Sunday, August 7, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 8

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

சென்ற வாரம் ஏற்றுமதி உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன, அவைகளை பார்ப்போம்.

விவசாய ஏற்றுமதி மண்டலங்கள் தேவையா?
விவசாய ஏற்றுமதி தற்போது வருடத்திற்கு 15.6 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது (ஒரு பில்லியன் டாலர் என்பது 4450 கோடி ரூபாய்கள் என்று எடுத்துக் கொள்ளவும்). பல விவசாய பொருட்களில் இந்திய அளவில் தன்னிறைவு அடைந்தது மட்டுமல்லாமல், உலகளவிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறோம். அதாவது உலகளவில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் முதலிடமும், முந்திரிக்கொட்டை, முட்டைகோஸ், காட்டன், பூண்டு, ஏலக்காய், வெங்காயம், கரும்பு, தக்காளி, தேங்காய், நிலக்கடலை, டீ, பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவை உற்பத்தியில் உலகளவில் சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால், உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1.6 சதவீதம் தான். பொருட்களின் அளவில் 222ம் இடத்திலும், பணமதிப்பில் 237ம் இடத்திலும் இருக்கிறோம், நம்ப முடிகிறதா?  இதை கூட்டுவதற்கு விவசாய விளைபொருள் மண்டலங்களும், குளிர்சாதன சேமிப்பு கிடங்குகளும் தான் உதவும்.

பொருட்கள் ஏற்றுமதி, சர்வீசஸ்  ஏற்றுமதி
பொருட்கள் ஏற்றுமதியில் கடந்த வருடத்தில் இந்தியா உலகளவில் 20 வது இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய வருடம் 22வது இடத்தில் இருந்தது. உலகளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளவர்கள் சைனா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆகும்.

சர்வீசஸ்  ஏற்றுமதியில் சென்ற வருடம் சுமார் 110 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்து உலகளவில் 10வது இடத்தில் இருக்கிறது.

ஏற்றுமதியில் என்னென்ன முக்கியமான டாக்குமெண்ட்கள்
ஏற்றுமதியில் முக்கியமான டாக்குமெண்ட்கள் என்று பார்க்கபோனால் இன்வாய்ஸ், பில் ஆப் லேடிங் அல்லது ஏர்வே பில் ஆகியவை மிகவும் முக்கியமான டாக்குமெண்ட்களாக கருதப்படும். மற்ற டாக்குமெண்ட்கள் தேவையெனில் கொடுத்தால் போதும். அவை, சர்ட்டிபிகேட் ஆப் ஆர்ஜின், இன்ஸபெக்ஷன் சர்ட்டிபிகேட், வெயிட் சர்டிபிகேட், பில் ஆப் எக்சேஞ்ச், இன்சூரன்ஸ்  டாக்குமெண்ட் போன்றவை ஆகும்.

இறக்குமதி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக இறக்குமதி செய்யும் போது பாரினில் இருந்து இறக்குமதி செய்கிறோம், நமக்கு சரக்கு விற்பவர் நல்லவராக தான் இருப்பார் என்ற எண்ணத்திலேயே பலர் இறக்குமதி செய்வதால்
பல சமயத்தில் இன்னல்களில் மட்டிகொள்கிறோம். இதை தவிர்க்க வெளிநாட்டு ஏற்றுமதியாளர் பற்றியும் நன்னம்பிக்கை அறிக்கை எடுத்து பார்த்து அவர் நல்லவர் என்று தெரிந்துகொண்ட பிறகு  இறக்குமதி செய்வதே நல்லது.


கோழி முதலா, முட்டை முதலா?
உலகளவில் கோழி இறைச்சி உற்பத்தியில் இந்தியா 4வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி 2.9 மில்லியன் டன்கள் ஆகும். அமெரிக்காவும், சைனாவும் தான் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. அவர்களின் உற்பத்தி எவ்வளவு தெரியுமா? முறையே 24 மில்லியன் டன்கள், 12.3 மில்லியன் டன்களாகும். அது போல முட்டை உற்பத்தியில் நாம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளோம். முதல் இரண்டு இடங்களும் அமெரிக்காவிற்கு, சைனாவிற்கும் தான். இந்திய முட்டை உற்பத்தி 57 பில்லியன் (மில்லியன் இல்லை) ஆகும்.

இவ்வளவு உற்பத்தி செய்தாலும், இந்த துறையில் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். அதாவது, வருடத்திற்கு 500 கோடி ரூபாய் அளவிற்கு தான் ஏற்றுமதி செய்கிறோம்.
உணவுப் பொருட்கள் கண்காட்சி
ஆகார் என்ற உணவுப் பொருட்கள் வர்த்தக வாய்ப்புக்கள், அது சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் என்ற கண்காட்சி சென்னையில் ஆகஸ்ட் 25 முதல் 27 வரை   நடக்கவுள்ளது. ஐ.டி.பி.ஒ. என்ற அரசாங்க நிறுவனம் நடத்தும் இந்த கண்காட்சி சென்னை டிரேட் சென்டரில் நடக்கவுள்ளது.

                                               இந்த வார இணையதளம்
http://www.imex.com/
உலகளவில் இன்டர்நெட் மூலமாக வர்த்தகம் வளர்ந்து வருகிறது. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள உதவும் இணையத்தளம். பல நல்ல தகவல்களை கொண்டுள்ளது. 1994ல் ஆரம்பிக்கப்பட்ட இணையதளம்.


                                                கேள்விக்கு என்ன பதில்?
சிவா சீனிவாசன்

கேள்வி
ஐ.ஈ.சி. கோடு நிறுவனத்தின் பெயரில் தான் எடுக்க வேண்டுமா? தனிநபர் பெயரில் எடுக்க முடியாதா?

பதில்
தனிநபர் பெயரில் எடுக்க முடியும் என்றாலும், வெளிநாட்டிலிருந்து உங்களிடம் வர்த்தகம் செய்ய விரும்புபவர் (இறக்குமதி செய்ய விரும்புபவர்) இவரிடம் ஒரு நிறுவனமே இல்லையே, இவர் எப்படி நமக்கு சரக்குகளை அனுப்பி தருவார் என்ற சந்தேகம் வந்து விடும். மேலும், வங்கிகள் தனிநபர் கணக்கில் அதாவது சேவிங்ஸ்  அக்கவுண்டில் வியாபார வரவு செலவுகளை நடத்த விடமாட்டார்கள். ஆதலால் நிறுவனம் பெயரில் எடுப்பதே நல்லது.
உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் எங்களுக்கு எழுதுங்கள். எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment