Sunday, November 27, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 20, ஆர்கானிக், ஏமாற்று புராடக்ட்கள், சணல் பொருட்கள் ஏற்றுமதி, அக்டோபர் மாத ஏற்றுமதி, கேள்விக்கு என்ன பதில்?, இந்த வார இணையதளங்கள்

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 20
சேதுராமன் சாத்தப்பன்



டாலர் ரூபாய் மதிப்பு 50ரூபாயை தாண்டி ஏற்றுமதியாளர்கள் மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. சென்ற வார நிகழ்வுகளை பார்ப்போம்.

கைவினைப்பொருட்கள்
நவம்பர் 14 முதல் 27ம் தேதி வரை டெல்லி பிரகதி மைதானில் இண்டர்நேஷனல் டிரேட் பேர் நடக்கவுள்ளது. அதை ஒட்டி கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்காக கைவினைபொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகமும், தேசிய டிசைன் மற்றும் புராடக்ட் டெவலப்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஏற்றுமதியாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. இது இந்திய கைவினைப்பொருட்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் விளங்கும். க்ராப்ட் எக்ஸ்சேஞ் புரோகிராமும் நடைபெறவுள்ளது. அதாவது இந்தியாவில் ஒரு மாநிலத்தில், ஒரு கிளஸ்டரில்  உள்ள கைவினைஞர்கள் தங்கள் திறமைகளை மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும். ஒருகிணைந்த விற்பனை முயற்சி, ஒருகிணைந்த மார்க்கெட்டிங் போன்றவைகளுக்கு அடித்தளங்கள் ஏற்பட இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும்.


ஆர்கானிக்
கர்நாடாகாவில் மட்டும் 76000 ஹெக்டேர்களுக்கு மேல் ஆர்கானிக் விவசாயம் நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆர்கானிக் பேரில் ஐரோப்பா நாடுகளை சேர்ந்த 170 ஸ்டால்கள் பங்கு பெற்றன. இது தவிர இந்தியாவின் 12 மாநிலங்களும் பங்கு பெற்றன. ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புக்கள் இருக்கிறது. ஜெர்மனி ஆர்கானிக் பொருட்களை அதிகம் வாங்குகிறது. அதாவது 40 சதவீதம் பொருட்களை சீனா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வாங்குகிறது. இந்தியாவில் இருந்து 5 முதல் 6 சதவீதம் மட்டுமே வாங்குகிறது.



ஏமாற்று புராடக்ட்கள்

ஒரு பிராண்டட் புராடக்டைப் போலவே போலியான புராடக்ட்கள் தயாரித்து விற்பனை செய்பவர்களால் வருடத்திற்கு 5 பில்லியன் டாலர்கள் நஷ்டமாகிறது (சுமார் 25000 கோடி ரூபாய்கள்). இது கடத்தப்படுதல், வரி ஏமாற்றும், பிராண்ட் மோசடி, போலியான புராடக்ட்கள் என்று பல வழிகளில் நடக்கிறது. மருந்திலும் போலிகள் உலவுகிறது.


சணல் பொருட்கள் ஏற்றுமதி

சணல் வாரியம் சிறிய மற்றும் நடுத்தர  தயாரிப்பாளர்களுக்கும், சிறிய குழுக்களுக்கும் சணல் பொருட்கள் தயாரிப்பில் பயிற்சி அளிக்கிறது சணல் வாரியம். பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பல இடங்களில் சணல் பைகளுக்கும், பேப்பர் பைகளுக்கும் நல்ல தேவை இருக்கிறது. இந்த வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 14000 கோடி ரூபாய்களுக்கு சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த வருடம் 15000 கோடி ரூபாய்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சணல் வாரியம் பல இடங்களில் பொருட்காட்சிகள் நடத்துகிறது. அங்கு ஸ்டால்களில் தங்களது தயாரிப்புக்களை வைப்பதற்கு சிறிய தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக இடம் வழங்கப்படுகிறது

அக்டோபர் மாத ஏற்றுமதி

ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி குறைவது கவலையளிக்ககூடிய விஷயம் தான். இந்த வருட அக்டோபர் மாத இந்திய ஏற்றுமதி, சென்ற வருட அக்டோபர் மாத ஏற்றுமதியை விட 10 சதவீதம் மட்டுமே கூடியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற வளர்ச்சி 80 சதவீதத்திற்கு மேல் இருந்தது. இரும்பு தாது ஏற்றுமதி தடை செய்யப்பட்டதும் ஒரு காரணம். அக்டோபர் மாதம் 19.9 பில்லியன் டாலர் அளவு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு வருடத்தில் மிகவும் குறைந்த அளவாகும்.

கேள்விக்கு என்ன பதில்?
கேள்வி

சென்ற வார கேள்வியை தொடர்ந்து, ஏற்றுமதி பணம் டிமாண்ட் டிராப்டாக அல்லது செக்காக வரும் போது என்ன ரேட் தருவார்கள் வங்கியில் என்று பலர் கேட்டுள்ளார்கள். நல்ல கேள்வி.

பதில்

ஏற்றுமதிக்கு பணம் சாதாரணமாக வங்கி மூலம் டி.டி. (டெலிகிராபிக் டிரான்ஸ்பர்) ஆகத்தான் வரும். டிமாண்ட் டிராப்ட் அல்லது செக்காக வரும் பட்சத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, அது போலியாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே, அந்த டிமாண்ட் டிராப்ட் அல்லது செக் மாறி உங்கள் அக்கவுண்டில் பணமாக வரும் வரை சரக்குகளை ஏற்றி அனுப்பி விட வேண்டாம். அப்படி பணமாக மாறி உங்கள் அக்கவுண்ட்க்கு வரும் பட்சத்தில் உங்களுக்கு டி.டி. பையிங் (அதாவது டெலிகிராபிக் டிரான்ஸ்பர் பையிங்) என்ற ரேட்டே கிடைக்கும்.



இந்த வார இணையதளங்கள்
நிறைய பேர் இந்திய அளவில் நடக்கும் டிரேட் பேர் பற்றிய தகவல்கள் கேட்பதால் அது சம்பந்தமான இணையதளங்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

அக்ரி டெக்னாலஜி பொருட்காட்சி, டெல்லி, டிசம்பர் 8 முதல் 10 வரை
http://www.eimaagrimach.in/

தேசிய மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அரசாங்கம் நடத்தும் நேஷனல் எக்ஸ்போ, டிசம்பர் 16 முதல் 18 வரை, ஆக்ரா. http://www.dcmsme.gov.in/  . மேலும்  விபரங்களுக்கு dcdi-agra@dcmsme.gov.in என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

தேசிய பிளாஸ்டிக் கண்காட்சி, பிப்ரவர் 1 முதல் 6 வரை, 2012, டெல்லியில். 1600க்கு மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்குபெறவுள்ளார்கள். 40 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகிறார்கள். விபரங்களுக்கு http://www.plastindia.org/

இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் sethuraman.sathappan@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்.

Monday, November 21, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 19,உலகத்தில் ஏற்றுமதியில் உயர்ந்து நிற்கும் நாடுகள் (டாலர் மதிப்பில்),செப்டம்பர் மாத இந்திய ஏற்றுமதி,உலகத்தின் நம்பர் ஒன் பால் உற்பத்தியாளர் இந்தியா

சென்ற வார ஏற்றுமதி உலகம் 19
சேதுராமன் சாத்தப்பன்



அமெரிக்க டாலர் ரூபாய் மதிப்பு மேலும் கீழுமாக ஏறி இறங்கியது.  சென்ற வாரம் ஏற்றுமதி உலகம் சுழன்ற வேகமும் அப்படித்தான் இருந்தது. நிகழ்வுகளை காண்போம்.

உலகத்தில் ஏற்றுமதியில் உயர்ந்து நிற்கும் நாடுகள் (டாலர் மதிப்பில்)
ஐரோப்பிய நாடுகள்                   1952,000,000,000
சீனா                                                   1581,000,000,000
டச்சுலாந்து                                     1303,000,000,000
அமெரிக்கா                                     1289,000,000,000
ஜப்பான்                                              765,000,000,000
பிரான்ஸ                                           517,300,000,000
நெதர்லாந்து                                     485,900,000,000
தென் கொரியா                               448,400,000,000
இத்தாலி                                             448,400,000,000
யு.ஏ.ஈ.                                                  410,300,000,000
ரஷ்யா                                                 400,100,000,000
கனடா                                                  392,700,000,000
ஹாங்காங்                                        388,600,000,000
சிங்கப்பூர்                                            358,400,000,000
மெக்சிகோ                                          298,500,000,000
பெல்ஜியம்                                          284,200,000,000
ஸபெயின்                                           253,000,000,000
இந்தியா                                               245,900,000,௦௦000௦

இந்தியா 245 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிற்கு கீழேயும் பல நாடுகள் உள்ளது. இந்தியாவிற்கு மேலே உள்ள நாடுகள் கொடுக்கப்படவில்லை. இது சென்ற வருட மதிப்பு. நம்மை விட சிறிய நாடான சிங்கப்பூர் நம்மை விட அதிகம் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நறுமண பொருட்கள் ஏற்றுமதி
2025ம் வருடத்தில் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி 50000 கோடி ரூபாய்க்கு
2025ம் வருடத்தில், இன்னும் 14 வருடத்தில் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி மட்டும் 50000 கோடி ரூபாய்க்கு செய்ய இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய டாலர் மதிப்பில் 10 பில்லியன் டாலர் மதிப்பிற்கு. இது 2010-11ம் வருடத்தில் 6840 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தியா 175 வகை நறுமணப் பொருட்களை 160க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.


செப்டம்பர் மாத இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் செப்டம்பர் மாத ஏற்றுமதி 36.3 சதவீதம் கூடி அமெரிக்க டாலர் மதிப்பில் 24.8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இதற்கு முந்தைய இரண்டு மாதங்களில் இந்த சதவீத விகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், செப்டம்பரில் குறைந்துள்ளது.  ஐரோப்பா, மேற்கு ஆசிய நாடுகளி ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலைகள் தாம் இதற்கு காரணம். சிரியா நாட்டிற்கு நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பினால், இசிசிஜி ஏற்றுமதி இன்சூரன்ஸ அளிக்கும் போது பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கீரிஸ, துனிஷிய, யெமன், எகிப்து போன்ற நாடுகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். கிரீஸ, சிரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி அளவு 2010-11 ஆண்டில் பாதியாக குறைந்துள்ளது.


உலகத்தின் நம்பர் ஒன் பால் உற்பத்தியாளர் இந்தியா

பால் உற்பத்தி இந்தியாவின் பல கிராமப்புற மக்களுக்கு நிலையான வருமானத்தையும், அதே சமயம் கிராமப்புற குழந்தைகளுக்கு, மக்களுக்கு சக்தியான உணவையும் அளிக்கிறது. இந்தியா உலகத்தின் நம்பர் 1 பால் உற்பத்தியாளராக இருக்கிறது. உலகத்தின் மொத்த உற்பத்தியில் 13 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.  அதே சமயம் பால் பொருட்கள் ஏற்றுமதியில் இன்னும் அதிகம் நாம் கவனம் செலுத்தவில்லை. அரசாங்கம் பல சலுகைகள் அளித்தாலும், இன்னும் ஏற்றுமதியில் பின் தங்கி உள்ளோம்.. கிராமப்புறத்தில் அல்லது நகர்புற எல்லையில் பலர் சேர்ந்து செய்ய, நல்ல வருமானம் ஈட்டும் தொழில் இது.

கேள்விக்கு என்ன பதில்?

ராஜராஜன்
கரூர்

கேள்வி

ஆங்கில பேப்பர்களில் அமெரிக்க டாலரின் மதிப்பை போடும் போது பல மாதிரி குறிப்பிடுகின்றனர். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. எந்த ரேட் நமக்கு கிடைக்கும்?


