Showing posts with label மதுரை மல்லி. Show all posts
Showing posts with label மதுரை மல்லி. Show all posts

Wednesday, April 4, 2012

மதுரை மல்லி


மதுரை மல்லி 

மதுரை என்றால் மல்லிக்கைப்பூவை யாரும் மறக்கமாட்டார்கள். உலகளவில் பிரசித்தி பெற்றது மதுரை மல்லி. அந்த மல்லிகைப்பூவை உலகளவில் ஒரு பிராண்டாக கொண்டு செல்ல கோவை விவசாயப் பல்கலைக்கழகமும், இக்ரிசாட்டும் சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றது. அப்படியென்ன மதுரை மல்லியில் விசேஷம் என்கிறீர்களா? தூக்கும் வாசனை, அதிகநாட்கள் கெடாமல் இருப்பது, கனமான இதழ்கள். அப்புறம் என்ன வேணும் மதுரை மல்லி உலக பிராண்டாக வருவதற்கு? மல்லிகைச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகளும், சரியான குளிர்பதனக்கிடங்குகளும் இருக்குமெனில் மதுரை மல்லி இன்னும் மணக்கும் என்பது அங்குள்ள உற்பத்தியாளர்களின் கோரிக்கை. நிறைவேறுமா? அடுத்த முறை மதுரை சென்று வரும் போது உங்கள் மனைவிக்கும் மறக்காமல் ஒரு முழும் மல்லிகைப்பூ வாங்கிச் செல்லுங்கள். கல்யாணம் ஆகாதவர்கள் காதலிக்கு வாங்கிச் செல்லுங்கள்.