Showing posts with label ஏற்றுமதி பாலிசியில் இருக்கும் அயிட்டம். Show all posts
Showing posts with label ஏற்றுமதி பாலிசியில் இருக்கும் அயிட்டம். Show all posts

Wednesday, August 1, 2012

இந்த வருடம் ஏற்றுமதி பாலிசியில் இருக்கும் அயிட்டம் அடுத்த வருடம் இல்லாமல் போய் விடுமா?


கேள்வி பதில்

மது
திருவெறும்பூர்

கேள்வி

இந்த வருடம் ஏற்றுமதி பாலிசியில் இருக்கும் அயிட்டம் அடுத்த வருடம் இல்லாமல் போய் விடுமா? இதற்கு வாய்ப்புக்கள் உண்டா?


பதில்

ஏற்றுமதிக்கு நிலையான பாலிசி உண்டு. அதாவது பல வருடங்களுக்கு முன்பு வருடம் ஒரு முறை பாலிசி மாறிக்கொண்டிருந்தது. அதனால் இந்தியாவில் இருந்து சரக்குகளை வாங்குவதற்கே பல நாடுகள் பயந்தன. பின்னர் அது மூன்று வருடத்திற்கு ஒரு பாலிசி என்ற முறையில் மாற்றப்பட்டது. தற்போது அது ஐந்து வருடத்திற்கு ஒரு பாலிசி என்ற வகையில் இருக்கிறது. அதே சமயம் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். அதாவது சில சமயம் சில பொருட்கள் நமது நாட்டிற்கு தேவைப்பட்டால் அதற்காக ஏற்றுமதியை தடை செய்ய வேண்டுமென்றால் அரசாங்கம் செய்யும். உதாரணம் வெங்காயம், கோதுமை, ஜீனி, இரும்பு தாது போன்றவை. அல்லது ஏற்றுமதி பொருட்களின் ஏற்றுமதியை குறைக்க வரி விதிக்கப்படும்.