பதில்:
ஏற்றுமதி செய்து பணத்தை நீங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு டி.டி. பையிங் என்ற ரேட் வழங்கப்படும். அதாவது உங்களுக்கு டெலிகிராப் டிரான்ஸபராக (டி.டி) வந்துள்ள டாலரை அவர்கள் (பையிங்) செய்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். இது தவிர பில் பையிங் என்று ஒன்று இருக்கும். அதாவது நீங்கள் ஏற்றுமதி டாக்குமெண்டை சமர்பிக்கும் போதே வங்கியில் டிஸகவுண்ட் செய்து பணத்தை கேட்டால் அப்போது பில் பையிங் ரேட் அப்ளை செய்வார்கள். உங்கள் ஏற்றுமதி பணம் கரன்சியாக உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு கரன்சி பையிங் ரேட் அப்ளை செய்வார்கள்.


இந்த வார இணையதளம்www.fnbnews.கம

உணவு பதப்படுத்துதல், குளிர்பானங்கள், பால் பொருட்கள், விவசாயம், நொறுக்கு தீனிகள், பழங்கள், காய்கறிகள், கடலுணவு, இறைச்சி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள், நறுமணப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியற்றைப் பற்றி தற்போதைய செய்திகளையும், தேவையான தகவல்களையும் கொண்டுள்ளது. மிகவும் உபயோகமான இணையதளம். இந்திய தகவல்கள் நிறைய உள்ளது ஒரு முக்கியமான அம்சம்.

இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும்,  கேள்விகளையும்  sethuraman.sathappan@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்.

Wednesday, November 16, 2011

இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி

அய்யா என் பெயர் ரவிகுமார்   நான் திண்டுக்கல் லிருந்து மெயில் அனுப்புகிறேன். நான் ஏற்றுமதி செய்வதற்கு மிக ஆர்வமாக உள்ளேன், நான் கடந்த ஆண்டு IE CODE வாங்கிவிட்டேன். இறக்குமதி  யாளர் கலை கண்டு பிடிக்க பல வழிகளில்  முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எனது நோக்கம் தரமான பொருட்களை ஏற்றுமதி செய்து சிறந்த ஏற்றுமதியாளர் ஆக வேண்டும் . எனது ஊரை சுற்றி ஏற்றுமதி செய்வதற்கு நிறைய பொருட்கள் உள்ளன (ஒட்டன்சத்திரம்  -காய்கறிகள்  , சிறுமலை -பழங்கள் , நத்தம் -புளி, மாங்காய் , கரூர் -துணிகள் , நிலக்கோட்டை -பூக்கள் ). அகவே இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய  இறக்குமதி  யாளர் கலை அறிந்து கொள்வதற்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .  நன்றி ரவிக்குமார் ,திண்டுக்கல் .


பதில்:

இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி:

1  உங்கள் பொருட்களுக்கு எந்த நாட்டில் வரவேற்பு இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.
2  அந்த நாட்டில் அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் சிறிய / பெரிய இறக்குமதியாளர்களை கண்டுபிடியுங்கள்.
3  இதற்கு அங்குள்ள எல்லோ பேஜஸ் / இணைய  தளங்கள் ஆகியவற்றை தொடர்பு கொண்டு வாங்குபவர் முகவரி கண்டுபிடியுங்கள். உங்கள் உறவினர் / நண்பர்களும் உதவலாம்.
4 பின் அவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
5 பின்னர் அந்த இறக்குமதியாளரை   பற்றி விசாரித்து ஏற்றுமதி செய்யுங்கள்.
6 சில பொருட்களை மட்டும் தெரிவு செய்து கொள்ளுங்கள். நிறைய பொருட்களை எடுத்து கொள்ளாதீர்கள்

அன்புடன்
சேதுராமன் சாத்தப்பன்

Tuesday, November 15, 2011

முருங்கக்காய்

அய்யா வணக்கம்,
எனக்கு கனடாவில் உள்ளவர் முருங்கக்காய் வேண்டும் என்று கேட்டு உள்ளார். நான் ஏஜெண்ட் மூலமாக ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன் , உடன் இது பற்றிய தகவல்களை தெருவிக்கும்படி கேட்டு கொள்கிறேன் .

         நன்றி!                                                                                          இப்படிக்கு,
                                                                                                                 ச.சுந்தர்.

