குமெண்ட்கள். சரக்குகள் மிகவும் சிறப்பாக இருந்தாலும் ஏற்றுமதி டாட்குமெண்ட்களில் தவறிருந்தால் எல்.சி. மூலம் அனுப்பும் சரக்குகள் சர்ச்சைக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம். ஆதலால் எல்.சி.. மூலம் செய்யும் ஏற்றுமதியில் டாக்குமெண்ட்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.


இணையதளங்கள்

ஏற்றுமதியாளர்களுக்கு இணையதளங்கள் மிகவும் முக்கியமானவை. ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் இணையதளங்களில் நல்லவைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை வாரம் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். இந்த வாரம்http://www.economy.gov.ae/ஏற்றுமதி என்று எடுத்துக் கொண்டால் அருகிலுள்ள ஐக்கிய அரபு நாடுகளுக்கு பெருமளவில் செய்து வருகிறோம். அந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அந்த நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அந்த நாட்டின் அரசாங்க இணையத்தளமான http://www.economy.gov.ae/ மிகவும் உதவியாக இருக்கும். ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகளை பற்றி தகவல்களை அறிந்து கொள்ள உதவும் இணையத்தளம்.

ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்றுமதி குறித்து சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றில் வாரம் ஒன்று அல்லது இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளேன்.


கேள்விக்கு என்ன பதில்?

கேள்வி: விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யும் போது எந்த விவசாய விளைபொருள் எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? மேலும், என்ன விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்பதையும் எப்படி தெரிந்து கொள்வது?

பதில்: அபிடா இணையதளத்திற்கு (http://www.apeda.gov.in/) சென்று இடது பக்கம் இருக்கும் ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் என்ற பகுதிக்கு சென்றால் உங்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் கிடைக்கும். அதாவது, கடந்த மூன்று வருடங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் விவசாய விளைபொருட்கள் எவ்வளவு மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதை வைத்துக் கொண்டு ஏற்றுமதி செய்ய விரும்புபவர் என்ன பொருளை ஏற்றுமதி செய்ய இயலும், எந்த நாடுகளில் வாய்ப்புக்கள் உள்ளது என்றும் அறிந்து கொள்ளலாம்.


அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். sethuraman.sathappan@gmail.com

3 comments:

  1. GREETING OF THE DAY SIR,
    I WAS VERY MUCH IMPRESSED BY YOUR ARTICLE AND I DECIDED TO START EI BUSINESS.

    I HAVE LIST OF QUERIES REQ EXPORT IMPORT BUSINESS:
    1. SHALL I DO THIS BUSINESS AS PART TIME BUSINESS
    2. I HAVE HEARD THAT FOR OPENING EIC CURRENT ACCOUNT IS NEEDED? IS IT MANTADORY
    3. ONCE I OPEN MY EIC WHAT WOULD BE MY NEXT STEP

    ReplyDelete
  2. என்ன மாதிரியான கை நாட்டுகல்லாம்,ஒங்கல மாதிரியான ஆலுங்கதான் சார்
    ஹெல்ப் பண்ணணும்.இன்னும் நெரய எழுதுங்க,தொழில் நுட்பங்கல்,உத்திகல்,
    மக்கல் ரசனைகல்,முகவரிகல்.என்ன மாதிரியான மாடு மேய்கர பசங்கலே
    கம்யூட்டர் ஆப்ரேட்பன்னும் போது,தமிழ்ல எதுவுமே இல்லன்னா இன்னா
    அர்த்தம்.சும்மா ஓட்டுக்காவும்,கை தட்டுக்காகவும் தமிழ்,தமிழ்ன்னு அடிச்சுபானுங்க.

    ReplyDelete
  3. என்ன மாதிரியான கை நாட்டுகல்லாம்,ஒங்கல மாதிரியான ஆலுங்கதான் சார்
    ஹெல்ப் பண்ணணும்.இன்னும் நெரய எழுதுங்க,தொழில் நுட்பங்கல்,உத்திகல்,
    மக்கல் ரசனைகல்,முகவரிகல்.என்ன மாதிரியான மாடு மேய்கர பசங்கலே
    கம்யூட்டர் ஆப்ரேட்பன்னும் போது,தமிழ்ல எதுவுமே இல்லன்னா இன்னா
    அர்த்தம்.சும்மா ஓட்டுக்காவும்,கை தட்டுக்காகவும் தமிழ்,தமிழ்ன்னு அடிச்சுபானுங்க.

    ReplyDelete