====================
உங்களுக்கு ஏஜென்ட் தேவை இல்லை. நீங்களே ஏற்றுமதி செய்யலாம். ஆர்டர் எடுத்து தர தான் ஏஜென்ட் தேவை. ஏற்றுமதி செய்ய தேவை இல்லை. உங்களால் இந்த ஆர்டரை ஏற்றுமதி செய்ய இயலவில்லை என்றல் இன்னொருவருக்கு மாற்றி கொடுக்கலாம். அதற்கான கமிஷன்யை நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
வாழ்த்துகளுடன்
சேதுராமன் சாத்தப்பன்
===========================

Sunday, November 13, 2011

சென்ற வாரம் ஏற்றுமதி உலகம் - 18, சிவகாசி வெடி, காய்கறிகள் ஏற்றுமதி, எந்த வங்கியில் கணக்கு வைக்கலாம்?, கார்பெட் ஏற்றுமதி, சிட்பியின் மார்க்கெட்டிங் உதவி, தஞ்சாவூர் ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


சிவகாசி வெடி
இந்திய அளவில் சிவகாசி என்றாலே பட்டாசு தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு புகழ் பெற்ற சிவகாசி பட்டாசு ஏற்றுமதியில் இன்னும் பெரிய அளவு வளரவில்லை. பல தடைகள் அவர்களுக்கு இருந்தாலும், தொடர்ந்து அவர்கள் விற்பனை கூடிக்கொண்டு தான் இருக்கிறது. ஏற்றுமதிக்கு இன்னும் விலை போட்டியாக இருக்க வேண்டும், குறிப்பாக அவர்கள் சீனாவுடன் போட்டி போடும் அளவிற்கு விலை வைக்க வேண்டும், மிஷனரி மூலமாக வெடி தயாரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். சீனா தான் இதிலும் நமது நாட்டிற்கு போட்டியாக உள்ளது.


காய்கறிகள் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து காய்கறிகள் நிறைய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதில்லை. அருகிலுள்ள நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதியாகிறது. மத்திய கிழக்கு நாடுகள், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நோபாள், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.
 

எந்த வங்கியில் கணக்கு வைக்கலாம்?
பலர் பல சமயத்தில் கேட்கும் கேள்வி இது. அந்நிய செலாவணி விஷயங்களை கையாளும் வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைப்பதே உத்தமமானது. கூட்டுறவு வங்கிகளில் சில வங்கிகளில் தான் அந்நிய செலாவணி விஷயங்களை கையாளுவார்கள். அதே சமயம், எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வைக்கலாம்.



கார்பெட் ஏற்றுமதி
உலகளவில் இந்திய கார்பெட்களுக்கும் நல்ல மவுசு இருக்கிறது. விலை சகாயமாகவும் இருப்பதாலும், வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாகவும் இருப்பதாலும் இவை விரும்பப்படுகின்றன. இதன் ஏற்றுமதியை கூட்டுவதற்கென்றே ஒரு ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் இருக்கின்றது. தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகின்ற நாடுகளை தவிர மற்ற நாடுகளிலும் தற்போது மார்க்கெட்டிங் செய்ய இந்த கழகம் உதவி வருகிறது. குறிப்பாக பிரேசில், துபாய், சைனா, ஜப்பான், சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மிகவும் நுணுக்கமான பட்டுப்புடவைகள் நெய்பவர்கள் இருந்தாலும், கார்பெட் நெய்யும் கலை இன்னும் வரவில்லை. இது ஒரு குறைதான். தமிழ்நாட்டின் சீதோஷண நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.



சிட்பியின் மார்க்கெட்டிங் உதவி
சிட்பி சிறுதொழில் செய்பவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய பலவகைகளில் உதவுகிறது. வர்த்தக கண்காட்சிகளில் பங்குபெறவும், அது உள்நாட்டு கண்காட்சியாகவும் இருந்தாலும் சரி, வெளிநாட்டு கண்காட்சியாக இருந்தாலும் சரி. மேலும், வாங்குபவர், விற்பவர் இடையே நடக்கும் மீட்களில் கலந்து கொள்ளவும் இன்னும் பல வழிகளிலும் உதவுகிறது. சிட்பி வங்கியை தொடர்பு கொண்டு அவர்களின் உதவிகளை பெற முயலுங்கள்.



கேள்விக்கு என்ன பதில்?

கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்

கேள்விதஞ்சாவூர் ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில்இந்திய ஓவியங்களுக்கு, குறிப்பாக தஞ்சாவூர் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், நல்ல முறையில் இந்த வகை ஓவியங்கள் மார்க்கெட்டிங் செய்யப்படவில்லை. அது தான் குறை. இந்த வகை ஓவியர்களை அல்லது விற்பவர்களை ஒருங்கிணைத்து ஏற்றுமதி முயற்சிகள் செய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எல்லா வழிகாட்டுதலும் இந்த பகுதி மூலம் கிடைக்கும். மேலும், பத்தமடை, தைக்கால் போன்ற இடங்களில் பாய் நெய்பவர்கள் போன்று ஒரு இடத்தில் / ஒரு ஊரில் இருந்து சிறப்பான கலையை பரப்பி வருபவர்களுக்கு ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கேள்வி
கலையரசி
மேட்டூர்
2011-12ம் ஆண்டு 300பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு இருக்கிறது? அதற்கு முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு ஏற்றுமதி செய்திருக்கிறோம்?

பதில்2009-10ம் ஆண்டில் 178 பில்லியன் டாலர்களும், 2010-11ம் ஆண்டில் 246பில்லியன் டாலர்களும் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த ஆண்டு 300பில்லியன் டாலர்கள் கிட்டே நெருங்க வாய்ப்புக்கள் மிகவும் அதிகம்.
 


சென்ற வார இணையதளம்www.international.gc.ca

கனடாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விரும்புபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய உபயோகமான அரசாங்க இணையதளம். இதில் கனடாவைப் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இது தவிர பல நாடுகளைப் பற்றியும் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன.


தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

Monday, November 7, 2011

சென்ற வர ஏற்றுமதி உலகம் 17

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


சென்ற வார ஏற்றுமதி இறக்குமதி உலகத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடந்துள்ளது என்று பார்ப்போம். பெரிய நிகழ்வு என்று பார்த்தால் ரூபாய் மதிப்பு கீழே விழுந்தது தான். கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு 50க்கும் கீழே சென்று முடிவடைந்தது.

டாலரும், ரூபாயும்
ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் இவை. அதே சமயம் இந்தியா இறக்குமதியையும் அதிகம் சார்ந்துள்ளது. குறிப்பாக தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவை பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் மற்ற பொருட்களின் விலை கூடும் வாய்ப்புக்கள் உள்ளது.


பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதி

பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு விற்பனையை விட ஏற்றுமதி கூடுதல்
கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. பஜாஜ் ஆட்டோவின் த்ரி வீலர், அதாங்க நம்ம ஆட்டோ அதிகம் ஓடுவது இந்தியாவில் தான் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் ஆட்டோக்களை விட அதிக அளவில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, நேபாள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவைகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் ஹமாரா பஜாஜ் என்ற வாசகத்தை பார்க்கும் போது உள்ளம் உண்மையாகவே துடிக்கிறது.


ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை

ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை, அதாவது கிளஸ்டர் முறை மிகுந்த பயனளிக்கும் என்று எக்சிம் பாங்கின் தலைவர் டிசிஏ ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு மாவட்டத்தில் அதிகமாக கிடைக்கும் பொருட்களை வைத்தோ அல்லது அதிகமான தொழில் செய்பவர்களை வைத்தோ ஒருங்கிணைந்து பெரிய அளவில் உற்பத்தியை கூட்டி செய்யும் போது உற்பத்தி செலவுகள் குறையும். அது நமக்கு ஏற்றுமதியில் உலகளவில் மற்ற நாடுகளின் விலையுடன் போட்டி போட இயலும். மேலும் இது போன்ற முயற்சிகளுக்கு அரசாங்க ஆதரவுகளும் உள்ளன என்றார்.

இந்திய பர்மா உறவுகள்இந்திய பர்மா உறவுகள் நூற்றுகணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான பேர்கள் குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவுக்கு சென்று அந்த நாட்டையே வளப்படுத்தி விட்டு நிர்கதியாக எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தார்கள். தற்போது அங்கு சூழ்நிலைகள் சரிவர வந்து கொண்டிருக்கிறது. இந்திய பர்மா உறவுகளும் நன்கு இருக்கிறது. அங்கு விவசாயம், எரிசக்தி ஆகிய துறைகளில் இந்திய முதலீடு செய்ய நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிய வருகிறது.

 டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சிசென்ற வாரம் நடைபெற்ற இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, இந்திய கைவினைப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு சுமார் 900 கோடி அளவு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுத் தந்துள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதியை பெருக்க கட்டாயம் இது போன்ற கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். புதிய ஏற்றுமதியாளர்கள் இது போன்ற கண்காட்சிகள் எங்கு நடந்தாலும் சென்று பார்த்து வரவேண்டும். அப்போது தான் எப்படிப்பட்ட பொருட்கள் தயாரிக்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள், எப்படி ஸ்டால் டிஸ்ப்ளே செய்கிறார்கள் போன்ற ஐடியாக்கள் கிடைக்கும்.

பின்னலாடைகள் ஏற்றுமதி
உலகளவில் பின்னலாடைகள் ஏற்றுமதியில் சீனா தான் முன்னணியில் இருக்கிறது. 53.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டி சர்ட்கள் உற்பத்தியில் உலகளவில் பங்களாதேஷ் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவிற்கு மூன்றாவது இடம் தான். தொழிலாளர்கள் பிரச்சனை, சாயப்பட்டறை பிரச்சனை போன்றவை நம்மை பின்னுக்கு தள்ளி வருகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் பலர் பங்களாதேஷ் சென்று அங்கு தொழிற்சாலைகள் நிறுவி வருகின்றனர்.

பஹாமஸ்  தந்த பயம்
பஹாமஸ்  நாட்டுக்கு ஏற்றுமதிகள் கூடிவருவதால் அது வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர ஒரு வழியா என்று எல்லோரும் பயந்தனர். அதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹாமசுக்கு ஏற்றுமதி 2 பில்லியன் டாலர் தான் இருந்தது. அது சென்ற வருடம் 4 பில்லியன் டாலராக உயர்ந்ததை கண்டு எல்லோரும் பயந்தனர். பின்னர் அது இந்தியாவிலிருந்து ஆயில் ஏற்றுமதி 88 சதவீதம் கூடியுள்ளது என்று கண்டுபிடித்து ஆறுதல் அடைந்தனர். எங்கு ஓவர்  இன்வாசியிங் நடைபெறுகிறதோ என்ற பயம் தான் காரணம்.



கண்ணபிரான்
சேலம்


கேள்வி

சேலத்திலிருந்து ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்கள் என்னென்ன?

பதில்

சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. சேலத்தில் இருந்து காட்டன் துணிகள், கொலுசுகள், எவர்சில்வர் பாத்திரங்கள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் அது சார்ந்த பொருட்கள், மூலிகைகள் போன்றவைகளுக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால், சேலம் ஈரோடில் உள்ளவர்கள் நேரடி ஏற்றுமதியில் ஈடுபடாமல், ஏற்றுமதி செய்பவர்களுக்கு சப்ளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சேலம், ஈரோடு இரு இடங்களிலும் தினமலர் சார்பாக ஏற்றுமதி செய்யலாம் போன்ற கருத்தரங்கள் நடத்தி பலரை ஊக்குவித்தும் இருக்கிறோம்.


இந்த வார இணையதளம்

www.kompass.com

உலகளவிலுள்ள பி டு பி இணையதளம். அதாவது பிசினஸ்  டு பிசினஸ் இணையதளம். உலகத்தின் சிறந்த கம்பெனியால் நடத்தப்படும் இணையதளம். நல்ல பல பயனுள்ள செய்திகளும் அடங்கியுள்ளது. சென்று பாருங்கள். மெம்பராக சேரும் பட்சத்தில் பல நல்ல லீட்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளது.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com.